எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினையை ஐசிசி நேற்று வெளியிட்டது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலிய அணி சாம்பியன் ஆனது.
இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகின்ற ஜூன் மாதம் 4 முதல் 30 வரை டி20 ஆண்கள் உலகக் கோப்பை தொடரும், வங்கதேசத்தில் டி20 பெண்கள் உலகக் கோப்பை தொடரும் நடைபெறவுள்ளன. இந்த தொடர்களுக்கான இலச்சினையை ஐசிசி நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும், டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்க உள்ளது. தென்ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றது.இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா சென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் உள்ளிட்ட 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணி வீரர்கள் சென்றனர். டெஸ்ட் அணி வீரர்கள் பின்னர் தனியாக சென்று அணியினருடன் இணைவார்கள்.
கவுதம் காம்பீர் மீது குற்றச்சாட்டு
ஓய்வு பெற்ற முன்னாள் நட்சத்திர வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கவுதம் காம்பீர் தலைமையிலான இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி குவாலிபயர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் காம்பீர் ஆரம்பத்திலேயே குஜராத் அணியின் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு எதிராக பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடித்து அதிரடியாக விளையாடினார். அதனால் இருவருக்கும் இடையே களத்தில் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்ட நிலையில் நடுவர்களும் சக வீரர்களும் சமாதானம் செய்தனர். இந்நிலையில் அந்த சமயத்தில் மிகவும் மோசமான வார்த்தைகளால் கவுதம் கம்பீர் தம்மை திட்டியதாக அந்த ஆட்டம் முடிந்தவுடன் தனது வலைதள பக்கத்தில் ஸ்ரீசாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கோலியால் முடியாது: பிரைன் லாரா
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3 வடிவிலான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் தெண்டுல்கரின் சாதனையை உடைத்துள்ள அவர் நடைபெற்று முடிந்த 2023 உலகக்கோப்பையில் 765 ரன்கள் விளாசி ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற மற்றுமொரு சாதனையை உடைத்தார். அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை (49) முந்தி 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார்.
இந்நிலையில் சச்சினின் 100 சதங்கள் சாதனையை உடைக்க வாய்ப்பிருந்தாலும் அதை விராட் கோலி சாதித்து காட்டுவது மிகவும் கடினம் என்று பிரைன் லாரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "விராட் கோலி தற்போது 35 வயது நிரம்பியுள்ளார். 80 சதங்கள் அடித்துள்ள அவருக்கு இன்னும் 20 தேவைப்படுகிறது. ஒருவேளை ஒவ்வொரு வருடமும் 5 சதங்கள் அடித்தால் கூட சச்சின் சாதனையை சமன் செய்வதற்கு அவருக்கு இன்னும் 4 வருடங்கள் தேவைப்படும். அதனால் இந்த சாதனையை முறியடிப்பது கொஞ்சம் கடினம்தான். ஏனெனில் 20 சதங்கள் அடிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான் வீரருக்கு ஆதரவு
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. கேப்டன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், வேகப்பந்து வீச்சாளர் என அனைத்து துறைகளிலும் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியிலிருந்து வெளியேறியது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. அவருக்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார்? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் ஹர்டிக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்ப ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஓமர்சாயை குஜராத் அணி வாங்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யாவை இழந்தது மிகப்பெரிய சரிவு . இருப்பினும் அவரது இடத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஆல்ரவுண்டரான அஸ்மத்துல்லா ஓமர்சாய் சரியான வீரராக இருப்பார் என்று நான் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் உப்மா1 min 13 sec ago |
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்2 days 23 hours ago |
கடாய் பன்னீர்1 week 3 hours ago |
-
டி-20 தொடர் இன்று ஆரம்பம்: இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் மோதல்
26 Jul 2024பல்லகெலே : டி-20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக உயர்வு: கிடுகிடுவென அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
26 Jul 2024மேட்டூர், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
26 Jul 2024கொழும்பு : ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
-
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் : ஷூப்மன் கில் தகவல்
26 Jul 2024மும்பை : அடுத்து வரும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய டி-20 அணியின் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Jul 2024சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
26 Jul 2024திருப்பத்தூர் : வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது என்று உறுதிப
-
பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் : எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு
26 Jul 2024டெல்லி : பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
-
அரசுப்பள்ளிகளில் உள்ள சாதி பெயரை நீக்குங்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
26 Jul 2024சென்னை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அதை நீக்குங்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
-
மசோதாக்களை தாமதப்படுத்துவதாக வழக்கு: கேரளம், மேற்குவங்க மாநில கவர்னர்களுக்கு நோட்டீஸ்
26 Jul 2024புதுடெல்லி : மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்ற தாமதம் செய்வதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கேரளம், மேற்குவங்க கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
காம்பீர் குறித்து சூர்யகுமார்
26 Jul 2024இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கையுடன் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-07-2024.
