முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

“அவரிடமே கேளுங்கள்” செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      அரசியல்
Edappadi 2020 11-16

சென்னை, என்னை சந்திப்பதை ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடமே சென்று கேளுங்கள்  என்று செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி   பதில் அளித்துள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் அ.தி.மு.க.  எம்.எல்.ஏ.  செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்தார். அவர் அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் தலைமையில் நடந்த அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஆலோசனையில் கடந்த இரண்டு நாட்களாக கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அவரிடம், அ.தி.மு.க.  எம்.எல்.ஏ.  செங்கோட்டையன் கடந்த இரு தினங்களாக உங்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்.

 அ.தி.மு.க.  சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சி. தி.மு.க.  போல அடிமை ஆட்கள் இங்கு கிடையாது.  நான் ஒரு சாதாரண தொண்டன். தலைவன் கிடையாது. தி.மு.க.  போல வாரிசு அரசியல் இங்கு கிடையாது.  எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது. அ.தி.மு.க. வில் இருக்கும் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். அதற்கு எந்த தடையும் கிடையாது.   என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 சட்டப்பேரைவையில் நேற்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக, அ.தி.மு.க.  எம்.எல்.ஏ.  செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் தனியாக சந்தித்துப் பேசினார். மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு அவர் வழக்கமாக வருகைதரும் வழியாக இல்லாமல் கடந்த இரு நாட்களாக வேறு நுழைவாயில் பகுதியாக சட்டப்பேரவைக் வருகைகு தந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து