பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் உள்ள 'வர்த்தகப் பயிலுனர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.18 - தன்னிச்சையான செயல்பாடு காரணமாக தங்கபாலுவின் பதவி பறிபோகிறது. தமிழக காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல், அடிதடி, அறிக்கை போர் என்று எல்லாம் நடக்கும். தமிழக காங்கிரஸ் வரலாற்றிலேயே நகைப்புக்குரிய ஒரு தலைவர் இருந்தது கிடையாது. காமராஜர் முதல் பல்வேறு தலைவர்கள் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் தனது மனைவிக்கு ஓட்டு இருப்பது கூட தெரியாத ஒரு தலைவர் தமிழ்நாட்டில் உள்ளார் என்றால் அது தங்கபாலுவாகத்தான் இருக்க முடியும்.
கூட்டணி கட்சி என்ற முறையில் நட்பு பாராட்டுவது நாகரீகம். ஆனால், கூட்டணி கட்சியான தி.மு.க.விலேயே ஒரு கோஷ்டி தலைவராக மாறியது தான் தங்கபாலுவின் சாதனை.
5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஒட்டி உறவாடி மக்களைப்பற்றி கவலைப்படாத தங்கபாலு, தி.மு.க. தலைமையின் மூலம் தனது தலைவர் பதவியை காப்பாற்றிக்கொள்வதில் குறியாக இருந்தார். தமிழக காங்கிரசின் எந்த கோஷ்டியும் தங்கபாலுவை கண்டு கொண்டதில்லை. ஆனாலும் தங்கபாலுதான் தலைவர்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தங்கபாலு தனது செல்வாக்கை பயன்படுத்தி கூட்டணி பற்றி பேசப்பட்ட ஐவர் குழுவில் பிரச்சனைக்குரிய இளங்கோவன் போன்றோரை இடம்பெறாமல் செய்தார்.
பின்பு, தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை இழுபறி நடந்தபோது தி.மு.க.வை ஊழல்கட்சி என்று விமர்சித்தார். மறுநாள் சேர்ந்தவுடன் வெற்றி கூட்டணி என்றார். கூட்டணியில் 63 தொகுதிகள் முடிவானதும் வேட்பாளர் ஒதுக்குவதில் ஐவர் குழுவை கலந்தாலோசிக்காமல் தனியொருவராக 63 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு செய்தார். இவரது பட்டியலை நிராகரிக்க வேண்டுமென்று சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் உள்ளிட்டோர் சோனியாவிடம் முறையிட்டனர்.
ஆனாலும், தங்கபாலுவின் பட்டியல் வெளியானது. அதன்பிறகு தான் தமிழக காங்கிரஸில் வெட்டு, குத்து அதிகமானது. போட்டி வேட்பாளர்கள், மோதல், மறியல், கொடும்பாவி எரிப்பு என தொடர்ந்தது. தேர்தல் முழுதும் இந்த போராட்டங்கள் தொடர்ந்து, வாக்குப்பதிவு வரையும் கூட நீடித்தது. இதனால் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் தனது கட்சிக்குள் உள்ள போட்டி வேட்பாளர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது.
தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே போய், தனது மனைவியை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக்கினார். டம்மி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவரான தன் பெயரையே முன்மொழிந்துகொண்டார். மனைவியின் படிவத்தை சரிவர நிரப்பாததால் தள்ளுபடி ஆகி, டம்மி வேட்பாளர் தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளரானார். இதே போல் கிருஷ்ணகிரி மற்றும் விளவங்கோடு தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குழப்பம். ஒரு தலைவர் சட்டசபை தேர்தலில் நிற்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் சிதம்பரம், வாசன், இளங்கோவனின் பங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அதிரடியாக கராத்தே தியாகராஜன் உள்பட 18 பேர்களை காங்கிரஸ் கட்சியை விட்டு தங்கபாலு நீக்கினார்.
இது கட்சி விரோத செயல். நீக்குவதற்கு தங்கபாலுக்கு உரிமை இல்லை என்று அனைவரும் குரல் கொடுத்தனர். நீக்கப்பட்டவர்களில் வாசன், சிதம்பரம், இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்கள் இருந்தனர். ஐவர்குழுவில் இருந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கட்சி விதிகளை காரணம் காட்டி தங்கபாலு கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். யாரையும் நீக்க தங்கபாலுக்கு உரிமையில்லை. வேட்பாளர் தேர்விலும் தங்கபாலு தன்னிச்சையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.
தமிழக காங்கிரஸ் தி.மு.க.விடம் 63 இடங்களை போராடி பெற்றது. அதை ஒழுங்காக அறுவடை செய்யாமல் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடி செய்ததால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 8 இடங்கள் பெற்றால் பெரிய விஷயம் என்ற செய்தி சோனியாகாந்தி வரை எடுத்து சொல்லப்பட்டு இருப்பதால் தங்கபாலுவை நீக்கும் முடிவுக்கு சோனியா வந்துவிட்டாராம்.
தேர்தல் முடிவும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அமையும் என்பதால் இனியும் தி.மு.க.வை கூட்டணியில் வைத்துக்கொள்ள சோனியா விரும்பவில்லை. ஆகவே, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு வரலாம். அது ஜி.கே.வாசன் அல்லது சுதர்சன நாச்சியப்பனாக இருக்கலாம் என்ற கருத்து காங்கிரசுக்குள் ஓடுகிறது.