27 Jul 2024 -
ரூ.257 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் அடிக்கல்
26 Jul 2024புதுடெல்லி : டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக
-
பாரிஸ் ஒலிம்பிக் 2024 அமெரிக்கா, ஸ்பெயின் வெற்றி
26 Jul 2024பாரிஸ் ஒலிம்பிக்கின் பெண்கள் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா, ஸ்பெயின் அணிகள் வெற்றியைப் பதிவு செய்தன.
-
மக்களுடன் முதல்வர் திட்டம்: 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
27 Jul 2024சென்னை : மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாவது கட்ட செயல்பாடுகள் குறித்து 5 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
டொனால்டு டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு
27 Jul 2024வாஷிங்டன் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, நேற்று டொனால்டு டிரம்பை அவரது எஸ்டேட்டில் வைத்து சந்தித்து பேசினார்.
-
பாகிஸ்தானில் அனைத்து கட்சி தலைவர்களை விடுதலை செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்
27 Jul 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இம்ரான்கான் உள்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
-
சுற்றுலா செல்ல ஆபத்தான நகரங்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்த கராச்சி
27 Jul 2024வாஷிங்டன் : சுற்றுலா செல்வதற்கு ஆபத்தான நகரங்கள் குறித்து போர்ப்ஸ் இதழ் 3 நகரங்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி: அதிகாரபூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்ட கமலா ஹாரிஸ்
27 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ளார்.
-
மத்திய பட்ஜெட்டில் புறக்கணிப்பு: தமிழகம் முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
27 Jul 2024சென்னை : மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரயில் 31-ம் தேதி முதல் இயக்கம்
27 Jul 2024திருவனந்தபுரம் : கேரளாவுக்கு 3-வது வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 31-ம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது.
-
விவாகரத்து கிடைத்ததை கொண்டாடிய பாக். பெண் : வலைதளங்களில் வீடியோ வைரல்
27 Jul 2024நியூயார்க் : விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார்.
-
பேராசிரியர்கள் பணியில் முறைகேடு: கவர்னர் ரவியிடம் விளக்கம் சமர்ப்பித்த அண்ணா பல்கலை.
27 Jul 2024சென்னை : பேராசிரியர்கள் முறைகேடாக பணிபுரிந்தது தொடர்பான விளக்கங்களை கவர்னர் ஆர்.என்.ரவியிடம், அண்ணா பல்கலைக் கழகம் சமர்ப்பித்துள்ளது.
-
ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்
27 Jul 2024சனா : ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
-
மைக் அணைக்கப்பட்டதாக மம்தா சொல்வது பொய்: நிர்மலா சீதாராமன் மறுப்பு
27 Jul 2024புதுடெல்லி : நிதி ஆயோக் கூட்டத்தில் தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது உண்மை அல்ல' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம
-
ஆம்ஸ்ட்ராங் வழக்கு: கைதான வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை : பார் கவுன்சில் திட்டவட்டம்
27 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.