முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      இந்தியா
Kejrival 2024-01-05

Source: provided

புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தற்போது கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திஹார் சிறையில் இருந்தபடி டெல்லியை ஆட்சி செய்ய முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க கோரி, டெல்லி ஐகோர்ட்டில், ஆத்ஆத்மி கட்சி சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் பிரசாத் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், ஊடகங்களில் டெல்லியில் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்துவது போன்ற செய்திகள் வெளியாவதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி காணொலி வாயிலாக அமைச்சரவை கூட்டத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். சிறையில் இருந்து ஆட்சி செய்ய முதல்வருக்கோ, பிரதமருக்கோ அரசியல் அமைப்பு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து