எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அரக்கோணம்: புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ராணிப்பேட்டை சோளிங்கர் தொகுதிகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' பிரசாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி பின்னர் அரக்கோணம் காந்தி சாலையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றார் உதயநிதி. அரக்கோணத்திலாவது உங்கள் ரகசியத்தை சொல்லுங்கள். மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார். போட்டோ ஷூட் எடுப்பார். குழு அமைப்பார் அவ்வளவுதான். இதுவரை 52 குழு அமைத்து கிடப்பில் கிடக்கிறது. மக்களை ஏமாற்றுவதில் சாதனை படைத்திருப்பது தி.மு.க. அரசு.
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்ட தமிழக காவல்துறை இப்போது ஏவல்துறையாக மாறிவிட்டது. நேற்று இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கிறது. எங்காவது காவல்துறை இருக்கிறதா?. இதுவே ஸ்டாலின் நடத்தும் கூட்டத்துக்கு 2 ஆயிரம் காவலர்களை நிறுத்துகிறார்கள். ஏனென்றால், ஸ்டாலினுக்கு மக்கள் கூட்டம் வராது. அதனால் காவல்துறையை நிறுத்தி கூட்டத்தைக் காட்டுகிறார்கள். நீங்கள் பாதுகாப்பு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்கள் தொண்டர்கள் மக்களை பாதுகாப்பார்கள்.
தி.மு.க. குடும்பத்துக்காக பாடுபடும் இயக்கம். அ.தி.மு.க. மக்களுக்காக பாடுபடும் இயக்கம். இதுதான் வித்தியாசம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நமது இயக்கத்தை உடைக்க சதித் திட்டம் தீட்டியும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. சில சுயநலவாதிகள் நம் ஆட்சியை கவிழ்க்க எதிரியோடு இணைந்து பணியாற்றினார்கள். அதையும் முறியடித்தோம். தி.மு.க.வின் சூழ்ச்சியை மக்கள் ஆதரவோடு தவிடுபொடியாக்கினோம்.
இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் அ.தி.மு.க. தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படி நமது தலைவர்கள் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தனர். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற நல்லாதரவை தரவேண்டும். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து ஏழை மக்கள் உயர்தர சிகிச்சை கொடுத்தோம். ஒரு மருத்துவக் கல்லூரியை தி.மு.க. அரசால் கொண்டுவர முடிந்ததா?. வறட்சி ஏற்பட்ட காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான்.
தி.மு.க. ஆட்சியில் மருத்துவமனைக்கு கையோடு போனால் கை இல்லாமல் வருகிறார்கள். காலோடு போனால் உயிரில்லாமல் வருகிறார்கள். கடலூரில் சளிக்கு சிகிச்சை பெற போன இடத்தில் நாய்க்கடி ஊசி போட்டார்கள். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாரத்தான் ஓடிக்கொண்டு இருக்கிறார். மக்களை காப்பதற்கு அமைச்சர் பதவி கொடுத்தால் இவர் ஓடிக்கொண்டே இருக்கிறார். ஓடுவதை நிறுத்துங்கள். மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்கு செல்லுங்கள். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தாலிக்குத் தங்கம் திட்டம் தொடரும். மணமகளுக்கு பட்டுசேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி வழங்கப்படும். தி.மு.க. எந்த கோரிக்கையையும் நிறைவேற்றிய வரலாறு கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் கன்னியாகுமரி-திருப்பதி கனரக தொழிற்வட்ட சாலைத் திட்டத்தில் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம், திருத்தணி வரை சாலை அமைக்க ரூ.350 கோடியில் டெண்டர் விடப்பட்டு, இன்னமும் நிறைவடையாமல் உள்ளது. இதுதான் தி.மு.க. அரசின் நிலைப்பாடு.
