முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் அன்னையை பார்க்க முடியாத அளவுக்கு மனம் உடைந்து விட்டது : ஷேக் ஹசீனா மகள் உருக்கம்

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      உலகம்
Bangladesh 2024 08 08

Source: provided

டாக்கா : என் அன்னையை பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாத அளவுக்கு மனம் உடைந்து விட்டது என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வசேத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

வங்கதேசத்தை நான் மிகவும் விரும்புகிறேன். எனது நாட்டில் ஏற்பட்டிருக்கும் உயிர் இழப்புகளால் மனம் வேதனை அடைந்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் என் அன்னையை பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாத அளவுக்கு மனம் உடைந்து விட்டது. 

அதே நேரத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் பொறுப்பை வகிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, உள்நாட்டு போராட்டம் மற்றும் கலவரம் காரணமாக கடந்த 5-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சடைந்துள்ளார். இதையடுத்து, தனது கருத்தை சைமா வசேத் முதல்முறையாக பதிவு செய்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநரான சைமா வசேத், கடந்த பிப்ரவரியில்தான் அந்த பொறுப்பை ஏற்றார். இந்த பொறுப்பை ஏற்ற முதல் வங்க தேசத்தவர் இவர். அதோடு, இந்த பொறுப்பை வகித்த இரண்டாவது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து