முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து வாகன விபத்து: தொழிலாளர்கள் 18 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பாங்காக், அக். 9 - வடக்கு தாய்லாந்தில் கட்டுமான தொழிலாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் ஆறு பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். 

பாங்காக்கில் இருந்து உபான் ரட்சதானியை நோக்கி 23 கட்டிட தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பூரிராம் மாகாணம் பான்டான் மாவட்டம் அருகே அந்த வாகனம் சாலையில் இருந்து விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர், ஆறு பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் படுகாயமடைந்தனர். குடிபோதையில் இருந்த வாகன ஓட்டுனர் தூங்கி விட்டதையடுத்து விபத்து நேரிட்டது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் லாவேஸை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்