எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.17 - ஸ்டெர்லைட் ஆலையில் நச்சு வாயு வெளியேறியது தொடர்பாக கொண்டு வரப்பட்ட வெட்டுத் தீர்மானத்துக்கு பதில் அளித்த அமைச்சர் எம்.சி.சம்பத், ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 55-ன் கீழ் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், க.பாலகிருஷ்ணன், கே.பாலபாரதி, ம.கலை அரசு, அ.கணேஷ்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆகியோர்களால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பதில் அறிக்கை வருமாறு:-
இத்தொழிற்சாலைக்கு எதிராக நேஷனல் டிரஸ்ட் ஃபார் க்ளீன் என்விரான்மெண்ட் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இத்தொழிற்சாலையின் கடந்த கால நிகழ்வுகளையும், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் 2005 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் மண் மற்றும் நிலத்தடி நீரில் கன உலோகங்கள் இருப்பது அறியப்பட்டதை கருத்தில் கொண்டும் மற்றும் இதர ஆவணங்களை பரிசீலித்தும் கடந்த 28.9.2010 அன்று மேற்படி தொழிற்சாலையை மூடுவதற்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இடைக்கால தடையுத்தரவு பெற்று தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டுஅதன் அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. மேற்படிஅறிக்கையில் குறிப்பிடப்பட்ட மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இத்தொழிற்சாலையை அறிவுறுத்தியது. மீண்டும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து கடந்த செப்டம்பர் 2012-ல் தொழிற்சாலையை ஆய்வு செய்து, அதன் அறிக்கையினை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க இதுவரை தொழிற்சாலையின் மீது வாரியம் மேற்கொண்ட கண்காணிப்பு பற்றிய ஆவணங்களை கடந்த 6.12.2012 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் 2.4.2013 அன்று வழங்கிய இறுதி தீர்ப்பில் 2010-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை உயர்நீதிமன்றம் மூட உத்தரவிட்ட தீர்ப்பை ரத்து செய்து, ஆலையை செயல்பட அனுமதி வழங்கியதுடன் இவ்வாலை சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக ரூ.100 கோடி அபராதமும் விதித்துள்ளது.
இதற்கிடையில் 23.3.2013 அன்று காலை 7 மணியளவில் தூத்துக்குடி கீழசண்முகாபுரம், புதுகாலனி பொதுமக்களிடமிருந்து கண் எரிச்சல் மற்றும் தொண்டை அடைப்பு முதலிய பாதிப்புகள் இருப்பதாக தொலைபேசி மூலம் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் புகார் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சிப்காட் வளாகத்தினுள் செயல்படும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., தொழிற்சாலையை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வாரிய உறுப்பினர் செயலரும் 24.3.2013 அன்று தொழிற்சாலையை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது கீழ்கண்ட விவரங்கள் அறியப்பட்டது.
தாமிர உருக்காலையின் குளிரூட்டும் குழாய்களில் ஏற்பட்ட கசிவினை சரி செய்ய 21.3.2013 அன்று உருக்காலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 23.3.2013 அன்று அதிகாலை துவக்கப்பட்டது. இத்தருணத்தில் (23.3.2013 அதிகாலை 2.15 ஏ.எம்.- 2.45 ஏ.எம்.) சென்னை வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றின் தொடர் கண்காணிப்பு மையத்தில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கந்தக அமில பிரிவின் புகைப் போக்கியிலிருந்து வெளியேறும் கந்தக டை ஆக்ஸைடின் அளவு 2103.23 மி.கி.- க.மீ. இருந்து 2939.55 மி.கி.- க.மீ. வரை பதிவாகியிருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட தர அளவு 1250 மி.கி.- க.மீ. விட அதிகமாக இருப்பது அறியப்பட்டது.
மீண்டும் 23.3.2013 அன்று காலை 9.15 ஏ.எம்.- 11.15 ஏ.எம். மணியளவில் இதன் அளவு 1767.65 மி.கி.- க.மீ. இருந்து 2941.12. மி.கி.- க.மீ. வரை பதிவாகியிருந்தது நிர்ணயிக்கப்பட்ட தர அளவை விட கந்தக டை ஆக்ஸைடு அளவு அதிகமாக பதிவாகியிருந்ததை அறிந்து இதனை உடனடியாக சரி செய்யும்படி வாரிய தொடர் காற்று தர கண்காணிப்பு மையத்திலிருந்து மின் அஞ்சல் மூலம் தொழிற்சாலைக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சாலையிலிருந்து எவ்வித பதிலும் பெறப்படவில்லை.
