முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியை லாபம் ஈட்டும் நிறுவனமாக கருத கூடாது செனனை உயர் நீதிமன்றம் கருத்து

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: லாபம் ஈட்டும் நிறுவனமாக கல்வியை கருத கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியார் பல்கலைக்கழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மாணவர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து நிகர்நிலை பல்கலைகழகங்களும், கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

கூடுதல் வகுப்பு நடத்துவது கட்டாயம் அல்ல என்றபோது, அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற தேவையே இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், லாபம் ஈட்டும் நிறுவனமாக கல்வியை கருதக் கூடாது என்று கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து