எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் நேற்று நிறைவேறியது. இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அவையில் நேற்று நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 64 (1)வது பிரிவில், பெண்ணை வன்புணர்ச்சி என்ற கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தற்போதைய தண்டனையின் அளவு அதிகரிக்கப்படுகிறது. அதன்படி கற்பழிப்பு குற்றத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
64 (2) பிரிவின்படி, காவல் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரம் பெற்ற ஒருவராலோ, நம்பிய நெருங்கிய உறவினரால் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு தற்போது 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனை வழங்கப்படுகிறது. அது 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 65 (2)வது பிரிவில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 66-வது பிரிவில், பெண்ணுக்கு வன்புணர்ச்சி மற்றும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.
70 (1) வது பிரிவில், பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட்ட தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 70 (2) வது பிரிவில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அது ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்படுகிறது.
71-வது பிரிவில், மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை வழங்கப்படுகிது. அது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. சில குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 74-வது பிரிவில், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்கு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பாலியல் தொல்லைகளுக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. 77-வது பிரிவின்படி, மறைந்திருந்து காணும் பாலியல் கிளர்ச்சி என்ற குற்றத்திற்காக 1 முதல் 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 2 முதல் 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.
பெண்ணை பின்தொடரும் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 7 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. திராவகம் வீசி பெண்களுக்கு கொடுங்காயங்களை ஏற்படுத்தினால், 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதை ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திராவகத்தை வீச முயன்றால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றங்கள் எதற்கும் ஜாமீன் கிடையாது. குற்றவாளி உடனே கைது செய்யப்படுவார். ஆயுள் தண்டனை என்பது சிறையில் அவர் இயற்கையாக சாகும் வரை நீடிக்கும். பாரதீய நகரிக் சுரஷா சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின்படி, தண்டனை விதிக்கப்பட்டவரின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது, அப்பீல் வழக்கை விசாரிக்கும் கோர்ட்டு, மரண தண்டனையை தவிர மற்ற தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது. அப்பீல் தாக்கல் செய்யப்பட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு அவரை சிறையில் இருந்து விடுவிக்கக்கூடாது.
குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரினால், அவர் அப்படிப்பட்ட குற்றவாளி அல்ல என்பதும், எந்த குற்றத்தையும் அவர் செய்ய வாய்ப்பில்லை என்பதற்கான திருப்தியான காரணங்கள் தெரியும் வரை ஜாமீன் அளிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்
28 Dec 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
விஜயகாந்த் 2-ம் நினைவு நாள்: பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.
-
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அஸ்ஸாமில் 10.56 லட்சம் போ் நீக்கம்
28 Dec 2025திஸ்பூர், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.
-
அரசியலில் துணிவோடு செயல்பட்டவர்: விஜயகாந்திற்கு கனிமொழி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, அரசியலில் துணிவோடு செயல்பட்டவர் என்று விஜயகாந்திற்கு கனிமொழி எம்.பி. புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.



