எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் ஜூலை.19 - சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அதிமுகவின் தீவிர விசுவாசியான அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு நேற்று மாலை நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக கடந்த தேர்தலில் சி.பெருமாள்(62) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியாகும். இவரது மனைவி சரோஜா(52). இவர்களுக்கு ராஜேஷ்கண்ணா(37),தினேஷ் கண்ணா(36),சதீஷ்(30),கார்த்தி(28) ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.நேற்று அதிகாலை 4 மணிக்கு வாழப்பாடியில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பெருமாள் எம்.எல்.ஏ.விற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை சேலம் 5 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் காலை 6.15 மணியளவில் இறந்து போனார். அவர் இறந்த செய்தி அறிந்த நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எஸ்.கே.செல்வம்,எம்.கே.செல்வராஜ்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன், மற்றும் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினர் பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பாப்பநாயக்கன்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அதிமுகவினரும், ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுகவின் தீவிர விசுவாசியான அவர் இறந்த செய்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இறுதி அஞ்சலி செலுத்த பாப்பநாயக்கன்பட்டிக்கு வருவதாக தெரிவித்தார். அதன்படி நேற்று மாலை 3 மணியளவில் கொடநாட்டில் இருந்துஹெலிகாப்டரில் புறப்பட்ட அவர் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் சுமார் 80 கி.மீ.தூரம் உள்ள பாப்பநாயக்கன்பட்டிக்கு கார் மூலம் 6.05 மணிக்கு வந்தார். எம்.எல்.ஏ.பெருமாளின் வீட்டிற்கு சென்று அங்கு கண்ணாடி பேழையில் வைக்கப்படிருந்த அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கு அழுது கொண்டிருந்த எம்.எல்.ஏ.வின் மனைவி சரோஜா மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.பெருமாளின் மனைவி சரோஜா முதல்வர் ஜெயலலிதாவை கண்டதும் கதறி அழுது அவரது காலில் விழுந்து அழுது புரண்டார். அவரை தூக்கி கையை பிடித்து அரவணைத்த முதல்வர் அவருக்கு ஆறுமுதல் கூறினார்.அப்போது அவர் எனது குடும்பத்திற்கு இனி யாருமே இல்லை என்ன? செய்வேன் என்று கூறி கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா எதற்காகவும் கவலை படவேண்டாம் நான் இருக்கிறேன். நான் பார்த்துக்கொள்கிறேன் என ஆறுதல் கூறினார்.பின்னர் அங்கு கூடியிருந்த அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.பின்னர் அங்கு கூடியிருந்த பல்லாயிர கணக்கான மக்களை பார்த்து கும்பிட்ட முதல்வர் காரில் ஏறி சேலம், சங்ககிரி வழியாக கொடநாட்டிற்கு காரில் சென்றார்.
இறந்து போன பெருமாள் எம்.எல்.ஏ.வின் உடலுக்கு சபாநாயகர் தனபால்,துணை சபா நாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்,நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி,சி.பி.வைத்திலிங்கம்,எடப்பாடி கே.பழனிசாமி,பழனியப்பன்,தாமோதரன்,கே.வி.ராமலிங்கம்,எஸ்.பி.வேலுமணி,செந்தில் பாலாஜி,பா.வளர்மதி,பா.மோகன், சுப்பிரமணியம்,சின்னையா,எம்.சி.சம்பத்,வைகை செல்வன்,தங்கமணி,தோப்பு வெங்கடாஜலம்,ஆனந்தன்,பூனாட்சி, அரசு கொறடா மனோகரன், எம்.எல்.ஏ.க்கள் விஜயலட்சுமி பழனிசாமி,எம்.கே.செல்வராஜ்,எஸ்.கே.செல்வம்,ஜி.வெங்கடாஜலம்,பல்பாக்கி கிருஷ்ணன்,மாதேஸ்வரன், தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.சேந்தமங்கலம் சாந்தி, அரூர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.டில்லி பாபு,சேலம் கலெக்டர் மகரபூஷணன்,மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சதீஷ்குமார்,சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட ஏராளமான அதிமுகவினரும்,பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த தோட்டத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
வாழ்க்கை குறிப்பு
மரணமடைந்த அதிமுக எம்.எல்.ஏ.சி.பெருமாள் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது தன்னை அதில் இணைத்துக் கொண்டவர் ஆத்தூர் மற்றும் வாழப்பாடி பகுதியில் போஸ்ட் ஆபீசில் கிளர்க்காக வாழ்க்கை தொடங்கி அவர் 1984 ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகள் கிளர்க்கா பணியாற்றி உள்ளார்.பின்னர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு 1984 ல் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். அப்போது தோல்வியை தழுவினார்.1989 ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவின் ஆத்தூர் வட்டார செயலாளராக இருந்த அவர் எம்.எல்.ஏ.ஆன பின்பு 1989 ல் சேலம் மாவட்ட துணைச் செயலாளர் ஆனார். பின்னர் 1991 ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனார். 2001 தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.மீண்டும் 2011 ம் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் போட்டியிட்ட பெருமாள் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆனார்.தற்போது ஏற்காடு தொகுதியின் செயலாளராகவும் இருந்து வந்தார். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் ராஜேஷ் கண்ணா சேலம் புறநகர் மாவட்ட பாசறை துணைச் செயலாளராக உள்ளார். இதில் 3 மகன்களுக்கு திருமணம் நடைப்பெற்றுவிட்டது.
ஜெ.வின் தீவிர விசுவாசி
மறைந்த ஏற்காடு எம்.எல்.ஏ.பெருமாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாவார்.1989 ல் இவர் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட போது ஏற்காடு தொகுதியில்தான் வாக்கு எண்ணிக்கை முதலில் முடிக்கப்பட்டு இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதே போல் 1991 மற்றும் 2011 லும் இவருக்கு முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பளித்தார். தொகுதி மக்களிடையே நல்ல பெயர் பெற்றுள்ள பஸ்சில்தான் சென்று வருவாராம். இந்த முறை வெற்றி பெற்ற பின்புதான் லோன் மூலம் கார் வாங்கினார். அந்த காரின் நெம்பர் கூட டி.என்.77 ஜெ.7777 ஆகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...