முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை

சனிக்கிழமை, 27 டிசம்பர் 2025      உலகம்
Jail 2024-05-01

கோலாலம்பூர், ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த 2009-2018 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்த நஜீப் ரசாக், வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்காக 1எம்.டி.பி. என்ற அமைப்பை உருவாக்கினார். மலேசியாவின் மேம்பாட்டிற்காக இந்த நன்கொடைகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நன்கொடை என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை பெற்று நஜீப் ரசாக் ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையின் அடிப்படையில், கடந்த 2018-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். கோர்ட்டு விசாரணையில் நஜீப் ரசாக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் மீதான பணமோசடி புகார் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கிலும் நஜீப் ரசாக் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கோர்ட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து