எது எப்படி இருந்தாலும் தங்கபாலுவுக்கு கல்தா உறுதி என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சு பலமாக உள்ளது. உடனே அறிவிப்பு வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 2 days 29 sec ago |
பொரி உப்புமா![]() 6 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
முதல் ஒருநாள் போட்டி: மே.இ. தீவுகள் வெற்றி
18 Aug 2022நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 19-08-2022.
19 Aug 2022 -
பெரியாறு அணையில் மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை
18 Aug 2022சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
-
டாஸ்மாக் பார் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது சென்னை ஐகோர்ட் உத்தரவு
18 Aug 2022சென்னை: டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதில்
18 Aug 2022ஹராரே: எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் என்று தெரிவித்துள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என்
-
அறிமுகமாக 14 ஆண்டுகள் நிறைவு: நேசிப்பவர்கள் இருந்தாலும் தனிமையை உணர்ந்துள்ளேன் மனம் திறந்தார் விராட் கோலி
18 Aug 2022மும்பை: ஒரு அறை முழுக்க என்னை நேசிப்பவர்கள் இருந்த போதும், தனியாக இருப்பது போன்று உணர்ந்ததாக கோலி தெரிவித்துள்ளார்.
-
பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். கேவியட் மனு
18 Aug 2022சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி பஸ் மும்பையில் அறிமுகம்
18 Aug 2022மும்பை: நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வை
-
எனக்கு வேலை வேண்டும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளியின் பரிதாப நிலை
18 Aug 2022மும்பை: பார்த்தவர்களால் வினோத் காம்ப்ளியை மறக்க முடியாது. குறுகிய காலத்தில் சச்சினுக்கு இணையான புகழை அடைந்து வந்த வேகத்தில் காணாமல் போனவர்.
-
தவான் - ஷூப்மான் கில் அபாரம்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
18 Aug 2022ஹராரே: முதல் ஒருநாள் போட்டியில் தவான் - ஷூப்மான் கில் அபார ஆட்டத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
-
24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் : அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
19 Aug 2022சென்னை : வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
76-வது மாநில நீச்சல் போட்டி: முதல் நாளில் 4 புதிய சாதனை
18 Aug 2022சென்னை: மாநில நீச்சல் போட்டியின் முதல் நாளில் 4 புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார்.
-
வரி வருவாய் குறைஞ்சு போனதால் மதுபான விற்பனையை அதிகரிக்க போட்டி நடத்தும் ஜப்பான் அரசு
19 Aug 2022ஜப்பானில் பெற்றோர்களை விட இளம் தலைமுறையினர் குறைவாக குடிப்பதால், அவர்களிடம் மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் ஐடியாக்களை தெரிவிக்கும் போட்டியினை அந்நாட்டின் தேசிய வரி முகம
-
பொதுக்குழு உறுப்பினர்கள் வர ஆரம்பித்துள்ளனர்: கூட்டு தலைமை இருந்தால்தான் அ.தி.மு.க. வலுவானதாக மாறும் : வைத்திலிங்கம் பேட்டி
19 Aug 2022அ.தி.மு.க.வுக்கு கூட்டுத் தலைமைதான் வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தற்போது கிடையாது.
-
அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே முடிவு: கிரீன்கார்டு கோரி விண்ணப்பம்
19 Aug 2022கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.
-
வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது தென் கொரிய அதிபர் மீது கிம் சகோதரி விமர்சனம்
19 Aug 2022தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ஜெலன்ஸ்கி உறுதி
19 Aug 2022படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்: கவர்னர் ரவி
19 Aug 2022நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நாகூரில் நேற்று நடந்த ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள
-
வைரலான பார்ட்டி வீடியோவால் சர்ச்சை: பதவி விலக பின்லாந்து பிரதமருக்கு நெருக்கடி
19 Aug 2022பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் பங்கேற்ற பார்ட்டி வீடியோ வைரலான நிலையில், தான் போதைப்பொருள் எடுத்து கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
-
பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு
19 Aug 2022சூடானிலிருந்து எத்தியோப்பியா சென்று கொண்டிருந்த விமானத்தில் விமானிகள் தூங்கியதால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
-
வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது : தென்கொரிய அதிபர் மீது கிம் சகோதரி விமர்சனம்
19 Aug 2022சியோல் : தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே முடிவு : கிரீன் கார்டு கோரி விண்ணப்பம்
19 Aug 2022வாஷிங்டன் : கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.
-
22-ம் தேதி சென்னை தினம்: இன்று முதல் 2 நாள் கொண்டாட்டம் : கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் அறிவிப்பு
19 Aug 2022சென்னை : வரும் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி இன்று மற்றும் நாளை கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 
-
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு பாசி மணி அணிவித்த நரிக்குறவ மக்கள்
19 Aug 2022புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைக்கு நரிக்குறவ மக்கள் பாசி மணி அணிவித்தனர்.
-
மாநகர பஸ்களில் விளம்பரம் மூலம் வருவாயைப் பெருக்க அரசு திட்டம்
19 Aug 2022தமிழகத்தில் அரசு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் விளம்பரம் செய்து வருவாயைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.