முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

போபால் : அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் அடித்து கொல்லப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள கொராகலா பகுதியை சேர்ந்தவர் கலுவா அஹிர்வார். இவரது பேத்தி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக கலுவா அஹிர்வாரின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பின்னர் போலீசார் அங்கு, பக்கத்து வீட்டுக்காரர்களின் ஹோம் தியேட்டரை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கலுவா அஹிர்வாரின் பக்கத்து வீட்டுக்காரர்களான ரதிராம் அஹிர்வார் மற்றும் முகேஷ் அஹிர்வார் ஆகியோர் சண்டையிட்டு வாக்குவாதம் செய்துள்ளனர். பின்னர் கட்டை, மண்வெட்டி உள்ளிட்டவற்றை கொண்டு கலுவா அஹிர்வாரை அவர்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கலுவா அஹிர்வாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை குற்றவாளிகளான ரதிராம் மற்றும் முகேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து