முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை: வள்ளியூர் கோர்ட் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Cort 2023 04 17

Source: provided

நெல்லை: நெல்லை மாவட்டம் பழவூர் அருகே கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், பழவூர் அருகே விஸ்வநாதபுரம், நரிப்பாறை காலனி தெருவை சேர்ந்த ராமர் (வயது 68), கடந்த 2012ம் ஆண்டு அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த முருகன்(எ) நரிப்பாறை முருகன் (வயது 45), முன்விரோதம் காரணமாக ராமரை அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து பழவூர் காவல் நிலையத்தில் ராமர் அளித்த புகாரின்பேரில் பழவூர் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கில் முருகன்(எ) நரிப்பாறை முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  இவ்வழக்கை விசாரித்த வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பர்ஷாத்பேகம் தீர்ப்பளித்தார். அப்போது, குற்றவாளி முருகனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து