எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கிரேட் பிரிட்டன் அணிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட் முறையில் நடந்த ஆட்டத்தில் 4 - 2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஹாக்கி அணி காலிறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியா - கிரேட் பிரிட்டன் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப்போட்டி நேற்று (ஆக. 4) நடைபெற்றது. முதல் பாதி ஆட்ட முடிவு வரையில், இரு அணிகளும் எந்தவொரு கோலும் அடிக்க முடியாத வகையில் ஆட்டம் இருந்தது. பின்னர் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். கிரேட் பிரிட்டனின் மோர்ட்டன் ஒரு கோல் அடித்து அதனை சமன் செய்தார்.
நான்காவது காலிறுதி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பெனால்டி ஷுட் அவுட் முறையில் இந்திய அணி 4 - 2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்திய அணியின் கோல் கீப்பரான பி.ஆர்.ஸ்ரீஜேஸ், கிரேட் பிரிட்டனின் 11 கோல்களைத் தடுத்து இன்றைய ஆட்டத்தின் நட்சத்திர வீரரானார். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அல்லது அர்ஜென்டினா அணியை இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது. கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________
தங்கம் வென்றார் ஜோகோவிச்
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். விம்பிள்டன் சாம்பியன் அல்கராஸுடன் மோதிய இறுதிப் போட்டியில் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று அசத்தினார். இதுதான் ஜோகோவிச்சின் முதல் தங்கம். மேலும் ஆடவர் டென்னிஸ் ஒலிம்பிக்கில் வயதான வீரர் (37) ஒருவர் தங்கம் பெறுவதும் இதுவே முதல்முறை.
தனது வெற்றியில் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் தங்கத்தையும் சேர்த்துள்ளார். 2008இல் வெண்கலம் வென்ற ஜோகோவிச்சுக்கு இது 2ஆவது பதக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. விம்பிள்டனில் இரண்டு முறை அலகராஸுடம் தோல்வியுற்ற ஜோகோவிச் இதில் வெற்றி பெற்றது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
____________________________________________________________________
மனு பாக்கருக்கு கவுரவம்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ள நிலையில் 9-வது நாளான மயிரிழையில் ஒரு பதக்கம் நழுவிப்போனது. துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிசுற்று நடந்தது. தகுதி சுற்றின் மூலம் தேர்வான இந்தியாவின் மனு பாக்கர் உள்பட 8 வீராங்கனைகள் பதக்கத்துக்கு மோதினர். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் பதக்கம் வென்று இருந்த அரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர் இந்த பிரிவிலும் பதக்கம் வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
முடிவில் மனு பாக்கரும், ஹங்கேரியின் வெரோனிகா மாஜேரும் தலா 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் சமனில் இருந்தனர். அவர்களில் யாரை வெளியேற்றுவது என்பதை முடிவு செய்ய தனியாக சூட்-ஆப் சுற்று நடத்தப்பட்டது. இதில் இருவருக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. மனு பாக்கர் தனது வாய்ப்பில் 3 புள்ளி எடுத்தார். ஆனால் வெரோனிகா 4 புள்ளி எடுத்து டாப்-3 இடத்திற்குள் நுழைந்தார். மனு பாக்கர் 28 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார். 22 வயதான மனு பாக்கர் இந்த போட்டியிலும் பதக்கத்தை வென்று இருந்தால் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 3 பதக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்தியர் என்ற புதிய சரித்திரத்தை படைத்து இருப்பார்.
போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், "இறுதிப்போட்டியில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் அது போதுமானதாக இல்லை. இரண்டு பதக்கம் வென்றது மகிழ்ச்சி தான். ஆனால் தற்போது இந்த பந்தயத்தில் 4-வது இடத்தை பிடித்தது சிறந்த நிலை இல்லை. பாரீஸ் ஒலிம்பிக்கில் எனக்குரிய போட்டிகள் முடிந்து விட்டன. என்னுடன் பணியாற்றிய பயிற்சி குழுவினர், உதவியாளர்கள் மற்றும் எனக்கு ஆதரவாக இருந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அனேகமாக இதை விட சிறப்பாக முடிப்பேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்ட போது, 'இது ஒரு வாழ்நாள் கவுரவமாகும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்' என்று மனு பாக்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
____________________________________________________________________
அரையிறுதியில் லக்சயா தோல்வி
பாரிஸ் ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்தியாவின் லக்சபா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். வெண்கல பதக்கத்திற்கானே போட்டியில் அவர் விளையாட உள்ளார். அரையிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான விக்டர் அக்செல்சன்னை எதிர் கொண்ட லக்சயா சென் போராடி தோல்வி அடைந்தார். இன்று ( ஆக.,05) வெண்கல பதக்கத்திற்கு நடக்கும் போட்டியில் லக்சயா சென், மலேஷியாவின் லீ ஜி ஜியா என்ற வீரரை எதிர்கொள்கிறார்.
