Idhayam Matrimony

முகாமில் இலங்கை தமிழர்கள் 10 நாட்களாக உண்ணாவிரதம்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

பூந்தமல்லி, ஏப். 28 - பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். nullந்தமல்லி கரையான் சாவடியில் இலங்கை அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. செங்கல்பட்டு அகதிகள் முகாமில் இருந்து 9 இலங்கை தமிழர்கள் இங்கு மாற்றப்பட்டனர். 

இவர்கள் அனைவரும் தங்களை விடுதலை செய்யகோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதையடுத்து, 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அமலன், ஜெயமோகன், கங்காதரன், சந்திரகுமார் ஆகிய 4 இலங்கை தமிழர் கள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை. இவர்கள் 4 பேரையும் தேர்தல் முடிந்த பின்னர் விடுவிப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தேர்தல் முடிந்து 2 வாரங்கள் ஆகியும் இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து கடந்த 10 நாட்களாக அமலன், ஜெயமோகன், கங்காதரன், சந்திரகுமார் ஆகிய 4 இலங்கை தமிழர்களும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். 

இவர்களின் உடல் நிலை குறித்து டாக்டர்களும், அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள். அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago