எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.18 - தன்னிச்சையான செயல்பாடு காரணமாக தங்கபாலுவின் பதவி பறிபோகிறது. தமிழக காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல், அடிதடி, அறிக்கை போர் என்று எல்லாம் நடக்கும். தமிழக காங்கிரஸ் வரலாற்றிலேயே நகைப்புக்குரிய ஒரு தலைவர் இருந்தது கிடையாது. காமராஜர் முதல் பல்வேறு தலைவர்கள் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் தனது மனைவிக்கு ஓட்டு இருப்பது கூட தெரியாத ஒரு தலைவர் தமிழ்நாட்டில் உள்ளார் என்றால் அது தங்கபாலுவாகத்தான் இருக்க முடியும்.
கூட்டணி கட்சி என்ற முறையில் நட்பு பாராட்டுவது நாகரீகம். ஆனால், கூட்டணி கட்சியான தி.மு.க.விலேயே ஒரு கோஷ்டி தலைவராக மாறியது தான் தங்கபாலுவின் சாதனை.
5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஒட்டி உறவாடி மக்களைப்பற்றி கவலைப்படாத தங்கபாலு, தி.மு.க. தலைமையின் மூலம் தனது தலைவர் பதவியை காப்பாற்றிக்கொள்வதில் குறியாக இருந்தார். தமிழக காங்கிரசின் எந்த கோஷ்டியும் தங்கபாலுவை கண்டு கொண்டதில்லை. ஆனாலும் தங்கபாலுதான் தலைவர்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தங்கபாலு தனது செல்வாக்கை பயன்படுத்தி கூட்டணி பற்றி பேசப்பட்ட ஐவர் குழுவில் பிரச்சனைக்குரிய இளங்கோவன் போன்றோரை இடம்பெறாமல் செய்தார்.
பின்பு, தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை இழுபறி நடந்தபோது தி.மு.க.வை ஊழல்கட்சி என்று விமர்சித்தார். மறுநாள் சேர்ந்தவுடன் வெற்றி கூட்டணி என்றார். கூட்டணியில் 63 தொகுதிகள் முடிவானதும் வேட்பாளர் ஒதுக்குவதில் ஐவர் குழுவை கலந்தாலோசிக்காமல் தனியொருவராக 63 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு செய்தார். இவரது பட்டியலை நிராகரிக்க வேண்டுமென்று சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் உள்ளிட்டோர் சோனியாவிடம் முறையிட்டனர்.
ஆனாலும், தங்கபாலுவின் பட்டியல் வெளியானது. அதன்பிறகு தான் தமிழக காங்கிரஸில் வெட்டு, குத்து அதிகமானது. போட்டி வேட்பாளர்கள், மோதல், மறியல், கொடும்பாவி எரிப்பு என தொடர்ந்தது. தேர்தல் முழுதும் இந்த போராட்டங்கள் தொடர்ந்து, வாக்குப்பதிவு வரையும் கூட நீடித்தது. இதனால் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் தனது கட்சிக்குள் உள்ள போட்டி வேட்பாளர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது.
தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே போய், தனது மனைவியை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக்கினார். டம்மி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவரான தன் பெயரையே முன்மொழிந்துகொண்டார். மனைவியின் படிவத்தை சரிவர நிரப்பாததால் தள்ளுபடி ஆகி, டம்மி வேட்பாளர் தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளரானார். இதே போல் கிருஷ்ணகிரி மற்றும் விளவங்கோடு தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குழப்பம். ஒரு தலைவர் சட்டசபை தேர்தலில் நிற்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் சிதம்பரம், வாசன், இளங்கோவனின் பங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அதிரடியாக கராத்தே தியாகராஜன் உள்பட 18 பேர்களை காங்கிரஸ் கட்சியை விட்டு தங்கபாலு நீக்கினார்.
இது கட்சி விரோத செயல். நீக்குவதற்கு தங்கபாலுக்கு உரிமை இல்லை என்று அனைவரும் குரல் கொடுத்தனர். நீக்கப்பட்டவர்களில் வாசன், சிதம்பரம், இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்கள் இருந்தனர். ஐவர்குழுவில் இருந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கட்சி விதிகளை காரணம் காட்டி தங்கபாலு கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். யாரையும் நீக்க தங்கபாலுக்கு உரிமையில்லை. வேட்பாளர் தேர்விலும் தங்கபாலு தன்னிச்சையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.
