முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தெரிந்தும் தெரியாதது

Image Unavailable

பாமா விஜயம் என்ற படம், இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கிய படம். அதில் பாடல் ஒன்றில், ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்று கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார். அந்த பாடல் சொல்லும் சுவராஸ்யமான சேதி ஒன்று உண்டு. கண்ணதாசன் காரைக்குடி அருகே உள்ள சிறு கூடல் பட்டியில் பிறந்தவர். அந்த ஊருக்கு அருகிலேதான் நமது கோவில் நகரம் மதுரை உள்ளது. அந்த நகரில் தெற்கு ஆவணி மூல வீதி உள்ளது. அந்த வீதியில்தான் நகரின் பெரும்பாலான நகைக்கடைகள் உள்ளன. அதை குறிக்கும் வகையிலேயே கண்ணதாசன்  ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என குறிப்பிட்டு இருப்பார். இது போன்ற எண்ணற்ற  வாழ்வியல் சுவராசியங்களை திரை மறைவு ரகசியமாக கண்ணதாசன் குறிப்பிட்டு இருப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்