எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் ஜூலை.19 - சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு நேற்று மாலை நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கடந்த தேர்தலில் சி.பெருமாள்(62) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியாகும். இவரது மனைவி சரோஜா(52). இவர்களுக்கு ராஜேஷ்கண்ணா(37),தினேஷ் கண்ணா(36),சதீஷ்(30),கார்த்தி(28) ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வாழப்பாடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பெருமாள் எம்.எல்.ஏ.விற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் காலை 6.15 மணியளவில் இறந்து போனார். அவர் இறந்த செய்தி அறிந்த நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எஸ்.கே.செல்வம்,எம்.கே.செல்வராஜ்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன், மற்றும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர் பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அதிமுகவினரும், ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவின் தீவிர விசுவாசியான அவர் இறந்த செய்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இறுதி அஞ்சலி செலுத்த பாப்பநாயக்கன்பட்டிக்கு வருவதாக தெரிவித்தார். அதன்படி நேற்று மாலை 3 மணியளவில் கொடநாட்டில் இருந்துஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் சுமார் 80 கி.மீ.தூரம் உள்ள பாப்பநாயக்கன்பட்டிக்கு கார் மூலம் 6.05 மணிக்கு வந்தார். எம்.எல்.ஏ.பெருமாளின் வீட்டிற்கு சென்று அங்கு கண்ணாடி பேழையில் வைக்கப்படிருந்த அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அழுது கொண்டிருந்த எம்.எல்.ஏ.வின் மனைவி சரோஜா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.பெருமாளின் மனைவி சரோஜா முதல்வர் ஜெயலலிதாவை கண்டதும் கதறி அழுது அவரது காலில் விழுந்து அழுது புரண்டார். அவரை தூக்கி கையை பிடித்து அரவணைத்த முதல்வர் அவருக்கு ஆறுமுதல் கூறினார்.அப்போது அவர் எனது குடும்பத்திற்கு இனி யாருமே இல்லை என்ன? செய்வேன் என்று கூறி கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா எதற்காகவும் கவலை படவேண்டாம் நான் இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆறுதல் கூறினார்.பின்னர் அங்கு கூடியிருந்த அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிர கணக்கான மக்களை பார்த்து கும்பிட்ட முதல்வர் காரில் ஏறி சேலம், சங்ககிரி வழியாக கொடநாட்டிற்கு காரில் சென்றார்.
இறந்து போன பெருமாள் எம்.எல்.ஏ.வின் உடலுக்கு சபாநாயகர் தனபால்,துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி,சி.பி.வைத்திலிங்கம்,எடப்பாடி கே.பழனிசாமி,பழனியப்பன்,தாமோதரன்,கே.வி.ராமலிங்கம்,எஸ்.பி.வேலுமணி,செந்தில் பாலாஜி,பா.வளர்மதி,பா.மோகன், சுப்பிரமணியம்,சின்னையா,எம்.சி.சம்பத்,வைகை செல்வன்,தங்கமணி,தோப்பு வெங்கடாஜலம்,ஆனந்தன்,பூனாட்சி, அரசு கொறடா மனோகரன், எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எம்.கே.செல்வராஜ்,எஸ்.கே.செல்வம்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன்,மாதேஸ்வரன், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.சேந்தமங்கலம் சாந்தி, அரூர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.டில்லி பாபு,சேலம் கலெக்டர் மகரபூஷணன்,மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சதீஷ்குமார்,சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட ஏராளமான அதிமுகவினரும்,பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்க்கை குறிப்பு
மரணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது தன்னை அதில் இணைத்துக் கொண்டவர் ஆத்தூர் மற்றும் வாழப்பாடி பகுதியில் போஸ்ட் ஆபீசில் கிளர்க்காக வாழ்க்கை தொடங்கி அவர் 1984 ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் கிளர்க்கா பணியாற்றி உள்ளார்.பின்னர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு 1984 ல் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது தோல்வியை தழுவினார்.1989 ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவின் ஆத்தூர் வட்டார செயலாளராக இருந்த அவர் எம்.எல்.ஏ.ஆன பின்பு 1989 ல் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் ஆனார். பின்னர் 1991 ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனார். 2001 தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.மீண்டும் 2011 ம் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்ட பெருமாள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார்.தற்போது ஏற்காடு தொகுதியின் செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் ராஜேஷ் கண்ணா சேலம் புறநகர் மாவட்ட பாசறை துணைச் செயலாளராக உள்ளார். இதில் 3 மகன்களுக்கு திருமணம் நடைப்பெற்றுவிட்டது.
