முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடமேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது: தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      தமிழகம்
India-Meteorological 2022

சென்னை, அரபிக்கடலில் காற்றழுத்தாழ்வு நிலை ஏற்கனவே உருவாகியுள்ள நிலையில், நாளை வங்கக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு எச்சரிக்கை... 

வங்கக்கடலில் நாளை (14-ம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது. தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பாக அக்டோபர் 15 ஆம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரபிக்கடலில்...

இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்தமிழகம்‌ மற்றும்‌ தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்‌ நிலவுகின்றன. நேற்று முன்தினம் (11-10-2024) மத்தியகிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று (12-10-2024) காலை 08:30 மணி அளவில்‌ அதே பகுதியில்‌ நிலைகொண்டுள்ளது. இது மேலும்‌ மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து, இன்று (13-ம்‌ தேதி) காலை மத்திய அரபிக்கடல்‌ பகுதியில்‌ காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்‌.

10 மாவட்டங்களில்...

இன்று (13.10.2024) தமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. திருப்பூர்‌ மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட மலைப்பகுதிகள்‌, நீலகிரி, திண்டுக்கல்‌, தேனி, மதுரை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

கீழடுக்கு சுழற்சி.... 

இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு பரவலான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை (14.10.2024) தமிழகத்‌தில்‌ பெரும்பாலான இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌கூடும்‌. விழுப்புரம்‌ மற்றும்‌ கடலூர்‌ மாவட்டங்களில்‌, புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, அரியலூர்‌, திருவள்ளூர்‌, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்‌சி மாவட்டங்களில்‌, காரைக்கால்‌ பகுதியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக மழை... 

முன்னதாக , வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து