எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஏப்- 4 - ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தூத்துக்குடியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.மனோகரன், விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் அ.தி.மு.க. வேட்பாளர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜா,ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது பேசியதாவது: இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களான எனது உயிரினும் மேலான எனதருமை உடன்பிறப்புக்களே, வாக்காள பெருமக்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாக்காள பெருமக்களே தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையோடு உங்கள் முன் வந்திருக்கிறேன். ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான பொன்னான வாய்ப்பு இந்த தேர்தல் மூலம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. கருணாநிதியின் குடும்பத்தினரும், அவரது அமைச்சர்களின் குடும்பங்களும் தமிழகத்தை சூறையாடி உலக பணக்காரர்களாக மாறியிருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதுதான் நான் உங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை. கடுமையான மின்வெட்டு, எந்த பொருளையும் வாங்க முடியாத விலையேற்றம், ஊர்ஊருக்கு ரவுடிகள் சாம்ராஜ்யம், மணல்கொள்ளை, அரிசி கடத்தல், சமூகத்தில் யாருமே எந்த தொழிலும் செய்யமுடியாதபடி அச்சுறுத்தல், அடி,தடி, கட்டப்பஞ்சாயத்து என்று அராஜகம் தலைவிரித்தாடும் சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.
எனவே இந்த தேர்தலில் தமிழக்தை மீட்டெடுக்கவில்லையென்றால் எப்போது மீட்டெடுக்க போகிறோம் என்று நல்லோர்களின் மனசாட்சி நம்மை பார்த்து கேட்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல்மூலம் ரூ.1லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளையடித்த கருணாநிதி மற்றும் தி.மு.க.வினருக்கும் தமிழகம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது என்று நாடே காத்திருக்கிறது. தேசவிரோத சக்திகளோடு கைகோர்த்து கொண்டு கருணாநிதி குடும்பத்தினர் நடத்தியிருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திடவேண்டும். தானும் தனது குடும்பத்தாரும் மக்களை சுரண்டி எப்படி சம்பாதிக்கவேண்டும் என்று திட்டமிடுபவர் கருணாநிதி.
இதற்கு எடுத்துகாட்டாக ரூ.2ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை இலவசமாக வழங்கிவிட்டு அந்த குடும்பத்திலிருந்து கேபிள் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1000 அவரது குடும்பத்தினர் பெறுகின்றனர். கருணாநிதியின் தந்திரத்தையும், சூழ்ச்சியையும் விளக்க இது ஒன்றே போதும். சுதந்திர போராட்டத்தின் மூலம் வெள்ளையர்களை போராடி விரட்டினோம், இப்போது கருணாநிதி குடும்பம் என்ற கொள்ளை கும்பலை தேர்தல்மூலம் விரட்டியடிக்கவேண்டும். கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் உலக பணக்காரர்களின் வரிசையில் 310வது இடத்தில் இருக்கிறார். ஒருவருக்கே இவ்வளவு சொத்து இருக்கிறது என்றால் அவரது மொத்த குடும்பத்தையும் சேர்த்து பார்த்தால் உலக உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக கருணாநிதியின் குடும்பம் இருக்கும். தமிழகம் தாழ்ந்த நிலைக்கு சென்றதற்கு இது போன்ற ஊழல்தான் காரணம்.
இந்த தேர்தலில் கின்னஸில் இடம்பெறும் வகையில் தி.மு.க. போட்டியிடும் இடத்தில் எல்லாம் டெபாசிட் இழக்க செய்யவேண்டும். இதுவே உங்களை சுரண்டிய மனிதருக்கு சரியான தண்டனை மக்கள் கொடுத்துள்ளனர் என்று உலகம் உங்களை பாராட்டும். புரட்சித்தலைவர் நல்லாசியோடு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை போக்க 1வது மற்றும் 2வது ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 4வது குடிநீர்திட்டம் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம் அமைக்கப்படும், கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் நலனை பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், எந்திர மீன்பிடி படகு வாங்க மானியம் வழங்கப்படும், தூத்துக்குடியில் 13 இடங்களில் குளிர்பதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும்.
மீன்பிடி இல்லாத 45 நாட்கள் மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.2ஆயிரம் நிதி வழங்கப்படும், பருவகாலமான 4 மாதங்கள் மீன்பிடி இல்லாத நேரத்தில் மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.4ஆயிரம் நிதி வழங்கப்படும், இலங்கை அகதிகளுக்கும் இலவச திட்டங்கள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும், திருச்செந்தூர் நாசரேத் பகுதியில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும், மணல் மாதாகோவில் சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தமிழகத்தில் பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும்.
மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும், நிலமற்ற ஏழைகளுக்கு 3செண்ட் நிலம் வழங்கப்படும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 3லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1.80லட்சம் செலவில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும், கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்ட்டு மக்களுக்கு குறைந்தகட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும், விவசாயிகளுக் இலவச சொட்டு நீர் பாசானம் அமைத்து கொடுக்கப்படும், விவசாய இடுபொருட்கள், விதைகள் தங்ளுபடி விலையில் வழங்கப்படும், ஏழை எளிய மக்களிடமிருந்து கருணாநிதி குடும்பம் மற்றும் ரவுடி கும்பல்களால் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும், ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும், ரவுடி கும்பல்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி
21 Oct 2025டோக்கியோ : ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.