முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
Eps 2024-12-04

Source: provided

சென்னை: புயல் பாதித்த மக்களுக்கான அனைத்து தேவைகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்

 இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் , முகாம்களாக மாற்றப்பட்டு , வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக தி.மு.க. அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாக செய்திகள் வருகின்றது. 

ஏற்கனவே புயலின் தாக்கத்தால்  சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த  அரசு.  இந்த தி.மு.க. அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள். 

ஆகவே இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளும் தடையின்றி  கிடைப்பதை உறுதி செய்யுமாறு  தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து