எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Michael-Hussey 2024-05-26](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/05/26/Michael-Hussey_2024-05-26.jpg?itok=zE1jrs0P)
Source: provided
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தற்போது வகிக்கும் பயிற்சியாளர் பொறுப்பு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அதன்மூலம், பயிற்சியாளர் மற்றும் குடும்ப வாழ்க்கை என இரண்டையும் கவனிக்க சரிவர நேரம் கிடைக்கிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க எனக்கு ஆர்வமில்லை என்றார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களான ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டின் லாங்கர் இருவரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டாததது குறிப்பிடத்தக்கது.
________________________________________________________
கௌதம் காம்பீருக்கு காசோலை
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் கௌதம் காம்பீருக்கு, அந்த அணியின் இணை உரிமையாளர் ஷாருக்கான், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியின் ஆலோசகராக இருக்குமாறு வெற்றுக் காசோலை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் காம்பீர் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும், காம்பீருக்கும் ஆர்வம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அவர் 100 சதவீதம் உத்தரவாதம் இருந்தால் மட்டுமே விண்ணப்பிப்பதாகவும், இல்லையெனில் விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், கேகேஆர் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் கௌதம் காம்பீரை கேகேஆர் அணியின் ஆலோசகராக வைத்திருக்க விரும்புவதாக கூறியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணியில் ஆலோசகராக இருக்க காம்பீருக்கு ஷாருக்கான் ஒரு வெற்றுக் காசோலை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட காம்பீர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும், கேகேஆரை விட்டு வெளியேறுவது குறித்து ஷாருக்கானுடன், காம்பீர் ஆலோசனை மேற்கொண்ட பிறகே இறுதியான முடிவு தெரிய வரும்.
________________________________________________________
இந்திய அணி குறித்து சைமன்
20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த உலகக்கோப்பை முடிந்ததும் மூத்த வீரர்களுக்கு பதிலாக டி20 அணியில் ருதுராஜ் போன்ற இளம் வீரர்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக அபிஷேக் சர்மா போன்ற ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் அதிகமாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
________________________________________________________
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவை சேர்ந்த வாங் ஜி யி உடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து அடுத்த இரு செட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த ஆட்டத்தில் வாங் ஜி 16 - 21, 21-5 மற்றும் 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
________________________________________________________
ஐ.பி.எல். சிறந்தது: வாகன்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முன்னதாக இந்தத் தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பாகவே வெளியேறினார்கள். குறிப்பாக ஜோஸ் பட்லர், மொயின் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜேக்ஸ் போன்ற வீரர்கள் வெளியேறியது ராஜஸ்தான், சென்னை, பெங்களூரு ஆகிய அணிகளின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் ஒன்றும் முழுமையாக விளையாடுங்கள் இல்லையெனில் ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என்று இர்பான் பதான் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு நிகரான தரம் பாகிஸ்தான் அணியிடம் இல்லை என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். எனவே பில் சால்ட் போன்ற வீரர்களை ஐபிஎல் தொடரில் விளையாட இங்கிலாந்து வாரியம் அனுமதித்திருக்க வேண்டும் என்று அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "தங்களது அனைத்து வீரர்களையும் திரும்ப அழைத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தவறு செய்துவிட்டது என்று நினைக்கிறேன். வில் ஜேக்ஸ், பில் சால்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் பிளே ஆப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். அங்கே அழுத்தம், அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம், எதிர்பார்ப்பு ஆகியவை இருக்கும். எனவே அங்கு விளையாடுவது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடுவதை விட சிறந்ததாக இருக்கும் என்று நான் வாதிடுவேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 2 days 48 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 4 days 20 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 2 days ago |
-
பிரதமர் மோடியின் சென்னை வருகை திடீர் ஒத்திவைப்பு : ரயில்வே தரப்பில் தகவல்
16 Jun 2024சென்னை : சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு வரும் 20-ம் தேதி வரவிருந்த நிலையில், அவரின்
-
சனிக்கிழமை அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
-
அனைத்து தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து
16 Jun 2024சென்னை : தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை என்று தந்தையர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வ
-
குறுவை சாகுபடி திட்டத்தால் விவசாயிகளுக்கு பயனில்லை : ஓ.பன்னீர்செல்வம் கருத்து
16 Jun 2024சென்னை : டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்பதுதான் உண்மை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெ
-
இன்று பக்ரீத் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து
16 Jun 2024சென்னை : பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
கோலி குறித்து பயிற்சியாளர்
16 Jun 2024விராட் கோலியின் ஃபார்ம் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
-
உலகில் சிறந்த 100 தொழில் நுட்ப நிறுவனங்கள்: 3 இந்திய நிறுவனங்கள் இடம்பிடிப்பு
16 Jun 2024புதுடில்லி; உலகளவிலான 100 தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளது.
-
ஆனி மாத பவுர்ணமி: தி.மலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 Jun 2024தி.மலை : திருவண்ணாமலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கடைசி ஓவரில் திரில் வெற்றி: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஆஸி.,
16 Jun 2024நியூயார்க்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
-
தந்தையர் தினத்தையொட்டி நடிகை நயன்தாராவின் வீடியோ பதிவு வைரல்
16 Jun 2024சென்னை : தந்தையர் தினத்தையொட்டி கணவர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகை நயன்தாரா வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டம்: நாளொன்றுக்கு 400 பேர் வரை செல்லலாம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
16 Jun 2024சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம
-
செல்போன் மூலம் இ.வி.எம்.களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை மும்பை தேர்தல் அதிகாரி விளக்கம்
16 Jun 2024புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை என மும்பை தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கூட்டுறவு நிறுவனங்களில் விவசாய எந்திரங்கள் வாடகைக்கு கிடைக்கும் : உழவர் செயலி மூலம் பதிவு செய்யலாம்: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
16 Jun 2024சென்னை : கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக விவசாய எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரப்படுவதாக அமைச்சர் கேஆர்.
-
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
16 Jun 2024நெல்லை: திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு : பள்ளி கல்வித்துறை வடிவமைப்பு
16 Jun 2024சென்னை : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வழிகாட்டி கையேட்டை பள்ளி கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
-
சீருடை மற்றும் பேட்ஜ் அணிய ஓட்டுநர், நடத்துனர்களுக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு
16 Jun 2024சென்னை : ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
இன்று பக்ரீத் பண்டிகை: புதுவை முதல்வர் வாழ்த்து
16 Jun 2024புதுச்சேரி : நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி புதுவை முதல்வர் ரங்கசாமி இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் மதுபான ஆலையில் இருந்து தீ காயங்களுடன் 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
16 Jun 2024போபால் : மத்தியப்பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் உள்ள மதுபான தொழிற்சாலையில் இருந்து 39 சிறுவர்கள் மற்றும் 19 சிறுமிகள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா
-
தொடர் விடுமுறை: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
16 Jun 2024திருச்செந்தூர் : தொடர் விடுமுறை என்பதால் நேற்று திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
-
மழையால் போட்டி ரத்து: இந்தியா, கனடாவுக்கு தலா ஒரு புள்ளிகள்
16 Jun 2024புளோரிடா: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – கனடா அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
-
தலைநகரில் தண்ணீருக்காக சண்டை 3 பேர் காயம்
16 Jun 2024புதுடெல்லி: புதுடெல்லியில் காணப்படும் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தால் சண்டை நிலவியது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
-
புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-முதல் அமலுக்கு வரும் : மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்
16 Jun 2024புதுடெல்லி : புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்
-
அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
16 Jun 2024சென்னை : அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் என்று முதல்வர் மு.க.
-
அ.தி.மு.க.வை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பு செய்த தே.மு.தி.க. : ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதாக விளக்கம்
16 Jun 2024சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க.வும் அறிவித்துள்ளது.