அரக்கோணம் நகரத்துக்கு ரூ.110 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.57 கோடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு அரசு கலைக் கல்லூரியாக மாற்றப்பட்டு ரூ.7 கோடியில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விடுதி கட்டப்பட்டது. அரக்கோணத்தில் ரூ.8 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. நெமிலி ஆற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது.
மேலும் ரெயில்வே மேம்பாலம் வேண்டும், பழனிபேட்டையில் உள்ள ரெட்டைக்கண் பாலத்துக்கு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும், அரக்கோணம் மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், சுரங்கப்பாதை, நான்குவழிச்சாலை போன்ற கோரிக்கைகளை கொடுத்திருக்கிறீர்கள். அ.தி.மு.க. அரசு அமைந்ததும் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 5 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-08-2025.
21 Aug 2025 -
ரகுமான் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Aug 2025சென்னை, ரகுமான்கானின் பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
சென்னையில் 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
21 Aug 2025சென்னை, சென்னையில் இன்று 11 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கப்படுகிறது.
-
ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல்
21 Aug 2025புதுடெல்லி, ரூ.67 ஆயிரம் கோடியில் 97 தேஜஸ் போர் விமானங்கள் - மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
21 Aug 2025புதுடெல்லி, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
-
பிரதமர், மாநில முதல்வர்களின் பதவியை பறிக்கும் மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
21 Aug 2025சென்னை, பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் த
-
ஆக. 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்
21 Aug 2025சென்னை, 26-ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள்: பிரதமர் மோடி
21 Aug 2025டெல்லி, இளம் காங்கிரஸ் தலைவர்கள் திறமையானர்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
அமெரிக்காவின் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
21 Aug 2025அமெரிக்கா: அமெரிக்காவின் எப்.பி.ஐ.-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
-
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
21 Aug 2025வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
-
யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு
21 Aug 2025வாஷிங்டன்: யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிக்கப்பட்டது.
-
அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு: மத்திய அரசு
21 Aug 2025புதுடெல்லி, அமைச்சரவையின் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு என மத்திய அரசு வாதம்
-
வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்
21 Aug 2025மாஸ்கோ: வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தப்பட்டது.
-
ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடை: பெற்றோர் அதிர்ச்சி
21 Aug 2025கடலூர்: ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடையில் இருப்பதை புகைப்படத்தில் கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைப்பு
21 Aug 2025தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பும் மும்பை
21 Aug 2025மும்பை: வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு மும்பை திரும்பி கொண்டு இருக்கிறது.
-
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் த.வெ.க. கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு
21 Aug 2025மதுரை: த.வெ.க. கூட்டத்தில் விஜய் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என்று பேசினார்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி செய்து ரஷ்ய அறிவிப்பு
21 Aug 2025மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்க
-
த.வெ.க. மாநாட்டில் தொண்டர்களிடம் விஜய் சொன்ன குட்டி கதை
21 Aug 2025மதுரை: த.வெ.க.மாநாட்டில் விஜய் தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார். விஜய் சொல்லிய குட்டிக்கதை வருமாறு: "ஒரு குட்டிக்கதை சொல்றேன்.
-
ஐதராபாத்-சென்னை புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு
21 Aug 2025திருப்பதி: ஐதராபாத்-சென்னைக்கு புல்லட் ரெயில் பாதை அமைக்க ஆய்வு நடத்தப்படுகிறது.
-
ராகுல் வாகன ஓட்டுநருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு
21 Aug 2025நவாடா: கான்ஸ்டபிள் மீது வாகனம் மோதிய விவகாரம்; ராகுல் காந்தியின் வாகன ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக அணிக்கு 7 பதக்கம்
21 Aug 2025சென்னை: தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணிக்கு 7 பதக்கம் வழங்கப்பட்டது.
-
ஆஸி.வீரர்கள் ஏமாற்றம்
21 Aug 2025சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.
-
அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு
21 Aug 2025டெல்லி: அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
-
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
21 Aug 2025நெல்லை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நயினார் நாகேந்திரன் பேச்சு