Idhayam Matrimony

ஏ.டி.எம். கார்டு பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் இன்று முதல் அமல்

புதன்கிழமை, 30 ஏப்ரல் 2025      தமிழகம்
ATM

Source: provided

சென்னை : ஏ.டி.எம். கார்டு பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு வங்கிகளும் தங்கள் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும்போது வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுகின்றன. ஒரு சில வங்கிகள் நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரமும், சில வங்கிகள் ரூ.50 ஆயிரமும் எடுக்க அனுமதி வழங்கியுள்ளன. ஏ.டி.எம். கார்டுகளின் வகைப்பாட்டினை பொறுத்து இந்த வேறுபாடு உள்ளது. ஒரு மாதத்திற்கு 5 முறை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணமோ, இதர வசதிகளையோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது. அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறைக்கும் தற்போது ரூ.21 சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் இன்று (மே 1) முதல் ரூ.23 ஆக உயர்த்தப்பட இருப்பதாக ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.

அதன் அடிப்படையில், இன்று முதல் தங்களது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் சேவை கட்டணத்தை வசூலிக்க வங்கிகள் தயாராகி வருகின்றன. ஆனால், ஏ.டி.எம். கார்டு பயன்பாட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றாலும், இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இதனால், வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து