எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பாரதீய நியாய சன்ஹிதா மற்றும் பாரதீய நகரிக் சுரஷா ஆகிய மத்திய சட்டங்களில் உள்ள 17 சட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கூடுதல் தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதா அவையில் நேற்று நிறைவேறியது. இதன்படி, 2025 தமிழ்நாடு பெண்ணிற்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக அவையில் நேற்று நிறைவேறிய சட்ட திருத்த மசோதாவில் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 64 (1)வது பிரிவில், பெண்ணை வன்புணர்ச்சி என்ற கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தற்போதைய தண்டனையின் அளவு அதிகரிக்கப்படுகிறது. அதன்படி கற்பழிப்பு குற்றத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
64 (2) பிரிவின்படி, காவல் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகத்தில் உள்ள அதிகாரம் பெற்ற ஒருவராலோ, நம்பிய நெருங்கிய உறவினரால் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு தற்போது 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனை வழங்கப்படுகிறது. அது 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 65 (2)வது பிரிவில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 66-வது பிரிவில், பெண்ணுக்கு வன்புணர்ச்சி மற்றும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.
70 (1) வது பிரிவில், பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட்ட தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 70 (2) வது பிரிவில், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அது ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்படுகிறது.
71-வது பிரிவில், மீண்டும் மீண்டும் பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை வழங்கப்படுகிது. அது மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்ற அளவில் உயர்த்தப்படுகிறது. சில குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 74-வது பிரிவில், பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்கு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பாலியல் தொல்லைகளுக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.
பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. 77-வது பிரிவின்படி, மறைந்திருந்து காணும் பாலியல் கிளர்ச்சி என்ற குற்றத்திற்காக 1 முதல் 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 2 முதல் 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.
பெண்ணை பின்தொடரும் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் அளவு, 7 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. திராவகம் வீசி பெண்களுக்கு கொடுங்காயங்களை ஏற்படுத்தினால், 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதை ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திராவகத்தை வீச முயன்றால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றங்கள் எதற்கும் ஜாமீன் கிடையாது. குற்றவாளி உடனே கைது செய்யப்படுவார். ஆயுள் தண்டனை என்பது சிறையில் அவர் இயற்கையாக சாகும் வரை நீடிக்கும். பாரதீய நகரிக் சுரஷா சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களின்படி, தண்டனை விதிக்கப்பட்டவரின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது, அப்பீல் வழக்கை விசாரிக்கும் கோர்ட்டு, மரண தண்டனையை தவிர மற்ற தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட முடியாது. அப்பீல் தாக்கல் செய்யப்பட்ட தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு அவரை சிறையில் இருந்து விடுவிக்கக்கூடாது.
குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரினால், அவர் அப்படிப்பட்ட குற்றவாளி அல்ல என்பதும், எந்த குற்றத்தையும் அவர் செய்ய வாய்ப்பில்லை என்பதற்கான திருப்தியான காரணங்கள் தெரியும் வரை ஜாமீன் அளிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச


