முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் கேட்டதாலேயே சண்டை நிறுத்தம்: மத்திய அரசு விளக்கம்

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, பாகிஸ்தான் கேட்டதால் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்  அளித்துள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. ஆனால் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட பிரச்சினைகளால் முதல் நாளிலிருந்தே இரு  அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், பாராளுமன்ற மக்களவை கேள்வி நேரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்துக்கு அமெரிக்காவின் தலையீடு காரணமா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்த்தன் சிங் பதில் அளித்து கூறியதாவது:- சண்டை தொடங்கிய மறுநாளிலேயே இந்தியாவின் முழு நோக்கம் நிறைவேறி விட்டது. பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன்பேரில், இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர்கள் நேரடியாக தொடர்பு கொண்டு பேசினர். அதில், சண்டை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளையும் இருதரப்பாக பேசி தீர்வு காண்போம் என்று அமெரிக்க ஜனாதிபதியிடம் பிரதமர் மோடி தெளிவாக தெரிவித்து விட்டார். இதேநிலைப்பாடு, அனைத்து நாடுகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து