முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்த உரிமைகள் கைவிடப்பட்டதால் தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு பாதிப்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 27 ஜூன் 2025      இந்தியா
Jaishankar 2023 04 09

டெல்லி, அவசர நிலை காலத்தின் போது ஒப்பந்த உரிமைகள் கைவிடப்படதற்கான விளைவுகள் தமிழ்நாட்டில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நாடு முழுவதும் அவசர நிலையை அமல்படுத்தினார். இந்தியாவின் இருண்ட காலமாக பார்க்கப்படும் அவசர நிலையில் பேச்சு, கருத்து சுதந்திரம் நெருக்கடியை சந்தித்தது. எதிர்க்கட்சியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிக்கைகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவசர நிலையை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். 2 ஆண்டுகளாக நீடித்த அவசர நிலை இந்திரா காந்தியின் ஆட்சி முடிவுக்கு வந்து ஜனதா கட்சி ஆட்சியமைத்த உடன் 1977 மார்ச் 21ம் தேதி திரும்பப் பெறப்பட்டது. இந்தியாவில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டு கடந்த 25ம் தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது.

இந்நிலையில், நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்தது தொடர்பாக பா.ஜ.க. இளைஞரணி சார்பில் தலைநகர் டெல்லியில் நேற்று நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: அவசர நிலை காலத்தின் போது பாராளுமன்றத்தில் விவாதமின்றி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நமது மீனவர்கள் இலங்கை படையினரால் கைது செய்யப்படுவது தொடர்பான செய்திகளை நாம் கேட்டிருப்போம். கடலில் இலங்கை எல்லைக்குள் சில பகுதிகளுக்கு இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க செல்லலாம் என ஒப்பந்தம் இருந்தது. ஆனால், அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது அந்த ஒப்பந்த உரிமைகள் கைவிடப்பட்டன. இதனால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது. ஒப்பந்த உரிமைகள் கைவிடப்படதற்கான விளைவுகள் தமிழ்நாட்டில் இன்னும் பாதிப்பை ஏற்படுத்துகிறது' என்றார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து