எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வெளிவந்ததால், கர்நாடக அரசு மேகதாது அணைக்கான பணிகளை தொடங்கி விட்டது. தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பை மறு ஆய்வு செய்திட வலியுறுத்தி 11.12.2025 அன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறது. மத்திய நீர்வள குழுமத்திடமும் 9.12.2025 அன்று ஒரு விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு கொடுத்திருக்கிறது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு பின் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணை முடிவில் 16.2.2018 அன்று வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான செயல் இது என தமிழ்நாடு அரசு இதில் குறிப்பிட்டிருப்பது நியாயமானது. இந்த தீர்ப்பு வந்த உடனேயே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில அளவில் தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன்... சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். எனவே தமிழக முதல்வரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாராட்டி நன்றி கூறுகிறோம்.
காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் புதிய அணையை கட்டிட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு யுக்திகளை கடைப்பிடித்து வருகிறது. முதலில் மத்திய அரசின் நீர்வளத் துறையிடம் அனுமதி கோரியது. மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் இதற்கான அறிக்கை கொடுத்து அனுமதி கோரியது. இத்துறையும் விரிவான அறிக்கையை கர்நாடக அரசிடம் கேட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ஆணையக்கூட்டத்தில் இதை விவாதப்பொருளில் சேர்த்து விவாதித்திடும் நிலையில் நிகழ்ச்சி நிரலில் சேர்த்து இருந்ததை தமிழகத்தின் எதிர்ப்பால் தாங்கள் நினைத்ததை சாதிக்க முடியாமல் காவிரி ஆணையம் ஒத்தி வைத்தது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் தமிழ்நாடு அரசின் சார்பாக பங்கு கொண்ட நமது உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்து முறியடித்தனர்.
இதன்பின்தான் காவிரி ஆணையக்கூட்டத்தில் மேகதாது அணைக்கான அறிக்கையை விவாதித்திட காவிரி ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை கர்நாடகம் தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து வாதாடிய நிலையிலும் காவேரி ஆணையக்கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாது அணைக்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது என்பது தமிழகத்திற்கான அநீதியாகும்.
இதற்கு முன்பே காவேரி ஆணையமும், மத்திய அரசின் ஜல் சக்தி துறையும், இதற்கு இசைவாக இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு விரைவாக மேகதாது அணை கட்டுமானத்திற்கான அனுமதியாக கருதி, கர்நாடக அரசு இதற்கான செயல்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளது. நவம்பர் 18-ந்தேதி கர்நாடகத்தின் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கர்நாடக நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் இந்த அணை கட்டுமானத்திற்கான 30 பேர் கொண்ட தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் குழுவை அமைத்ததுடன், செயல்படுத்திடும் பொறுப்பை கர்நாடக இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிலைய இயக்குனரித்திடம் கர்நாடக அரசு ஒப்படைத்துள்ளது.
அடுத்து காவிரி ஆணைய கூட்டத்தில் இதை விவாதிக்கும் நிலையில், மேகதாது அணைக்கான கருத்துருவை கொடுப்பதற்கும் தயாராக உள்ளது. விவாதிப்பது தானே என்று அலட்சியமாக இருந்தால் இந்த முதல் கட்ட நடவடிக்கையே கர்நாடகத்தின் சாதகமான நிலையாக எடுத்து கொள்ளப்படும். எனவே மறுசீராய்வு மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்பட இருக்கிற கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Dec 2025சென்னை, இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Dec 2025சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி.
-
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
13 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மேகதாது அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
13 Dec 2025சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
-
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
13 Dec 2025மதுரை, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத
-
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது: தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு: முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
13 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இன்று முதற்கட்டமாக தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க.
-
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் சூர்யவன்ஷி புதிய சாதனை
13 Dec 2025துபாய், இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை இந்தியாவின் இளம் வீரர் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
8 அணிகள்...
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
13 Dec 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்கள் நாட்டுக்கே செல்ல வேண்டும்: அதிபர் ட்ரம்ப்
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம் என அமெரிக்க அதிபர் கொனால்டு ட்ரம்ப் தெரிவித
-
தமிழ்நாட்டில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
13 Dec 2025சென்னை, தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
-
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2025டெல்லி, பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரிய
-
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஒப்புதல்
13 Dec 2025புதுடெல்லி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது
13 Dec 2025திஸ்பூர், பாகிஸ்தானுக்கு ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக உளவு பார்த்த முன்னாள் இந்திய விமான படைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
-
திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பா.ஜ.க.: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
13 Dec 2025திருவனந்தபுரம், திவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்று தந்த கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
-
கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். பெரும்பாலான இடங்களில் வெற்றி
13 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
-
புதுச்சேரி ரேஷன் கடை விவகாரம்: விஜய் பேசியது குறித்து த.வெ.க. நிர்வாகி விளக்கம்
13 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் த.வெ.க.
-
மதுரையில் வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Dec 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் டிச. 31க்குள் அமல்படுத்தப்படும் டாஸ்மாக் திட்டவட்டம்
13 Dec 2025சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற 31-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் உத்தரவாதம் அளித்துள்ளது.
-
வன்னியர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அமைச்சர் பெரியசாமி பேச்சு
13 Dec 2025திண்டுக்கல், வன்னியர்களுக்கு 13 சதவீரம் இடஓதுக்கீடு வழங்கியது தி.மு.க.தான் என்று அமைச்சர் பெரியசாமி பேசினார்.
-
டெல்லியில் காற்று மாசுபாடு: மக்களின் உடல்நலம் பாதிப்பு
13 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
'சால்ட் லேக்' மைதானத்தில் சில நிமிடங்கள் இருந்த மெஸ்சி: கோபத்தில் ரசிகர்கள் கலவரம்
13 Dec 2025அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
13 Dec 2025நியூயார்க், தாய்லாந்து-கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
மெஸ்ஸியுடன் ஷாருக்கான் சந்திப்பு
13 Dec 2025கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.
-
கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் மெஸ்சி
13 Dec 2025கொல்கத்தா, கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தனது முழுவுருவச்சிலையை மெஸ்சி நேற்று திறந்து வைத்தார்.


