முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மாணவர்களை மயக்கிஉறவு கொண்ட டீச்சருக்கு 2 ஆண்டுசிறை

செவ்வாய்க்கிழமை, 25 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

லண்டன், செப், 25- மெரிக்காவில் 23 வயதேயான ஆசிரியை ஒருவர் தன்னிடம் படித்து வரும் 2 மாணவர்களை மயக்கி அவர்களுடன் உறவு வைத்து சிக்கியுள்ளார். அந்த மாணவர்களுக்கு மது, போதைப் பொருட்களைக் கொடுத்து தனக்கு அடிமையாக அவர் மாற்றி வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த ஆசிரியைக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியையின் பெயர் சாரா ரூதர்போர்ட். அவர் மறுபடியும் ஆசிரியையாக பணியாற்றவும் கோர்ட் நிரந்தரத் தடை விதித்துள்ளது. ரூதர்போர்ட் மேற்கு விர்ஜீனியாவில் உள்ள பிலிப்பி என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அப்போது தனது வகுப்பைச் சேர்ந்த 18 வயதுக்கு குறைவான இரு மாணவர்களை மயக்கி விட்டார். பின்னர் அவர்களுடன் செக்ஸ் உறவை ஏற்படுத்திக் கொண்டார். அவர்கள் தன்னை விட்டுப் போய் விடாமல் இருப்பதற்காக அவர்களுக்கு மது மற்றும் மரிஜூவானா போதைப் பொருட்களைக் கொடுத்து அதற்குப் பழக்கப்படுத்தி அடிமையாக மாற்றினார். உறவில் ்டுபடும்போது மாணவர்களுக்கு இதைக் கொடுத்து அவர்களை தனது செக்ஸ் அடிமைகளைப் போல பயன்படுத்தி வந்துள்ளார். இந்த இரு மாணவர்களையும் தினசரி ஒருவர் வீதம் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார் இந்த ஆசிரியை. தனது வீட்டில் வைத்தே இந்த செயல்களை அவர் அரங்கேற்றியுள்ளார். இதை வெளியில் சொன்னால் உங்களுக்குத்தான் சிக்கல். ஏனென்றால் நான் ஆசிரியை, எப்படியாவது தப்பி விடுவேன். ஆனால் நீங்கள் மாணவர்கள், படிப்பு பாழாகி விடும் என்றும் மிரட்டி வைத்திருந்தாராம் இந்த ஆசிரியை. அக்டோபர் 1ம் தேதி முதல் இவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை தொடங்குகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்