எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.5 - தேசிய உணவு பாதுகாப்பு சட்ட முன் வடிவில் ஜனநாயக ரீதியாக விவாதத்தின் அடிப்படையில் மாற்றங்களை கொண்டு வராமல் மத்திய அரசு அவசர சட்டத்தின் மூலம் கொண்டுவருவதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதி முக்கியத்துவம் வாய்ந்த தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல விதமான கருத்துகளையும், மாற்றங்களையும், ஐயங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து இருக்கின்ற சூழ்நிலையில், இந்தச் சட்ட முன்வடிவினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து, விவாதத்தின் அடிப்படையில் மாற்றங்களை செய்து நடவடிக்கை எடுக்காமல், குறுக்கு வழியில் அவசரச் சட்டத்தின் மூலம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உணவுப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருப்பது ஏழை மக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.
அவசரச் சட்டம் என்பது அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டிய ஒன்று. இந்த அவசரச் சட்டத்தின் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகளின் முன்பு விவாதிக்கப்பட்டு கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில் உள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்க முயல்வது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.
கடந்த சில ஆண்டுகளாகவே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பொதுமக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளது. இதன் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள மத்திய காங்கிரஸ் அரசு, மக்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது.
உண்மையான உணவுப் பாதுகாப்பை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல், தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் ஓர் அரசியல் சித்து விளையாட்டாகவே அவசரச் சட்டத்தின் மூலம் இந்த சட்டத்தை நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முயல்வதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதற்காக வரைவு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா 2011 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட போதே, இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதப் பிரதமருக்கு 20.12.2011 அன்று நான் ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.
அந்தக் கடிதத்தில், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைவருக்கும் பயன்படக்கூடிய பொது விநியோகத் திட்டம் தமிழகத்தில் பல்லாண்டு காலமாக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்றும் இந்தத் திட்டத்தின் மூலம் விலையில்லாமல் அரிசி வழங்கப்படுவதோடு கோதுமை, சர்க்கரை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன என்றும் இந்தத் திட்டம் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது என்றும் இந்த நியாய விலைக் கடைகள் தனியாரால் நடத்தப்படவில்லை என்றும் இந்தத் திட்டத்திற்கென ஆண்டுடொன்றுக்கு 5,000 கோடி ரூபாய் மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என்றும் இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்றும் தெரிவித்து இருந்தேன்.
அதே சமயத்தில், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மசோதா குழப்பமும், தவறுகளும் நிறைந்ததாகவும் உள்ளது என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தினால் தமிழக அரசுக்கு 1,800 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் அதே சமயத்தில் இதனை ஈ்டுகட்ட மத்திய அரசிடமிருந்து உத்தரவாதம் ஏதுமில்லை என்றும், இந்தத் திட்டத்தில் முன்னுரிமை குடும்பங்கள் பொதுக் குடும்பங்கள் என இரு வகைகளாக மக்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு வகையான மானிய விலையில் வெவ்வேறு அளவில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல என்றும்; 75 விழுக்காடு கிராமப்புற மக்களும்,
50 விழுக்காடு நகர்ப்புற மக்களும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் என்ற வரைமுறை வகுக்கப்பட்டு இருப்பதற்கு எந்த விதமான காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும், அந்தக் கடிதத்தில் நான் சுட்டிக் காட்டி இருந்தேன். இது மட்டுமல்லாமல், கூட்டாட்சி அமைப்பில் மக்கள் நலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் அளிப்பதே சிறந்த வழி என்றும்; தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வடிவு என்பது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும் என்றும் சுட்டிக் காட்டி, தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தென்.
இது மட்டுமல்லாமல், 27.12.2012 மற்றும் 10.6.2013 ஆகிய நாட்களில் பாரதப் பிரதமர் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து தமிழகத்தின் எதிர்ப்பினை நான் தெரிவித்துள்ளென்.
இதே பொன்று, பல்வேறு மாநில அரசுகள் இந்த தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போதைய வடிவில் உள்ள உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே பொது விநியோகத் திட்டத்தில் அனைத்திந்திய அளவில்
56 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படும் போது, தற்போது இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் 62 மில்லியன் டன் உணவு தானியங்களே அளிக்கப்படும். வெறும் 6 மில்லியன் டன் கூடுதல் உணவுப் பொருட்களை அளித்து, உணவுப் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும்?
