எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திருச்சியில் 7 தளங்களுடன் 235 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் நூலக கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: - காவிரிக் கரையில் அமைந்த திருச்சிராப்பள்ளி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்றும், இது பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதியில் ஓர் அறிவுக் களஞ்சியமாக அமைந்திடும் என்றும் தமிழ்நாடு முதல்வர் 27.6.2024 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் 1,97,337 சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் நூலகக் கட்டடம் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தொழில்நுட்ப சாதனங்கள் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு தமிழ்நாடு முதல்வர் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நூலகத்தின் தரைத் தளத்தில் – வரவேற்பறை, தகவல் வழங்கும் மற்றும் பதிவு செய்யும் பகுதி, பொருட்கள் வைக்கும் பகுதி, முக்கிய பிரமுகர் அறை, சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, பருவ இதழ்கள் / பத்திரிகைகள் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, காத்திருப்போர் பகுதி, மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி மற்றும் 1000 இருக்கைகள் கொண்ட கலையரங்கம்; முதல் தளத்தில் - அறிவியல் மையம், சொந்த புத்தகங்கள் படிக்கும் பகுதி, நிகழ்ச்சிகள் நடத்தும் அரங்கம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் படப்புத்தகங்கள் பகுதி; இரண்டாம் தளத்தில் - கலைஞர் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் மற்றும் பல்நோக்குக் கூடம்; மூன்றாம் தளத்தில் – தமிழ் நூலக குறிப்பு பகுதி, தமிழ் நூலகம் - படைப்பாளர் பகுதி, தமிழ் நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி; நான்காம் தளத்தில் - ரோபாட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, இணைய (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆங்கில நூல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கும் பகுதி; ஐந்தாம் தளத்தில் - அறிவுசார் மையம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் மற்றும் ஆங்கில நூலக குறிப்பு பகுதி; ஆறாம் தளத்தில் – நூல்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு அறை, பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதி, அரிய நூல்களுக்கான பகுதி, டிஜிட்டல் மயமாக்கல் பகுதி, டிஜிட்டல் ஸ்டுடியோ, போட்டித் தேர்வு பகுதி மற்றும் கருத்தரங்கு கூடம்; ஏழாம் தளத்தில் - காணொலி (வீடியோ கான்பரன்சிங்) காட்சியரங்கம். தலைமை நூலக அலுவலர் அறை, துணை தலைமை நூலக அலுவலர் அறை, நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அறை, நிர்வாகப் பகுதி ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளது.
மேலும், நகரும் படிகட்டுகள், 2 கண்ணாடி மின் தூக்கிகள், 7 மின் தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், அனைத்து தளங்களிலும் குளிர்சாதன வசதி, மின் ஆக்கிகள், மின்மாற்றிகள், சூரிய மின்களங்கள் போன்ற பல வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. இந்நூலகத்தில், உலகத் தமிழ் இலக்கியம், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கணம், கலை, கவிதை, நாடக நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் திராவிட தலைவர்களின் நூல்கள், பெண்ணியம், தேசிய இயக்கத் தலைவர் நூல்கள், அரிய நூல்கள், மருத்துவம், பொறியியல், இசை, விளையாட்டு, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த நூல்கள், போட்டித் தேர்வு மாணவர்களுக்கான நூல்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
17 Feb 2026சென்னை, தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.5,000 மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்திய போது தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது: அமைச்சர்
17 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடி திட்டம் என்றும் ரூ.5,000 மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்திய போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது என்று
-
'வித் லவ்' பட தயாரிப்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
17 Feb 2026சென்னை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை “வித் லவ்” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 17) நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
-
3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை..!
17 Feb 2026புதுடெல்லி, அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது.
-
இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் உருப்படியாக எதுவுமே இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
17 Feb 2026சென்னை, தமிழக அரசிந் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் உருப்படியாக எதுவும் இல்லை என்றும் அத்திப்பழம் போன்று சொத்தையாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள்: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
17 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரான்ஸ் அதிபர் வரவேற்ற பிரதமர் மோடி
17 Feb 2026மும்பை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்தார்.
-
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 12 லட்சம் பேர் பயன்: இடைக்கால பட்ஜெட்டில் தகவல்
17 Feb 2026சென்னை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
தமிழக வேளாண் பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
17 Feb 2026சென்னை, தமிழக அரசின் 2026-27 இடைக்கால வேளாண் பட்ஜெட்டை நேற்று (பிப்.17) சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
-
இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Feb 2026சென்னை, தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
விடியல் பேருந்துகளில் பெண்கள் 881 கோடி முறை பயணம் தமிழகத்தில் சராசரியாக பெண்கள் மாதம் 888 ரூபாய் சேமித்துள்ளனர்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து திட்டத்தில் 881 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் சராசரியாக பெண்கள் மாதம் 888 ரூபாய் சேமித்துள்ளனர் என்றும்
-
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 2.55 கோடி பேர் பயன்: சட்டசபையில் அமைச்சர் தகவல்
17 Feb 2026சென்னை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
21 மாவட்டங்களில் முகாம்கள் மூலம் 1,929 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர்
17 Feb 2026சென்னை, தமிழகத்தில் இதுவரை 21 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
வரும் 2030 - ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
17 Feb 2026சென்னை, வரும் 2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம்
17 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என அனைவரும் பாராட்டு: இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
17 Feb 2026சென்னை, மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி வளர்ச்சியில் சாதனை படைத்துள்ளோம் என்றும், தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான
-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.,யில் மாணவர் சேர்க்கை 97 சதவீதமாக உயர்வு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
17 Feb 2026சென்னை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2021-ம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வேளாண்மை மற
-
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைப்பு: தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
17 Feb 2026சென்னை, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய நாள் எப்படி?
17 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
17 Feb 2026- திருவைகாவூர், திருக்கோகர்ணம், வேதாரண்யம் கோவில்களில் சிவபெருமான் பவனி.
- நத்தம் மாரியம்மன் புறப்பாடு.
- உலக்குடி அரியவன் சுவாமி வழிபாடு.



