எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஏப்- 4 - ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தூத்துக்குடியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.மனோகரன், விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் அ.தி.மு.க. வேட்பாளர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜா,ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது பேசியதாவது: இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களான எனது உயிரினும் மேலான எனதருமை உடன்பிறப்புக்களே, வாக்காள பெருமக்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாக்காள பெருமக்களே தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையோடு உங்கள் முன் வந்திருக்கிறேன். ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான பொன்னான வாய்ப்பு இந்த தேர்தல் மூலம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. கருணாநிதியின் குடும்பத்தினரும், அவரது அமைச்சர்களின் குடும்பங்களும் தமிழகத்தை சூறையாடி உலக பணக்காரர்களாக மாறியிருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதுதான் நான் உங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை. கடுமையான மின்வெட்டு, எந்த பொருளையும் வாங்க முடியாத விலையேற்றம், ஊர்ஊருக்கு ரவுடிகள் சாம்ராஜ்யம், மணல்கொள்ளை, அரிசி கடத்தல், சமூகத்தில் யாருமே எந்த தொழிலும் செய்யமுடியாதபடி அச்சுறுத்தல், அடி,தடி, கட்டப்பஞ்சாயத்து என்று அராஜகம் தலைவிரித்தாடும் சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.
எனவே இந்த தேர்தலில் தமிழக்தை மீட்டெடுக்கவில்லையென்றால் எப்போது மீட்டெடுக்க போகிறோம் என்று நல்லோர்களின் மனசாட்சி நம்மை பார்த்து கேட்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல்மூலம் ரூ.1லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளையடித்த கருணாநிதி மற்றும் தி.மு.க.வினருக்கும் தமிழகம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது என்று நாடே காத்திருக்கிறது. தேசவிரோத சக்திகளோடு கைகோர்த்து கொண்டு கருணாநிதி குடும்பத்தினர் நடத்தியிருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திடவேண்டும். தானும் தனது குடும்பத்தாரும் மக்களை சுரண்டி எப்படி சம்பாதிக்கவேண்டும் என்று திட்டமிடுபவர் கருணாநிதி.
இதற்கு எடுத்துகாட்டாக ரூ.2ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை இலவசமாக வழங்கிவிட்டு அந்த குடும்பத்திலிருந்து கேபிள் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1000 அவரது குடும்பத்தினர் பெறுகின்றனர். கருணாநிதியின் தந்திரத்தையும், சூழ்ச்சியையும் விளக்க இது ஒன்றே போதும். சுதந்திர போராட்டத்தின் மூலம் வெள்ளையர்களை போராடி விரட்டினோம், இப்போது கருணாநிதி குடும்பம் என்ற கொள்ளை கும்பலை தேர்தல்மூலம் விரட்டியடிக்கவேண்டும். கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் உலக பணக்காரர்களின் வரிசையில் 310வது இடத்தில் இருக்கிறார். ஒருவருக்கே இவ்வளவு சொத்து இருக்கிறது என்றால் அவரது மொத்த குடும்பத்தையும் சேர்த்து பார்த்தால் உலக உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக கருணாநிதியின் குடும்பம் இருக்கும். தமிழகம் தாழ்ந்த நிலைக்கு சென்றதற்கு இது போன்ற ஊழல்தான் காரணம்.
இந்த தேர்தலில் கின்னஸில் இடம்பெறும் வகையில் தி.மு.க. போட்டியிடும் இடத்தில் எல்லாம் டெபாசிட் இழக்க செய்யவேண்டும். இதுவே உங்களை சுரண்டிய மனிதருக்கு சரியான தண்டனை மக்கள் கொடுத்துள்ளனர் என்று உலகம் உங்களை பாராட்டும். புரட்சித்தலைவர் நல்லாசியோடு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை போக்க 1வது மற்றும் 2வது ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 4வது குடிநீர்திட்டம் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம் அமைக்கப்படும், கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் நலனை பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், எந்திர மீன்பிடி படகு வாங்க மானியம் வழங்கப்படும், தூத்துக்குடியில் 13 இடங்களில் குளிர்பதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும்.
மீன்பிடி இல்லாத 45 நாட்கள் மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.2ஆயிரம் நிதி வழங்கப்படும், பருவகாலமான 4 மாதங்கள் மீன்பிடி இல்லாத நேரத்தில் மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.4ஆயிரம் நிதி வழங்கப்படும், இலங்கை அகதிகளுக்கும் இலவச திட்டங்கள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும், திருச்செந்தூர் நாசரேத் பகுதியில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும், மணல் மாதாகோவில் சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தமிழகத்தில் பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும்.
மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும், நிலமற்ற ஏழைகளுக்கு 3செண்ட் நிலம் வழங்கப்படும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 3லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1.80லட்சம் செலவில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும், கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்ட்டு மக்களுக்கு குறைந்தகட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும், விவசாயிகளுக் இலவச சொட்டு நீர் பாசானம் அமைத்து கொடுக்கப்படும், விவசாய இடுபொருட்கள், விதைகள் தங்ளுபடி விலையில் வழங்கப்படும், ஏழை எளிய மக்களிடமிருந்து கருணாநிதி குடும்பம் மற்றும் ரவுடி கும்பல்களால் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும், ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும், ரவுடி கும்பல்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.