எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.8 - நடிகர் கமல்ஹாசனின், ``விஸ்வரூபம்'' படம் டி.டி.எச் தொழில்நுட்பத்தில் வெளியிடப்படுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தமிழக முதல்வர் தலையிட்டு திரையுலகை காப்பாற்றவேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:-
நம்முடைய திரைஉலகத்தின் மூத்த சகோதரியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் நாட்டிலுள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகம் சார்பிலும் வைக்கும் பணிவான வேண்டுகோள்:
பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கும், திரையரங்க உரிமையாளர்களின் சார்பாக அபிராமி ராமநாதனின் விடுக்கும் செய்தி:-
நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் தன் ``விஸ்வரூபம்''படத்தை டிடிஎச் மூலம் திரையிடுவது பற்றி பல சந்தேங்கள் இருந்ததால் மதுரையில் இருந்த கமல்ஹாசன் அவர்களுடன் டெலி கான்பரன்சிங் மூலம் பல சந்தேகங்கள் கேட்டனர். அதில் அவர் கொடுத்த விளக்கங்கள் கீழ் வருமாறு:-
1. விஸ்வரூபம் படம் டிடிஎச் முறையில் ஒரே ஒரு முறைதான் திரையிடப்படும்.
2. அப்படி திரையிடும்போது திரையரங்குகள் திரையிடுவதற்கு ஒரு நாள் முன்பு இரவு 9.00 மணிக்கு மேல் திரையிடப்படும்.
3. இதற்கு ஒரு டிடிஎச் கருவி மூலம் பார்ப்பதற்கு ரூ. 1000/- வசூல் செய்யப்படும்.
4. இது அவருடைய படத்திற்கு டிரைலர் போன்று இருக்கும். இதைப் பார்ப்பதற்கு திரளாக மக்கள் வருவார்கள் என்று கூறினார்.
அதன் பிறகு அவர் கூறியதை வைத்து விவாதித்த போது மேலும் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின. அவற்றுள் சில:
1. ஒரு டிடிஎச் கருவிக்கு ஒரு குடும்பம் தான் பார்ப்பார்கள் என்பது உறுதி கிடையாது.
2. இந்த டிடிஎச் முறையில் ஐபிஎல் கிரிக்கெட்டை ஹோட்டல்கள் மற்றும் கிளப்கள் முதலியவற்றில் காண்பிப்பது போல் இதையும் காண்பித்து விட்டால் ஒவ்வொரு டிடிஎச்சையும் பல நூறு பேர்கள் பார்ப்பார்கள். உதாரணமாக ஒரு கிளப்பில் இப்படத்தை திரையிட்டால் பெரிய கிளப்களில் 3000, 4000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வந்து இதை பார்ப்பார்கள். டிவி க்களும் தற்போது 52 இஞ்ச்களில் கிடைக்கிறது. அத்துடன் இந்த டிடிஎச் கம்பெனிகாரர்கள் ஒரு டிடிஎச் கருவிக்கு மூன்று டிவி பார்ப்பது போல் உபகரணங்கள் கொடுக்கிறார்கள். இப்படியெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் நாடு முழுவதும் பல கோடி பேர்கள் படம் பார்த்து விடுவார்களே?
3. இப்படி நடந்தால் திரையரங்கங்கள் பக்கம் யார் வருவார்கள் என்ற பயம் அனைவருக்கும் வந்து விட்டது. திரையுலகின் முன்னோடியாகச் செயல்படும் கமலஹாசன் இத்திரைத்துறையை நேசிப்பவர். ஆனால் இவர் ஒரு காட்சி மட்டும் தான் என்று உறுதி அளிக்கிறார். ஆனால் இவருக்குப் பின் வரும் மற்ற பெரிய படங்கள் அனைத்திற்கும் நிறைய காட்சிகளை கொடுத்து விட்டால் என்ன செய்வது?
4. இப்படி டிடிஎச் கம்பெனிகார்கள் சிறுமுதலீட்டுப் படங்களை வாங்கப் போவதில்லை.
5. திரையரங்கங்கள் இந்த பாதிப்பினால் ஒவ்வொன்றாக மூடி விட்டால் பிறகு சிறு முதலீட்டுப் படங்களே இல்லாமல் போய் விடுமே?
6. இப்படி பல பயங்கள் எங்கள் எல்லோர் மனதிலும் ஏற்பட்டதால் எங்கள் எல்லோருடைய மனதிலும் ஏற்பட்ட ஒரு மித்த முடிவு என்ன வெனில் கமல்ஹாசனை எங்கள் நிர்வாகத்தினர் சந்தித்து இந்த முயற்சியை கைவிடுமாறு கேட்டுக் கொள்ள இருக்கிறோம். இம்முறை உலகத்திலேயே எங்குமில்லை என்பது உண்மை. கமல்ஹாசன் எங்கள் வேண்டுகோளை ஏற்று இந்த முறையை கைவிட்டு விடுவார் என்று நம்புகிறோம்.
7. திரையரங்கங்களை பொருத்த வரை தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் ஒன்று கூடி தான் எந்த ஒரு முடிவும் எடுப்போம்.
திரைத்துறை நன்றாக வாழ வேண்டும் என்று அக்கறையுடன் இருக்கும் நமது முதலமைச்சர் ஜெயலலிதா இதில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வைக் காண வேண்டும், எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த