எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை? என்று தி.மு.க. அரசு மீது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மறைமுகமாக சாடியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீப காலமாக, ஆட்சி அதிகாரத்தில் இருந்து அதிவிரைவில் மக்களால் தூக்கி எறியப்படப் போகும் அதிகார மமதை கொண்ட கட்சி ஒன்று, அவசர கதியில் தனக்குப் பழக்கமான அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கி உள்ளது. எந்தக் கட்சியைச் சொல்கிறோம் என்று தெரிகிறதா? அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி வேறு எந்தக் கட்சியாக இருக்கும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
இப்போதெல்லாம் அந்தக் கட்சியின் ஒரே இலக்கு, நம்மைத் தூற்றுவதே. தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி யோசிப்பதே அதன் முழுநேர வேலை என்றாகிவிட்டது. அவர்களுக்கு, 1969க்குப் பிறகு, அவதூறுதான் அரசியல் கொள்கை. லஞ்ச லாவண்யம், ஊழல்தான் லட்சியக் கோட்பாடு. இந்நிலையில், மக்களுடன் மக்களாக இதயப்பூர்வமாக இரண்டறக் கலந்த பிறகே மாபெரும் மக்கள் சக்தியுடன் அரசியலுக்கு வருகிற நம் போன்ற ஓர் இயக்கத்தைக் கண்டால், அவர்களின் மூளை மழுங்கி முனகத்தானே செய்யும்?
ஆம். அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். உண்மையில் நாம், அவர்கள் மீது இன்னும் முழுமையான விமர்சனத்தைத் தொடங்கவே இல்லை. மாறாக, மிக லேசான விமர்சனங்களைத்தான் வைத்தோம். அதுவும் நசுங்காத நாகரிகத்துடன் வைத்தோம்.
நாம், அவர்கள் மீது வைக்கின்ற மிக லேசான விமர்சனங்களுக்கே மக்கள் மிக பலமான வரவேற்பை அளிக்கத் தொடங்கி உள்ளனர். அதைக் கண்டு அஞ்சி நடுங்கியதால்தான், தங்கள் எண்பேராயம் மற்றும் ஐம்பெருங்குழுக்களைக் கொண்டு அதிரி புதிரியாக ஆலோசித்தும் நம் மீது மக்கள் ஏற்றுக்கொள்ளும் எந்த ஒரு விமர்சனத்தையும் வைக்கவே இயலவில்லை. அத்தகைய இயலாமையில், அந்தக் கட்சியின் தலைவர் கைக்கொண்டதுதான் ‘எந்தக் கொம்பனாலும் எங்களை, எங்கள் ஆட்சியை வீழ்த்த முடியாது’ என்கிற அதிகார மயக்க முழக்கம்.
தங்களைக் கொள்கைவாதிகளாக அடிக்கடி காட்டிக்கொள்வதற்காக, எல்லோரையும் ஏமாற்றுவதற்காக, தமிழ்நாடு, தமிழ் மொழி, தமிழினம்தான் தங்கள் உயிர் என்றும் மண், மொழி, மானம்தான் தங்கள் தலையாய கொள்கை என்று ஒரு சம்பிரதாயச் சங்கை முழங்கத் தொடங்கி உள்ளார், அக்கட்சியின் தலைவர். போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?
யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்? ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ் தமிழ்’ என்பதும், ‘தமிழர் தமிழர்’ என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்? சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது? பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?
53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா? பவளவிழா பாப்பா - நீ. பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா, நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து, நாடே சிரிக்கிறது பாப்பா.
நேற்று முன்தினம் நடந்த சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது. எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2025.
12 Nov 2025 -
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
12 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த பெண்கள்: பா.ஜ.
12 Nov 2025பாட்னா : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்
12 Nov 2025புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்தி
-
டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது
12 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.
-
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
12 Nov 2025சென்னை : தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தின் செழுமையை உலகறிய செய்யும்: 'பொருநை அருங்காட்சியகம்' குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Nov 2025சென்னை : பொருநை அருங்காட்சியகம் தமிழகத்தின் தொன்மை செழுமையை உலகறிய செய்யும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா
12 Nov 2025பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
12 Nov 2025புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.
-
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது
12 Nov 2025பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
-
தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுக்கோட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட 3 தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : சட்டசபை தேர்ல் வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி குறித்து அறிவுறுத்தல்
12 Nov 2025சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் ஆகிய 3 தொகுதி தி.மு.க.
-
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய மாநில அரசுகளுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை, தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வரும் 2026 தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நம்பிக்கை
12 Nov 2025சென்னை, 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வரும் '2.0 முதல்வராக' வருவார் என்று நம்பிக்கை தெரிவித்த பேரவைத் தலைவர் அ
-
டிச. 17-ல் சிறை நிரப்பு போராட்டம்: அன்புமணி
12 Nov 2025சென்னை : டிசம்பர் 17-ல் சிறை நிரப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 3 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
12 Nov 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் காயம் அடைந்தவர்கள் புதன்கிழமை காலை சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம்: தி.மு.க. அரசு மீது விஜய் மறைமுகமாக விமர்சனம்
12 Nov 2025சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
-
சத்தீஷ்கரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
12 Nov 2025ராய்ப்பூர், சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மறுப்பு: பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: தேஜஸ்வி
12 Nov 2025பாட்னா : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள தேஜஸ்வி யாதவ், பீகாரில் நாங்களே ஆட்சி அமைப்போம் என்று
-
மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை : மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க தூதரகம் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு இ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
ராயபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
12 Nov 2025சென்னை : சென்னை துறைமுகம் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர்
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளியுடன் தொடர்புடைய காரை தேடும் டெல்லி போலீஸ்
12 Nov 2025டெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில், குற்றவாளியுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சிவப்பு நிற ஸ்போர்ட்ஸ் காரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
-
ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டுகள் சிறை-அபராதம்
12 Nov 2025சென்னை : சென்னை கவர்னர் மாளிகை முன் 2023-ம் ஆண்டில் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ நீதி
-
அமெரிக்காவில் விமான விபத்து - 2 பேர் பலி
12 Nov 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்த விபத்தில் தந்தை - மகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.