23.3.2013 அன்று காலை மீளவிட்டான், அண்ணாநகர், பிரையன்நகர், ஜார்ஜ் ரோடு, திவிபுரம் ஆகிய பகுதி பொதுமக்கள் கண் எரிச்சல், தொடர் இருமல் மற்றும் தொண்டை அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக தூத்துக்குடிமாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் இப்புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை கேட்டுக்கொண்டார்.
சஐஞநஏ (சஹசிடுச்டூஹங் ஐடூஙூசிடுசிசீசிடீ ச்க் ஞஷஷசீஙீஹசிடுச்டூஹங் நஹக்டீசிநீ ஹடூக்ஷ ஏடீஹங்சிகீ) பரிந்துரைகளின் படி சுற்றுப்புறக் காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடின் அளவு 5ஙீஙீஙி (13000 ஙீகிறங3) -க்கு மிகைப்படும்போது மனிதனுக்கு கண் எரிச்சல், தொடர் இருமல் மற்றும் தொண்டை அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனினும் மேற்குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிகளில் காற்றுத் தொடர் கண்காணிப்பு கருவி இல்லாமையால் சுற்றுப்புற காற்றில் கந்தக டை ஆக்ஸைடின் அளவை துல்லியமாக அறிய இயலவில்லை. மேலும் 23.3.2013 அன்று காலை அப்பகுதிகளில் மேற்படி புகாரின்படி சுற்றுப்புற காற்றில் கலந்துள்ள கந்தக டை ஆக்ஸைடின் அளவு குறைந்தபட்சம் 5ஙீஙீஙி (13000 ஙீகிறங3) அளவிற்கு அதிகமாக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
23.3.2013 அன்று நடந்த நிகழ்வுகளை அறிவுறுத்தி மூன்று நாட்களுக்குள் அதற்கான விளக்கம் அளிக்குமாறு மாசு கட்டுப்பாடு வாரியம் முகாந்திரக் கடிதம் அனுப்பியது. இதற்கு தொழிற்சாலை 27.3.2013 நாளிட்ட கடிதத்தில் விளக்கம் அளித்தது. அதில் 23.3.2013 அன்று கந்தக அமில நிலையத்தின் புகைப் போக்கியின் வழியாக வெளியேறும் கந்தக டை ஆக்ஸைடு வாயுவின் அளவை தொடர்ந்து அளவிடும் கருவியினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் அத்தருணத்தில் மேற்படி கருவியின் அளவீடுகள் பராமரிப்பு நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. தொழிற்சாலை தமது தாமிர உருக்காலையை பராமரிப்பதற்காக தற்காலிகமாக நிறுத்துவதையும் மீண்டும் அதனை இயக்குவதையும் வாரியத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். ஆனால் தொழிற்சாலை அவ்வாறு தெரிவிக்கவில்லை. வாரிய தொடர் கண்காணிப்பு மையத்தில் பதிவான அளவினை பரிசீலனை செய்யும்போது 23.3.2013 அன்று காலை தொழிற்சாலையின் கந்தக அமிலப் பிரிவிலிருந்து கந்தக டை ஆக்ஸைடு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக காற்றில் கலக்கப்பட்டது உறுதி செய்யப்படுகிறது. இதுவே, பொதுமக்களின் புகாருக்கு காரணமாக இருந்திருக்கிறது.
தொழிற்சாலையின் விளக்கத்தை நிராகரித்து 29.3.2013 அன்று வாரியம் பிரிவு 31 ஏ காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981-ன் (ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்.,) தாமிர உருக்காலை பிரிவினை மூடுவதற்கும் மற்றும் மின் இணைப்பை துண்டிப்பதற்கும் உத்தரவிட்டது. அதன்படி 30.3.2013 அன்று தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேற்படி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 29.3.2013 நாளிட்ட மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பினை துண்டிப்பதற்கான உத்தரவு ஆகியவற்றை எதிர்த்து ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு 12.4.2013 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் விசாரணைக்குப் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது இடைக்கால உத்தரவில், இந்நேர்வு தொடர்பாக இரண்டு பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பதற்கும், இக்குழுவில் ஒரு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும் எனவும் இவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து ஒருவரும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரிஸ் (இந்தியா) லிட்., சார்பாக ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டது. மேலும், இந்த நிபுணர் குழுவில் இடம் பெறும் பெயர்கள் 18.4.2013 அன்று வெளியிடப்படும் எனவும் இக்குழு ஆலையை ஆய்வு செய்வதற்காக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஆலையை இயக்கி காட்ட வேண்டும் எனவும் இந்த ஆய்விற்குப் பின் நிபுணர் குழுவின் அறிக்கையை 29.4.2013 அன்று தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .