எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற 31-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் உத்தரவாதம் அளித்துள்ளது.
வனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து வரும் ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச், ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.
இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் சார்பில் வக்கீல் கே.சதீஷ்குமார் ஆஜராகி, ‘‘காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏற்கனவே 22 மாவட்டங்களில் அமல்படுத்தி விட்டோம். தற்போது, காஞ்சீபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தியுள்ளோம். மீதமுள்ள மாவட்டங்கள் என்று தமிழ்நாடு முழுவதும் வருகிற 31-ம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு விடும் என்று உறுதி அளிக்கிறோம் என்று கூறினார்.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மனுவில், ‘‘டாஸ்மாக் மதுக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது, அதற்கான பணத்தை திருப்பிக் கொடுப்பது போன்ற கூடுதல் வேலை செய்யவேண்டியதுள்ளது. எனவே, இந்த பணிக்காக கூடுதல் ஊழியர்களை நியமிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கில் எங்களை ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துக்காக கூடுதல் ஊழியர்களை டாஸ்மாக் நிர்வாகம் நியமிக்கவேண்டும்'' என்று கூறினர். மேலும், வருகிற 31-ம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறிய உத்தரவாதத்தை பதிவுச்செய்துக் கொண்டு, விசாரணையை 2026-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


