முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிரட்டல் புகார்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் கைது

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      உலகம்
Jail-1

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பேகர்ஸ்பீல்ட் நகர கவுன்சில் கூட்டத்தில், கொலை செய்து விடுவோம் என்ற மிரட்டல் விடுத்த புகாரில், இந்திய வம்சாளியைச் சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பேகர்ஸ்பீல்ட் நகர கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர் ஆக கருதப்படும் ரித்தி படேல் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பேசினார். அப்போது அவர், பாலஸ்தீனம் ஹமாஸ் போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை எனக்குற்றம்சாட்டி பேசிய ரித்தி படேல், நவராத்திரி பண்டிகை குறித்து விமர்சித்ததுடன், மஹாத்மா காந்தி, இயேசு நாதர் ஆகியோரை குறிப்பிட்டு பேசி கடைசியில், அனைவரையும் கொன்றுவிடுவோம் எனப் பேசினார்.

இதனையடுத்து நகர மேயர் கரேன் கோஹ், அவருக்கு பதிலளித்து பேசியதுடன், மிரட்டல் விடுத்ததற்காக நடவடிக்கை எடுக்கும்படி அங்கிருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ரித்தி படேலை கைது செய்த போலீசார், மிரட்டல் விடுத்தது, நகர அதிகாரிகள் மீது பயங்கரவாத அச்சுறுத்தல் விடுவது உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து