முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்: பினராய் அறிவிப்பு

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Pinaraye 2024-12-04

Source: provided

திருவனந்தபுரம்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. உணவு, குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டங்களுக்கு இடையே மீட்புப் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினாலும் நிலைமை இன்னமும் சீராகவில்லை. இந் நிலையில் புயலால் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, 

 பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீது தான் எங்களின் முழு எண்ணங்கள் இருக்கின்றன. இதுபோன்ற சவாலான நேரத்தில் அண்டை மாநிலங்களுடன் கேரளா எப்போதும் ஒற்றுமையாக நிற்கிறது.  

தமிழகம் விரும்பும் எந்த உதவிகளையும் வழங்க கேரளா தயாராகவே உள்ளது. இரு மாநிலங்களும் இணைந்து பேரழிவில் இருந்து மீண்டு வருவோம்.  இவ்வாறுஅந்த பதிவில் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து