முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; கொல்கத்தாவில் 3 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      இந்தியா
Jail 2024-10-04

Source: provided

கொல்கத்தா : கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் கொடுமை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் சட்டகல்லூரி மாணவி ஒருவரை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு ஆர்.ஜி.கர்., மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சட்டக்கல்லூரி வளாகத்திற்குள் மாணவி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் ஜூன் 25ம் தேதி நடந்ததாக மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த மாணவி அளித்த புகார் படி, தற்போது சட்டகல்லூரி படித்து வரும் மாணவர்கள் 2 பேரும், முன்னாள் மாணவர் ஒருவரும் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவி ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

திரிணமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்த மாநிலத்தில் எதுவும் நடக்கலாம். கடந்த ஆண்டு, ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரு ஜூனியர் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதல்வர் இப்போது இது ஒரு சிறிய சம்பவம் என்று கூறி பாதிக்கப்பட்டவருக்கு பணம் வழங்குவார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது குறித்து தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளோம்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளோம். இந்த சம்பவம் குறித்து விரிவான நடவடிக்கை எடுத்து மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து