____________________________________________________________________
காலிறுதியில் லவ்லினா தோல்வி
ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்வினா காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். கடந்த ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லவ்லினா இம்முறையும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று (ஆக.,04) நடந்த காலிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீனாவின் லி குயானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் கடுமையாக போராடி தோல்வி அடைந்தார். லி குயான் 4- 1 என்ற புள்ளிக்கணக்கில் லவ்லினாவை வீழ்த்தினார்.
____________________________________________________________________
தடை தாண்டும் ஓட்டம்: பாருல் தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பாருல் செளத்ரி தோல்வி அடைந்தார். 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 3000 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நேற்று (ஆக. 4) நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பாருல் செளத்ரி பங்கேற்றார். பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தோல்வி அடைந்ததால், தடை தாண்டும் ஓட்டத்தில் பாருல் மீது நம்பிக்கை ஏற்பட்டது.
அதன்படி, தடை தாண்டும் ஓட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்மூலம் 3 மீட்டரை 9:23.39 விநாடிகளில் கடந்தார். இந்தத் தொடரில் இது அவரின் சிறப்பான ஆட்டமாகும். எனினும் பட்டியலில் அவர் 8வது இடத்தை மட்டுமே பிடித்தார். கென்யாவின் பேட்ரிஸ் சேப்கோயேச் 9:13.56 விநாடிகளில் கடந்து முதலிடத்தைப் பிடித்தார். முதல் 5 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் தகுதி பெற்றவர்கள் என்பதால், பாருல் செளத்ரி ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார்.
____________________________________________________________________
பீச் வாலிபாலால் விவாதம்
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடைபெற்ற பெண்கள் பீச் வாலிபால் ஆட்டத்தில் ஸ்பெயின் - எகிப்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் அணிந்திருந்த உடை சமூக வலைதளத்தில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் வீராங்கனைகள் பிகினி உடை அணிந்து போட்டியில் களமிறங்கிய நிலையில், எகிப்து வீராங்கனைகள் ஹிஜாப் அணிந்து போட்டியில் பங்கேற்றனர். இது சமூக வலைதளங்களில் காரசார விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
சென்னை சட்டம் - ஒழுங்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை
17 May 2025சென்னை : சென்னையில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார்.
-
ஏமன் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
17 May 2025சனா, ஏமன் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
-
இந்திய தாக்குதலை முதன்முறையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
17 May 2025இஸ்லாமாபாத், ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெள
-
அரபிக்கடல் பகுதியில் மே 22ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
17 May 2025சென்னை, அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
-
பள்ளி புத்தகம் கொண்டு வரவேண்டாம்: மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கேரளா அரசு
17 May 2025கேரளா : கேரளாவில் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை என்று அந்த மாநில அரசு அறிவிததுள்ளது.
-
காங்கிரஸ் பரிந்துரை நிராகரிப்பு: சசி தரூரை தேர்வு செய்த மத்திய அரசு
17 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்.பி.களைத் தவிர்த்து, மத்திய அரசு சசி
-
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 1.8 லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை
17 May 2025சென்னை, அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்
17 May 2025ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
17 May 2025பெங்களூரு, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2025
17 May 2025 -
நாட்டின் பிரதிநிதியாக குழுவை வழிநடத்துவதில் பெருமை : தி.மு.க. எம்.பி. கனிமொழி
17 May 2025சென்னை : நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர் - நடத்துநர் பணியிடை நீக்கம்
17 May 2025சென்னை : சென்னை மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
-
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வழிபாடு
17 May 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (மே 17) நடைபெற்றது.
-
வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி
17 May 2025சண்டிகர் : வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
-
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி
17 May 2025லண்டன் : இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு
17 May 2025திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாதம் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டது.
-
காஸாவில் 2 நாட்களில் மட்டும் 300 பேர் பலி
17 May 2025காஸா : காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து பலி
17 May 2025காத்மண்டு : இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
-
ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
17 May 2025புவனேஸ்வர் : ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 9 பேர் பலி
17 May 2025ரஷ்யா : உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாணவர்களின் மொழித்திறன்களை மேம்படுத்த 'லெவல் அப்' திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
17 May 2025சென்னை, மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து
17 May 2025சென்னை, ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “
-
ஜூன் 14-ல் வி.சி.க. பேரணி
17 May 2025திருச்சி : திருச்சியில் வி.சி.க. சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது.
-
8 மாதங்களில் 42 கி. எடையை குறைத்த நடிகர் அஜித்குமார்
17 May 2025சென்னை : நடிகர் அஜித்குமார் 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
-
ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க ஹஸ்தங்கள் காணிக்கை
17 May 2025திருமலை : திருப்பதி ஏழுமலையானுக்கு 5 கிலோ தங்க ஹஸ்தங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டது.