Idhayam Matrimony

விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 4 நவம்பர் 2025      இந்தியா
Air

Source: provided

லக்னோ: உத்தரபிரதேசத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணியால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் இருந்து நேற்று முன்தினம் மாலை மராட்டியத்தின் மும்பைக்கு ஆகாசா விமானம் புறப்படவிருந்தது. அந்த விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர். ஓடுபாதை அருகே சென்றுகொண்டிருந்த போது விமானத்தில் இருந்த பயணி இருக்கை அருகே இருந்த அவசரகால கதவை திறந்துள்ளார். இதுகுறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஒடுதளத்திற்கு கொண்டு வந்தார். மேலும், இதுகுறித்து உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற விமான நிலைய அதிகாரிகள், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பயணி ஜனுபூர் மாவட்டத்தை சேர்ந்த சுஜித் என்பது தெரியவந்தது. மேலும், அவர் தவறுதலாக அவசர கால கதவை திறந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பயணி போலீஸ் நிலையத்திற்கு விரசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனை தொடர்ந்து 1 மணிநேர தாமதத்திற்குப்பின் விமானம் மும்பை புறப்பட்டது. விமானத்தின் அவசர கால கதவை பயணி திறக்க முயன்ற சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து