எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தி.மலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத்திருவிழா வரலாறு வருமாறு:-
இந்த உலகத்தில் அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மனுக்கு ஒருமுறை அளவில்லாத கர்வம் ஏற்பட்டது. அவர் காக்கும் கடவுளான திருமாலிடம் சென்று, திருமாலே! இந்த ஈரேழு லோகங்களையும் படைத்தவன் நான். நான் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. நான் உலகத்தை படைக்காவிட்டால் உன்னால் எப்படி காப்பாற்ற முடியும் என்று ஆணவத்துடன் பேசினார்.
இதனால் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உலகமே நடுநடுங்கியது. திருமாலும், பிரம்மனும் சண்டையிடுவதால் உலகத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பதால் அதற்கு தீர்வு காண்பதற்காக தேவேந்திரனும், தேவர்களும் அல்லல் தீர்க்கும் அலகில் ஜோதியனை நாடிச் சென்று பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்து உலகை காக்கும்படி கூறி முறையிட்டனர். அவர்களின் துன்பத்தை நீக்க, சிவபெருமான் முன்வந்தார்.
தேவர்களின் துன்பத்தை தீர்க்கவும், திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் ஏற்பட்ட பகை நீங்கவும் இந்த உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவும் மிகப்பெரிய ஒரு நெருப்பு உருவம் எடுத்து பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் முன்பு ஒளிப்பிழம்பாக உருமாறி நின்றார்.
மிகப் பெரிய நெருப்பு உருவம் தோன்றியதை பார்த்த பிரம்மனும், விஷ்ணுவும் சண்டையை நிறுத்தி ஆச்சரியமாக அந்த ஒளிப்பிழப்பை பார்த்தனர். பின்னர் இவ்வளவு பெரிய உருவத்தின் அடிப்பாகத்தையோ அல்லது மேல்பாகத்தையோ யாரால் கண்டுபிடிக்க முடிகிறதோ அவரே பெரியவர் என்று விஷ்ணுவும், பிரம்மனும் முடிவுக்கு வந்தனர்.
பின்னர் நெருப்பு உருவத்தின் அடியை நான் கண்டு பிடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு விஷ்ணு பன்றி வடிவம் எடுத்து பூமியை குடைந்து சென்றார். தான் முடியை கண்டு வருவதாக கூறி பிரம்மன் அன்னப்பறவையின் வடிவம் கொண்டு ஒரு நொடிக்கு லட்சக்கணக்கான மைல் வேகத்துடன் மேலே பறந்து சென்றார். பாதாளங்களுக்கு அப்பால் சென்றும் விஷ்ணுவால் அடியை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் கீழ் நோக்கி பூமியை குடைந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் நெருப்பு ஒளியின் அடியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது சிவபெருமானின் செயலாகத்தான் இருக்கும் என்பதை அறிந்த விஷ்ணு தன்னால் அடியை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி வந்தார்.
மேலே பறந்து முடியை காண்பதற்காக அன்னப்பறவையாக மாறி சென்ற பிரம்மன் பல ஆயிரம் ஆண்டுகளாக பறந்து சென்ற காரணத்தால் அவரது இறகுகள் உதிர தொடங்கின. அவரும் உண்மையை உணர தொடங்கினார். தன் தவறை அவர் உணரும் நேரத்தில் தாழம்பூ ஒன்று பிரம்மனை நோக்கி கீழே வந்து கொண்டு இருந்தது. அந்த தாழம்பூவை கையில் பிடித்த பிரம்மன், 'நீ எங்கிருந்து வருகிறாய்' என்று கேட்டார். அதற்கு தாழம்பூ, 'தான் சிவபெருமானின் முடியில் இருந்ததாகவும், தவறி கீழே விழுந்து விட்டதாகவும், 40 ஆயிரம் ஆண்டுகளாக கீழே வந்து கொண்டிருப்பதாகவும்' கூறியது.
தாழம்பூ, சிவபெருமான் முடியில் இருந்து வருவதாக கூறியதும், பிரம்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர், தாழம்பூவிடம் இந்த நெருப்பு உருவத்தில் முடியை கண்டுபிடிப்பதற்காக மேலே பறந்து வந்து கொண்டிருந்தேன். நான் சிவபெருமானின் முடியை கண்டு அதில் இருந்து உன்னை எடுத்து வந்ததாக ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும் என்று கூறினார். இதற்கு முதலில் தாழம்பூ அஞ்சினாலும் பின்னர் ஒப்புக்கொண்டது.
உடனே பிரம்மன் வேகமாக கீழே வந்தார். அவர் திருமாலை பார்த்து, 'நான் சிவபெருமானின் முடியை கண்டுவிட்டேன். மேலும் அதில் இருந்து தாழம்பூவை எடுத்து வந்தேன்' என்று கூறினார். தாழம்பூவும், 'ஆமாம்! பிரம்மன் சொல்வது உண்மைதான்' என்றது. அந்த நேரத்தில் நெருப்பு மலை வெடித்து பேரொலி கேட்டது. அந்த சத்தத்தால் மூவுலகமும் நடுங்கியது. வெடித்த நெருப்பு மலையில் இருந்து சிவபெருமான் புன்னகையுடன் தோன்றினார்.
பிரம்மன் பொய் கூறியதால் அவரை பார்த்து, 'பிரம்மனே! உனக்கு இனிமேல் பூமியில் கோவிலும் இல்லை. பூஜையும் இல்லை' என்றார். தாழம்பூவை பார்த்து, 'பொய்சாட்சி கூறிய தாழம்பூவே, இன்று முதல் நான் உன்னை சூடிக் கொள்ள மாட்டேன்' என்று கூறினார் சிவபெருமான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மன், சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டினார். பிரம்மனின் நிலை கண்டு மனம் இளகிய சிவன், 'பிரம்மனே! பூவுலகில் உள்ள அந்தணர்களுக்கு செய்கின்ற பூஜை, உன் பூஜையாக விளங்கும்' என்றார்.
அதன்பிறகு சிவபெருமான் பிரம்மனையும், விஷ்ணுவையும் பார்த்து, 'இன்று முதல் இந்த இடம் புனித தலமாக விளங்கும். இந்த ஒளிவடிவான மலை, சிறிய மலையாகி இங்கே நிற்கும். இந்த தலத்தில் பாவங்கள் நடக்காது. இதை சந்தேகப்படுபவர்களுக்கு முக்தி கிடைக்காது' என்று அருளாசி கூறினார். பிரம்மனும், திருமாலும் இந்த மலை மற்ற மலைகளைப் போலவே இருக்க வேண்டும். மலையின் உச்சியின் மீது எப்போதும் ஓர் ஒளி விளங்க வேண்டும் என்று வேண்டினர்.
அதற்கு சிவபெருமான், 'கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மட்டும் மலையின் மீது ஒளி காட்டுவோம். இந்த ஒளியை காண்போர்க்கு துன்பங்கள் நீங்கும். இந்த ஒளியை கண்டு வணங்குபவரின் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும்' என்றார். அதன்படி தான் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மகா தீப திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
02 Mar 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் திட்டவட்ட மறுப்பு
02 Mar 2026தெஹ்ரான், ஈரான் தன்னைத்தானே தற்காத்துக்கொள்ளும் என்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி தெர
-
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: லெபனானில் 31 பேர் உயிரிழப்பு
02 Mar 2026பெய்ரூட், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அ
-
ஈரான் - இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடிய ஜோர்டான்
02 Mar 2026அம்மன், மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
-
இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு: கண்காணிக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியது உள்துறை அமைச்சகம்
02 Mar 2026புதுடெல்லி, ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி
02 Mar 2026தெஹ்ரான், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்தனர்.
-
போரை முன்கூட்டியே நிறத்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய பிரதமர் நரேந்திரமோடி..!
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய பதற்ற நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார
-
தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள் என்று த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Mar 2026சென்னை, சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
போர் பதற்றம்: மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உதவி கோரிய தமிழர்கள் 498 பேரும் பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்
02 Mar 2026சென்னை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக தங்களை மீட்குமாறு அழைத்த இந்தியர்களில் தமிழர்கள் 498 பேர் அழைத்துள்ளதாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் நலத்துறை
-
தஞ்சையில் நாளை விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
02 Mar 2026தஞ்சாவூர், தஞ்சாவூரில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் த.வெ.க.
-
தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்
02 Mar 2026சென்னை, தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு த
-
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணையும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி
02 Mar 2026லண்டன், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து களம்காண தயாராகயிருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி பயணம்: தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு
02 Mar 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி சென்றார்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடக்கம்: மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு
02 Mar 2026மும்பை, மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
-
மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம்: இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு
02 Mar 2026புது டெல்லி, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
-
உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை, தூதரகங்கள் மூலம் தீர்வுகாண பிரதமர் மோடி வலியுறுத்தல்
02 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்படுவதையே இந்தியா ஆதரித்து வ
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ம் தேதி தீர்ப்பு
02 Mar 2026மதுரை, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன் தகவல்
02 Mar 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
ஈரானில் ஐ.ஆர்.ஜி.சி.யின் தலைமையகத்தை அழித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவிப்பு
02 Mar 2026வாஷிங்டன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
-
பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
02 Mar 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள், அழகர் கோவில் கள்ளழகர், திருச்செந்தூர் முருகன் ஆகிய கோவில்களில் தெப்பம்.
- திருமோகூர் காளமேகப்பெருமாள் யானை மலையில் சம்ஹார லீலை.
- நத்தம்
-
இன்றைய நாள் எப்படி?
02 Mar 2026