தமிழக காங்கிரஸ் தி.மு.க.விடம் 63 இடங்களை போராடி பெற்றது. அதை ஒழுங்காக அறுவடை செய்யாமல் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடி செய்ததால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 8 இடங்கள் பெற்றால் பெரிய விஷயம் என்ற செய்தி சோனியாகாந்தி வரை எடுத்து சொல்லப்பட்டு இருப்பதால் தங்கபாலுவை நீக்கும் முடிவுக்கு சோனியா வந்துவிட்டாராம்.
தேர்தல் முடிவும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அமையும் என்பதால் இனியும் தி.மு.க.வை கூட்டணியில் வைத்துக்கொள்ள சோனியா விரும்பவில்லை. ஆகவே, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு வரலாம். அது ஜி.கே.வாசன் அல்லது சுதர்சன நாச்சியப்பனாக இருக்கலாம் என்ற கருத்து காங்கிரசுக்குள் ஓடுகிறது.
எது எப்படி இருந்தாலும் தங்கபாலுவுக்கு கல்தா உறுதி என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சு பலமாக உள்ளது. உடனே அறிவிப்பு வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-11-2025.
15 Nov 2025 -
திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பக்தர்கள் அவதி
15 Nov 2025புதுச்சேரி : திருநள்ளாறு கோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
15 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
-
பீகார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம்
15 Nov 2025பாட்னா : பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
15 Nov 2025சென்னை : எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.
-
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுத்திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
15 Nov 2025சென்னை, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவுத்திட்டத்தை சனிக்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், டிசம்பர் முதல் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி,
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டங்களுக்கு த.வெ.க.வையும் அழைக்க வேண்டும்;: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம்
15 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழு
-
4 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
15 Nov 2025காபுல், ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
-
பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறி: நடவடிக்கை எடுக்க வி.எச்.பி. வலியுறுத்தல்
15 Nov 2025சென்னை : தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதையடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வி.எச்.பி. வலியுத்தினார்.
-
வேடந்தாங்கலில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
15 Nov 2025சென்னை, வேடந்தாங்கலில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன.
-
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
15 Nov 2025சென்னை, பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் மூலம் தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்கள் வெளிப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவருக்குமான பாடம் என்
-
நவ்காம் காவல் நிலையத்தில் நடந்தது தற்செயலான வெடி விபத்துதான்: ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. விளக்கம்
15 Nov 2025ஸ்ரீநகர், காஷ்மீரில் நடந்தது தற்செயலான வெடி விபத்து தான் என்று ஜம்மு காஷ்மீர் டி.ஜி.பி. நலின் பிரபாத் தெரிவித்துள்ளார்.
-
20 ஆயிரம் தமிழர்களுக்கான வேலை வாய்ப்பு நழுவி விட்டது: அண்ணாமலை
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பு நழுவி விட்டது என்று அண்ணாமலை தெரிவித்தார்.
-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: டி.டி.வி.தினகரன்
15 Nov 2025சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் போட்டி என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
-
இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
15 Nov 2025சென்னை, இந்தியாவில் தொழில்மயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
-
டெல்லி கார் வெடிப்பு வழக்கு; மேலும் ஒரு டாக்டர் பஞ்சாப்பில் கைது
15 Nov 2025சண்டிகார் : டெல்லியில் கார் வெடி வழக்கில் பஞ்சாபில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து
15 Nov 2025அபுஜா, நைஜீரியாவில் தொடக்க பள்ளிகளில் தாய்மொழி கட்டாய கல்வி சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
பொங்கல் பண்டிகை: சில நிமிடங்களில் விற்று தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
15 Nov 2025சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
காவல் நிலைய குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு: மத்திய அரசு
15 Nov 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு எதிர்பாராத நிகழ்வு என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவு இணை செயலாளர்
-
பீகார் தேர்தல் இறுதி நிலவரம்
15 Nov 2025பாட்னா : பீகார் இறுதி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஜினியின் 173-ம் படத்தில் இருந்து இயக்கனர் சுந்தர் சி விலகல் ஏன்..? கமல்ஹாசன் பதில்
15 Nov 2025சென்னை, ரஜினிக்கு கதை பிடிக்கும் வரையில் கதை கேட்டுக்கொண்டே இருப்போம் என அவரது 173-வது திரைப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
ஐ.நா. பொதுச்செயலாளருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
15 Nov 2025வாஷிங்டன், ஐ.நா. பொதுச்செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
-
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது
15 Nov 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வின் 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
-
கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு
15 Nov 2025திருப்போரூர், கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
-
1 கோடி பேர் நோயால் பாதிப்பு: தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
15 Nov 2025சென்னை, தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பை தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



