எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'முத்தின கத்தரிக்கா'
'முத்தின கத்தரிக்கா'
'முத்தின கத்தரிக்கா'
இயக்குநர் சுந்தர்.சி யிடம் பல படங்களில், இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் வெங்கட் ராகவன். இவர் தற்போது சுந்தர்.சி நாயகனாக நடிக்க 'முத்தின கத்தரிக்கா'என்ற பெயரில் ஒரு படத்தினை இயக்கிவருகிறார். அதனைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். இயக்குநர் வெங்கட் ராகவன்; நான் சுந்தர்.சி சாருடன் பல படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளேன்.
அவர் நடித்தபடங்களின் காட்சிகளையும் நான் இயக்கியிருக்கிறேன். நான் இயக்குனராக மாறிய பின்,எனக்கு இது முதல் படம்,முதல் ஹீரோ, முதல் காட்சி என்கிற ஒரு உணர்வே இல்லை. எல்லாரும் ஒரு குடும்பமாக இணைந்து புதியதாக ஒரு படம் செய்கிறோம் என்கிற உணர்வு தான் என்னிடமிருக்கிறது. சுந்தர்.சி சார் என்னிடம்,விரைவாக ஒரு படத்தினை இயக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்.
படம் இயக்கலாம் என்ற முடிவெடுத்தபின் அவரையே நாயகனாக நடிக்குமாறு கேட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். அவருடைய அவ்னி மூவிஸ் மூலமாக இந்தப் படத்தினை அவர் தான் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது பேய்க்கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா ஜானர்-லும் படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவராத ஒரு ஜானர்-ல் படம் இயக்கலாம் என யோசித்தபோது அரசியல் களத்தினை தேர்வு செய்தோம். மலையாளத்தில் வெளிவந்து’ சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "வெள்ளிமூங்கா" படத்தினை நானும்,சுந்தர்.சி சாரும் பார்த்தோம். இருவருக்கும் பிடித்திருந்தது.
இதையே தமிழில் ரீமேக் செய்யலாம் என்று இருவரும் முடிவு செய்தோம். மலையாளப் படத்தினை முழுமையாக அப்படியே ரீமேக் செய்யாமல் அந்தப்படத்திலிருந்து ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப பல மாறுதல்கள் செய்து,அனைவருக்கும் பிடிக்கும் ஒரு படமாக எடுத்திருக்கிறோம். அதாவது அந்தப்படத்திலிருந்து ஒரு கோடு மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் ஒரு ரோடு போட்டிருக்கிறோம். மலையாளப் படத்தின் இயக்குநர் இந்தப்படத்தினைப் பார்த்தால் இப்படி கூட எடுக்கலாமா?என்று யோசிக்கும் அளவிற்கு 'முத்தின கத்திரிக்கா' படத்தினை எடுத்துள்ளோம். நான் இயக்குனர் ஆவதற்கு முன்பே என்னிடம் ஒரு ஐடியா இருந்தது. ஒரு மாடர்ன் பாக்யராஜ் சார் மாதிரி என் படத்தில் எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்க வேண்டும் என்பது தான் அது. அதை இந்தப் படம் முழுவதிலும் பயன்படுத்தி இருக்கிறேன். நான் படத்தின் காட்சிகளை, வசனங்களை எழுதி முடித்த பின் சுந்தர்.சி சாரிடம் காண்பித்தேன். என்னை வெகுவாகப் பாராட்டினார். மேலும் உடனடியாக படப்பிடிப்பினை ஆரம்பிக்கலாம் என்று சொன்னார். அவர் சொல்லிய ஒரு வாரத்தில் நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டோம் .
நடிகர்,மற்றும் தயாரிப்பாளர் என்று வெவ்வேறு நபர்கள் இருந்தால்,அவர்களிடம் தனித்தனியாக நான் சென்று படத்தினைப் பற்றி,காட்சிகளைப் பற்றி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் இந்தப்படத்தில் இரண்டும் சுந்தர்.சி சாராக இருப்பதால் எனக்கு எளிதாக இருந்தது. படத்தில் ஒரு அரசியல்வாதியின் இயல்பான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். படத்தின் தலைப்பிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும். ரொம்ப வருடங்கள் திருமணமாகாமல் பேச்சிலராக இருக்கும் இளைஞர்களைத் தான் 'முத்தின கத்திரிக்கா'என்று சொல்வார்கள். கதாநாயகனை இமிடேட் செய்யக்கூடிய இந்தத் தலைப்பிற்கு ஓ.கே சொன்னதற்கே சுந்தர்.சி சார்க்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். மேலும் காட்சிஅமைப்பிலோ, வசனங்களிலோ எந்த ஒரு இடையூறும் செய்யாமல் என்னை சுதந்திரமாகச் செயல்படவிட்டார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பினை நாங்கள் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், குற்றாலம் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நடத்தினோம். 40வயதான அரசியல்வாதி ஒருவர் அவர் வாழ்க்கையிலும் சரி,அரசியலிலும் சரி எதுவும் சாதிக்கமுடியாமல் இருக்கையில்,ஒரு கட்டத்தில் ஒரு பெண் மூலமாக அவரது வாழ்வில் நடைபெறும் ஒரு நிகழ்வு அவரை,அரசியலில், சொந்த வாழ்க்கையில் எந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பது தான் கதை. படம் முழுவதும் இந்த ஒரு கதாபத்திரத்தின் செயல்பாடுகளைப் பற்றியே தானிருக்கும். அவரை ஏன் மக்கள் வெறுக்கிறார்கள்,அவருடைய எதிரிகள் யார்?அவரால் ஏன் அரசியலில் சாதிக்கமுடியவில்லை என ஒவ்வொரு காட்சியும் அதனைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருக்கும். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கின்றது. பாடல் காட்சிகளும் கதையோடு இணைந்து வரும்படியாகப் படமாக்கியுள்ளோம். கதாநாயகனுடன் இணைந்து ஒரு நகைச்சுவை நடிகர்,படம் முழுவதும் தோன்றுவார். அந்தக் கதாபத்திரத்தில் நடிகர் சதீஷ் நடித்துள்ளார். அவருடைய அந்த கதாபாத்திரத்திற்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அவர் மட்டுமல்ல,படத்தில் ஒரு நகைச்சுவைப் பட்டாளமே உள்ளனர். அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு மெருகூட்டியுள்ளனர்.
படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு தந்தனர். கதாநாயகி பூனம் பஜ்வா மற்றும், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர், ஸ்டண்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர் என,என்னோடு பணியாற்றிய அனைத்து டெக்னீசியன்களும் விரைவாகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு இடத்திலும் படத்தின் தரம் குறையாமல் பார்த்துக் கொண்டனர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை,யாருடைய மனதையும் புண்படுத்தாத வகையில்,அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை இழையோடியிருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.
சண்டைக்காட்சியானாலும்,செண்ட்டிமெண்ட் காட்சியானாலும்,காதல் காட்சியானாலும் அதில் ஒரு நகைச்சுவை இருக்கும். ரசிகர்கள் அனைத்துக் காட்சிகளிலும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். அது நிச்சயமாக நிறைவேறும். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு மகிழக்கூடிய ஒரு முழுமையான நகைச்சுவைப் படம் இது. என்று இயக்குநர் வெங்கட் ராகவன் கூறினார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 3 days ago |
-
புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பஸ் நிலையம் இன்று திறப்பு
01 May 2025புதுச்சேரி, புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று (மே 2) திறக்கப்படுகிறது.
-
பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் வருமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
01 May 2025திருச்சி: கோடை விடுமுறை முடிந்து வெயிலைப் பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
-
கேரளா, தமிழக பகுதிகளில் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
01 May 2025சென்னை: இந்த மாத இறுதியில் கேரளா, தமிழக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும், மே 15-ம் தேதி மத்திய வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகு
-
54-வது பிறந்தநாள்: நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து
01 May 2025சென்னை, 54-வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அஜித்துக்கு இ.பி.எஸ். வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
போர் பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வ
-
ஆந்திராவில் பயங்கரம்: வீடு மீது கார் மோதிய விபத்தில் ஐந்து மருத்துவ மாணவர்கள் பலி
01 May 2025நெல்லூர், ஆந்திராவில் வீடு மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஓரிரு நாட்களில் வெளியாகிறது: 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள்
01 May 2025சென்னை, 10, பிளஸ் 2 சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது: டி.ஜி.பி. அறிக்கை தாக்கல்
01 May 2025சென்னை, அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவையற்றது என டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ: இஸ்ரேலில் தேசிய அவசர நிலை
01 May 2025ஜெருசலேம், ஜெருசலேம் அருகே பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டதால் இஸ்ரேலில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அட்சய திருதியை நாளில் தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை
01 May 2025சென்னை: அட்சய திருதியை நாளில் 27,440 பத்திரப்பதிவின் மூலம் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் என்னை பின்தொடர்வதால் பா.ஜ.க. தலைவர்களுக்கு பொறாமை: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
01 May 2025ஐதராபாத், பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பின் தொடர்வதினால் உள்ளூர் பா.ஜ.க. தலைவர்கள் பொறாமைப் படுகிறார்கள் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார்.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்: ராகுல் காந்தி
01 May 2025புதுடெல்லி, சாதிவாரி கணக்கெடுப்புஅறிவிப்பை வரவேற்றுள்ள, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதற்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதலில் தொடர்பில்லை: பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு
01 May 2025இஸ்லாமாபாத், பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் மீண்டும் மறுத்துள்ளது.
-
கரும்புக்கு ரூ.355 ஆதாய விலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 May 2025புதுடில்லி, கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.355 வீதம் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்துக்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
பஹல்காமுக்கு முன்பு மூன்று இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்? விசாரணையில் திடுக் தகவல்
01 May 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் 3 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
அமலுக்கு வந்த ஏ.டி.எம். கட்டண உயர்வு
01 May 2025புதுடெல்லி, ஏ.டி.எம். கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அங்கோலா அதிபர் இந்தியா வருகை
01 May 2025அங்கோலா: அங்கோலா நாட்டு அதிபர் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு எச்சரிக்கை
01 May 2025சென்னை, தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி கோரிக்கை
01 May 2025புதுடில்லி, பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்குமாறு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பஹல்காம் தாக்குதல்: விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க பாக்.கிற்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
01 May 2025வாஷிங்டன், பஹல்காம் தாக்குதல் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியது.
-
சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
01 May 2025சென்னை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை முடிவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
01 May 2025சென்னை, சென்னையில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் திருமண மண்டபம், பள்ளி வகுப்பறை, கல்லூரி கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
-
இ-பாஸ் சர்வரில் சிக்கல்: நீலகிரி சுற்றுலா பயணிகள் அவதி
01 May 2025நீலகிரி: இ-பாஸ் சர்வரில் திடீரென சிக்கல் ஏற்பட்டதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் இ-பாஸ் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.
-
ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலி
01 May 2025கீவ்: உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
-
மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம்: வேவ்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
01 May 2025மும்பை, மற்ற நாடுகளின் கலாச்சாரங்களை மதிப்பதே நமது கலாச்சாரத்தின் பலம் என்று மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாடு 2025-இல் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.