எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கிங்ஸ்டவுன் : நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப் 1 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது ஆப்கானிஸ்தான். இந்தப் போட்டியில் 21 ரன்களில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.
148 ரன்கள்...
மேற்கு இந்தியத் தீவுகளின் கிங்ஸ்டவுனில் இந்திய நேரப்படி நேற்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீசியது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தனர். ரஹ்மானுல்லா 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அஸ்மத்துல்லா, இப்ராஹிம் ஸத்ரான், ரஷித், கரீம் ஜனத், குல்புதீன் நைப் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதில் இப்ராஹிம் ஸத்ரான் 51 ரன்கள் எடுத்திருந்தார். ஆஸி. சார்பில் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவர் கடந்த போட்டியிலும் விக்கெட் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தடுமாறிய ஆஸி...
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. நவீன் உல் ஹக் வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், ரன் ஏதும் எடுக்காமல் போல்ட் ஆனார். மூன்றாவது ஓவரில் ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷை அவுட் செய்தார் நவீன். வார்னர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். நபி அவரை வெளியேற்றினார். பவர் பிளே ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸி.
127 ரன்களுக்கு...
அந்த அணிக்கு மேக்ஸ்வெல் ஆட்டம் மட்டுமே ஆறுதல் தந்தது. 41 பந்துகளில் அவர் 59 ரன்கள் எடுத்தார். ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேக்ஸ்வெல், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஆஷ்டன் ஏகர், ஸாம்பா ஆகியோர் ஆட்டமிழந்தனர். 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸி. ஆப்கானிஸ்தான் சார்பில் குல்புதீன் நைப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நவீன் 3, அஸ்மதுல்லா, நபி, ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை குல்புதீன் நைப் வென்றார். இந்தப் போட்டியில் ஆப்கன் அணி பீல்டிங் செயல்பாடு அபாரமாக இருந்தது. அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் வங்கதேசத்துடன் விளையாடுகிறது.
கடவுளுக்கு நன்றி - நயீப்
ஆட்ட நாயகன் குல்பதீன் நயீப் கூறியதாவது., இந்த வெற்றிக்காகவே நீண்ட காலம் காத்திருந்தோம். இது எனக்கு மட்டும் சிறந்த தருணம் அல்ல, என் மக்களுக்கு என் நாட்டுக்கும் சிறந்த தருணம். எங்கள் கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெரிய சாதனை. சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்களை ஆதரிக்கும் எங்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு நன்றி. கடந்த 2 மாதங்களாக கடினமாக உழைத்தோம். அதன் பலன் இப்போது உங்கள் கண் முன்னால். ஒருவழியாக, கடைசியில் ஆஸ்திரேலியாவையும் ஜெயித்து விட்டோம். கடவுளுக்கு நன்றி.
எங்கள் கிரிக்கெட் பெரிய சாதனைகளை நிகழ்த்தியதில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிறைய இலக்குகளை எட்டியுள்ளோம். இது பெரிய சாதனை. நாங்கள் முதல் ரவுண்ட்டில் நியூஸிலாந்தை வீழ்த்தினோம். பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதல்ல. அவர்கள் உலக சாம்பியன் அணி. எங்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வெற்றி பெரிய சாதனை. இந்த வெற்றியை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றுவோம். எங்கள் பயணம் இங்கு ஆரம்பிக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.


