எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.12 - அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா இறுதி நாளான நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து நிறைவு செய்தார்.
இது பற்றி விபரம் வருமாறு:-
ஏற்கனவே சென்னையில் 2 கட்ட பிரச்சாரத்தை செய்த ஜெயலலிதா நிறைவு நாளான நேற்று சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து நேற்று மாலை 5 மணிக்கு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே.13-ந் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க., தே.மு.தி.க. சி.பி.எம்., சி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுது. கடந்த மார்ச் 24-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவங்கிய ஜெயலலிதா தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார். சென்னையில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக 2 கட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட ஜெயலலிதா பிரச்சாரத்தின் இறுதி நாளாளன நேற்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்காக திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் மதியம் 12 மணி அளவில் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா கடற்கரை சாலை வழியாக ராயபுரம் கல்மண்டபம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
பின்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக திருவொற்றியூர் தேரடியை அடைந்த ஜெயலலிதா அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன்பின் தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம் வழியாக பிரச்சாரம் செய்து கொருக்குப்பேட்டையில் ஆர்.கே.நகர் வேட்பாளர் வெற்றிவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு எம்.கே.பி.நகர், அசோக் பில்லர் அருகே சி.பி.எம். வேட்பாளர் ஆர்.சவுந்தர்ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பின்பு பேசின் பாலம் அருகே வாக்கு சேகரித்த ஜெயலலிதா மின்ட் தங்க சாலை வழியாக பிராட்வே செல்லும் பிரகாசம் சாலையில் துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு பாரிமுனை கடற்கரை சாலை வழியாக நொச்சிகுப்பம் பின்புறம் உள்ள டுமில் குப்பத்தில் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ராஜலட்சுமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தன் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.
ஜெயலலிதா செல்லும் வழியெங்கும் பொதுமக்களும், பெண்களும், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் திரளாக நின்று உற்சாகமாக வரவேற்றனர். வழியெங்கும் கட்சி சின்னங்கள், கொடிகள், பதாகைகளை ஏந்தி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல இடங்களில் தொண்டர்கள் பூங்கொத்துக்களை வழங்கியும், ஆரத்தி தட்டு மற்றும் பூரண கும்ப மரியாதையும் அளித்து வரவேற்றனர்.
ஒளதுறைமுகம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா வந்தபோது அர்சகர்கள் திரண்டு வேதம் முழங்க வாழ்த்து தெரிவித்தனர். பல இடங்ளில் கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளித்தனர். ஐஸ்ஹவுஸ் பகுதியிலும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நோதாஜி நகரிலும் ஏராளமான முஸ்லீம் பெண் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் வழக்கறிஞர்கள் கை கோர்த்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். ராயபுரம் தொடங்கி திருவொற்றியூர் வரை வழியெங்கும் மீனவர்களும், மீனவ சமுதாய பெண்களும் திரளாக சாலையோரம் நின்று ஜெயலலிதாவிற்கு வரவேற்பு அளித்தனர்.
மீனவர்களுக்கு படகுகள் வாங்க மானியத்துடன் கடன், மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்ட 45 நாட்களுக்கு உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி தருவது போன்ற அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தபோது மீனவர்கள் பெரும் கரகோஷத்துடன் வரவேற்றனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஊதியத்தை வழங்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா தமிழகத்தை காக்க ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை காக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக செய்வோம் என்று பதிலளித்தனர்.
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குடிதண்ணீர் பிரச்சினை பற்றி ஜெயலலிதா பேசியதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரச்சாரத்திற்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஜெயலலிதா மக்கள் வெள்ளத்தில் நீத்தியபடி மெதுவாகதான் செல்ல முடிந்தது. மக்கள் வெள்ளத்தை விளக்கி வாகனத்தை செலுத்த பாதுகாவலர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மைலாப்பூரில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வந்தபோது மீனவ மக்கள் கடலுக்குள் படகுகளில் பெரிய பெரிய கட்சிக்கொடிகளை கட்டி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
27 Jan 2026மதுரை: ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
27 Jan 2026மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
27 Jan 2026சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
27 Jan 2026சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளத
-
கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
27 Jan 2026தஞ்சாவூர், தி.மு.க.
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
27 Jan 2026சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
-
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
27 Jan 2026சென்னை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.
-
தென்தமிழகத்தில் ஐந்து நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
27 Jan 2026சென்னை: தென்தமிழகத்தின் வரும் பிப்.1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தங்களின் தாய் வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கும்படி கோரிக்கை
27 Jan 2026டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
-
கர்நாடகா மாநிலத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: சித்தராமையா, சிவக்குமார் கைது
27 Jan 2026பெங்களூரு: கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்
27 Jan 2026டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
த.வெ.க.வுடன் ராமதாஸ் கூட்டணியா?
27 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்
27 Jan 2026சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jan 2026சென்னை, பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு என்று உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது என்ற
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி: இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
இன்றைய ராசிபலன்
27 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Jan 2026- நெல்லை நகரம் லட்சுபி நரசிங்க பெருமாள் வருசாபிசேகம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தந்த பல்லக்கு, மாலை தங்க குதிரை வாகனம், அம்பாள் தங்க பல்லக்கு
-
இன்றைய நாள் எப்படி?
27 Jan 2026