அகில இந்திய அளவில் பொது விநியோகத் திட்டத்தை சீரமைக்காமலும், ரயில் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் உடனுக்குடன் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிபடுத்தாமலும், உணவு தானிய பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை அதிகரிக்காமலும் நிறைவேற்றப்படும் இந்த மசோதா ஏழை, எளிய மக்களுக்கு எவ்வித உணவுப் பாதுகாப்பையும் அளிக்காது. ஏழை, எளிய மக்களுக்கு என வழங்கப்படும் சலுகைகள் ஏனையோரால் பறிக்கப்பட்டு உண்மையான பயனாளிகள் பயனடைய மாட்டார்கள் என்பதே இது போன்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோகத் திட்டத்தின் அனைத்திந்திய வரலாறு. எனவே தான், தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், உணவுப் பாதுகாப்புக்கு என உணவு தானியங்கள் வழங்கப்படவில்லை எனில், உணவு பாதுகாப்புப் படி வழங்கப்படும் என்பது பொது விநியோகத் திட்டத்தையே நாளடைவில் செயலிழிக்க செய்வதற்கான தந்திரமோ என எண்ணத் தோன்றுகிறது. உணவு தானியங்கள் வழங்கப்படவில்லை எனில் உணவுப் பாதுகாப்புப் படி வழங்கப்படும் என்று கூறுவதன் மூலம், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இயலாது என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது. உணவு தானியம் விநியோகிக்கப்படாத ஒரு திட்டம் உணவுப் பாதுகாப்புத் திட்டமே அல்ல.
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்துடன் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை ஒப்பிட்டுப் பார்த்தால், இது தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா அல்ல தேசிய உணவுப் பாதுகாப்பின்மை மசோதா என்பது தெள்ளத் தெளிவாகும்.
எனவே, இப்படிப்பட்ட குழப்பமான, பிழைகள் நிறைந்த, மக்களுக்குப் பயனளிக்காத ஒரு வெத்து வேட்டு மசோதாவை அவசரச் சட்டத்தின்மூலம் நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது வேதனைக்குரிய செயலாகும். இந்தச் செய்தி நாட்டு மக்களை, குறிப்பாக தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ள இந்தத் தருணத்தில், உணவு பாதுகாப்பு மசோதாவை அவசரச் சட்டத்தின் மூலம் செயல்படுத்துவது ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கை ஆகும் என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த உணவுப் பாதுகாப்பு மசோதாவினை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றாமல், நாடாளுமன்றத்திலேயே சட்டமாக இயற்ற முடிவெடுத்த நிலையில், 3.7.2013 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர சட்டம் கொண்டுவர எடுக்கப்பட்ட முடிவே ஒரு கபட நாடகம் தான்.
இந்த அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றக் கூட்டம் துவங்கிய ஆறு வாரங்களுக்குள் நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைப் பொறுத்த வரையில், எவ்வித திருத்தமும் மேற்கொள்ளாமல் இந்தச் சட்டத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட வேண்டும் என்பது தான் எண்ணம். ஒரு வேளை இந்த அவசரச் சட்டத்திற்கான ஒப்புதல் பெற முடியாமல் போனால், அவசரச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுபவர்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானவர்கள் என்ற எண்ணத்தை தோற்றுவித்து தப்பித்துக் கொண்டு விடலாம் என்பது தான் மத்திய காங்கிரஸ் அரசின் எண்ணம் போலும்! மொத்தத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி தனக்கு பாதுகாப்பு தேட நினைக்கிறதே தவிர, உணவுப் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய நினைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளதாலும், எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவதாலும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டிற்கு இந்தத் திட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு தற்போது வழங்கி வரும் அரிசியின் அளவை குறைக்கக் கூடாது என்றும் தமிழக மக்கள் சார்பில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
அவசர கதியில் அவசரச் சட்டத்தின்மூலம் செயல்படுத்தப்பட உள்ள உணவுப் பாதுகாப்பு மசோதா ``பதறிய காரியம் சிதறும்'' என்ற பழ மொழிக்கேற்பவே அமையும் என்பதையும், மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்துள்ள மத்திய அரசின் ஊழல்களையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மூடி மறைப்பதற்காக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ள இந்த முயற்சி படுதோல்வியில் முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.