எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் பா.ம.க. பொதுக்குழு நடைபெற்றது. இதில் ராமதாஸ் தரப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு அன்புமணியை கடும் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், பொதுக்குழுவின் இறுதியில் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
பொதுக்குழு, செயற்குழுவில் 27 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். பொதுவாக, டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில், அந்த ஆண்டுக்கு விடைகொடுத்து, வரும் ஆண்டை வரவேற்போம். இங்கே பேசியவர்கள், பொதுவாக நிர்வாகக் குழுவில், ஒரு கட்சியை எப்படி நிர்வாகம் செய்வது என்று பேசிவருகிறோம். இன்றைக்கு நிர்வாக குழுவில் பேசப்பட்ட செய்தியை உள்வாங்கி செயற்குழுவில் பேசப்பட்டது. அனைவரும் சிறப்பாக பேசினீர்கள். வரவேற்கத்தக்க கருத்துகள். மிகப்பெரிய வெற்றியை அடைய அது செயல்படும்.
ஒரு கட்சியில் அதிக அதிகாரம் கொண்ட குழு பொதுக்குழு. அதை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், எதைப் பேசி எதை விடுவது என்று எனக்குள்ளே ஒரு குழப்பம். எனக்கு இருக்கும் ஆதங்கத்தை கொட்டி, உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு மணி நேரம் தேவை. அந்த வகையில், பொதுக்குழுவில் அதிகம் எதிர்பார்த்து வந்தது, எந்தக் கூட்டணி என்பது. எனக்கு அதிகாரம் கொடுத்துவிட்டீர்கள். எப்போது கூட்டணியை அறிவிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல முடிவெடுப்பேன். அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
10.5 சதவீத இடஒதுக்கீட்டை நாம் நிச்சயம் பெறுவோம். அன்புமணி பின்னால் 5 சதவீத மக்கள் கூட இல்லை. செலவு செய்து கூட்டத்தை கூட்டி பிரமாண்டத்தை காட்டுகிறார். இந்த தேர்தல் அவருக்கு பதில் தரும். இந்தத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைப்பேன். அது வெற்றியை தரும். என் பின்னால் வரும் மக்கள் எப்போதும் என்னை கைவிட்டதில்லை.
நீங்கள் வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அயராது பாடுபடவேண்டும். நான் கடந்த 10 நாட்களாக மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசி, யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று கருத்து கேட்டேன். மிகப்பெரிய வெற்றி கூட்டணியை அமைப்பேன். அது மிகப்பெரிய வெற்றியை தரும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏன் என்றால், நான் நினைப்பது நிச்சயமாக நடக்கும். அப்படிப்பட்ட சூழல் வந்துள்ளது. அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். பாட்டாளி சொந்தங்களை நினைக்கும்போது தூக்கம் வருகிறது. புத்துணர்ச்சி பிறக்கிறது. மகிழ்ச்சி வெள்ளம் கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –12-01-2026
12 Jan 2026 -
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.