ஜெ.வின் தீவிர விசுவாசி
மறைந்த ஏற்காடு எம்.எல்.ஏ.பெருமாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாவார்.1989 ல் இவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது ஏற்காடு தொகுதியில்தான் வாக்கு எண்ணிக்கை முதலில் முடிக்கப்பட்டு இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதே போல் 1991 மற்றும் 2011 லும் இவருக்கு முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பளித்தார். தொகுதி மக்களிடையே நல்ல பெயர் பெற்றுள்ள பஸ்சில்தான் சென்று வருவாராம். இந்த முறை வெற்றி பெற்ற பின்புதான் லோன் மூலம் கார் வாங்கினார். அந்த காரின் நெம்பர் கூட டி.என்.77 ஜெ.7777 ஆகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: வாலிபர் சுட்டுப்பிடிப்பு : 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: வாலிபர் சுட்டுப்பிடிப்பு
17 Jun 2025கடலூர் : கடலூர் அருகே போலீசாரை தாக்க முயன்ற வாலிபரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
-
பெரியகுளம் மாணவர் விடுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
17 Jun 2025சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டம் பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-06-2025.
18 Jun 2025 -
நன்றி அறிவிப்பு சொன்ன மெட்ராஸ் மேட்னி படக்குழு
18 Jun 2025குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ வரிசையில் மிகச்சாதாரணமான மனிதர்களையும் குடும்ப அமைப்பின் வலிமையையும் வெளிக்காட்டுகிற இன்னொரு வெற்றிப்படமாக மாறியிருக்கிறது ‘மெட்ராஸ் மே
-
அதர்வா நடிக்கும் டி என் ஏ.
18 Jun 2025ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் டி என் ஏ' ( DNA) இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு வி
-
படப்பிடிப்பை தொடங்கி வைத்த புதுச்சேரி முதலமைச்சர்
18 Jun 2025விதா ஸ்டுடியோ P.R விஜய் தயாரிக்கும் படம் பிட்பாக்கெட் இப்படத்தில் P. R.
-
சிறிய நாடுகளுக்கான டெஸ்ட் போட்டி 4 நாட்களாக குறைப்பு : ஐ.சி.சி. தலைவா் ஜெய்ஷா ஆதரவு
18 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளை நடத்த செலவு அதிகமாவதாக டெஸ்டை நடத்தும் சிறிய நாடுகள் தயக்கம் காட்டும் நிலையில், சிறிய நாடுகளுக்கான டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி
-
சேலத்தில் அன்புமணி தலைமையில் இன்று கட்சி கூட்டம்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி : எம்.எல்.ஏ. அருளும் சிகிச்சைக்காக அனுமதி
18 Jun 2025சென்னை : அன்புமணி தலைமையில் சேலத்தில் இன்று கட்சிக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், பா.ம.க., முக்கிய தலைவர்கள் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.
-
‘சமரசத்துக்கு வாய்ப்பில்லை - போர் தொடங்கியது’ : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் கமேனி எச்சரிக்கை
18 Jun 2025தெஹ்ரான் : ஈரான் - இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது.
-
ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு: மேலும் தள்ளிப்போன சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்
18 Jun 2025புதுடெல்லி : ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பால் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணம் மேலும் தள்ளிப்போகியுள்ளது.
-
உமாபதி தயாரிக்கும் ஹும் திரைப்படம்
18 Jun 2025ஃபர்ஸ்ட் லைன்' உமாபதி தயாரிப்பில், எஸ்.
-
நாசா- இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜூலை 14-ல் ஏவ திட்டம்
18 Jun 2025பெங்களூர் : நாசா- இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ம் தேதி ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள்: 'டாப் 10'-ல் ஆஸ்திரேலியாயை சேர்ந்த 3 நகரங்கள்
18 Jun 2025புதுடில்லி : 2025ம் ஆண்டில், உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் இடத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் பிடித்துள்ளது.
-
ஜூலை 4 ல் வெளியாகும் பறந்து போ
18 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கியிருக்கும் படம் பறந்து போ.
-
கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Jun 2025சென்னை : கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது
-
கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா சென்றார் பிரதமர் மோடி
18 Jun 2025ஒட்டாவா : கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா சென்றார் பிரதமர் மோடி. அங்கு ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பென்கொவிக்கை சந்திக்கிறார்.
-
டாஸ்மாக் கடைகள் மீது மக்கள் புகார் தந்தால் 30 நாட்களில் நடவடிக்கை: தமிழக அரசு உத்தரவு
18 Jun 2025சென்னை : டாஸ்மாக் கடைகள் மீது மக்கள் புகார் தந்தால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
மாணவி ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும் : அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
18 Jun 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த புதுக்கோட்டை மாணவி ஞானதர்ஷினியின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்று அமைச்சர் உறுதி அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ள
-
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வி.சி.க. வெளியேறும்: திருமாவளவன்
18 Jun 2025சென்னை : தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.
-
அரசுக்கு அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
18 Jun 2025சென்னை, அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அமர்நாத் யாத்திரை பகுதிகளில் பலூன்கள், டிரோன்கள் பறக்க தடை
18 Jun 2025ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து வழிகளும் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
18 Jun 2025தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
வருமான வரித்துறை சோதனை குறித்து நடிகர் ஆர்யா விளக்கம்
18 Jun 2025சென்னை, சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடந்தது.
-
கிருஷ்ணகிரியில் 'மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. சார்பாக நாளை உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jun 2025சென்னை, 'மா' சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில், வரும் வெள்ளி
-
மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை
18 Jun 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,000-க்கு விற்பனையானது.