எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, டிச. 25 - கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்த விபரம் வருமாறு:_
தி.மு.க. தலைவர் கருணாநிதி:_
மண்ணில் மனிதநேயம் தழைக்க, "அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர் வாதம் செய்; உன்னை வெறுப்பவர்க்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று" என அன்பையும், பொறுமையையும் போதித்த இயேசு பெருமான் பிறந்த டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இயேசு நாதரை எண்ணும்போதே, அவரது கோட்பாடுகளைப் பரப்ப வந்த அயல்நாட்டுக் குருமார்களால் தமிழும், தமிழகமும் பெற்ற பெருமையை எவரும் மறந்திட இயலாது.
இத்தாலி நாட்டில் இருந்து வந்து தமிழ்த்துறவியாக வாழ்ந்து, "தத்துவ போதகர்" எனத் தம் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மொழியின் உரைநடைக்கு உயிர் தந்த இராபர்ட் டி நொபிலி!
அதே இத்தாலியில் இருந்து வந்து கிருத்தவத் தொண்டுகளுடன் ஏசுநாதரின் வரலாறு கூறும், "தேம்பாவணி"; தமிழுக்கு அகராதிக் கலையை அறிமுகப்படுத்திய, "சதுரகராதி" உள்ளிட்ட பல்வேறு நூல்களையும் படைத்த வீரமாமுனிவர்!
ஜெர்மானிய நாட்டிலிருந்து வந்து தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக் கூடத்தையும், பொறையாற்றில் காகித ஆலையையும் நிறுவி "தமிழ் இலத்தீன் அகராதி", "பைபிள்" தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களையும் படைத்த சீகன் பால்க் அய்யர்!
இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்து சமயப் பணிகள் ஆற்றியதுடன், "திருக்குறள்", "திருவாசகம்", "நாலடியார்" ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு; தம் தாயகம் திரும்பிய பின் வெளியுலகுக்குத் தமிழின் மேன்மையைப் புலப்படுத்தி, "நான் ஒரு தமிழ் மாணவன்" எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யு.போப்!
அயர்லாந்து நாட்டில் பிறந்து, தமிழகம் வந்து நெல்லைச் சீமையில் தங்கி, "திருநெல்வேலி சரித்திரம்" எனும் ஆங்கில நூலுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட திராவிட மொழிகள் அனைத்தையும் ஆய்வு செய்து, "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் அரிய நூலையும் படைத்து; தமிழ் மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டியதுடன் தமிழைச் செம்மொழி என முதன்முதல் பறைசாற்றிய மாமேதை கால்டுவெல்! போன்றோர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய மகத்தான தொண்டுகள் எல்லாம் என் நெஞ்சில் கிளர்ந்து எழுகின்றன.
அதே வேளையில், தம் உன்னதமான தொண்டுகளால் தமிழுக்கு வளம் சேர்த்த இம்மாமேதைகளில் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் 1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின் போது சிலை எடுத்துச் சிறப்பித்ததையும், திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் தங்கிச் சமயப் பணிகள் ஆற்றிய கால்டுவெல் அவர்கள் வாடிநந்த இல்லத்தைப் புதுப்பித்து, 2011 பிப்ரவரி திங்களில் நினைவு இல்லமாகத் திறந்து வைத்துப் பெருமைப்படுத்தியதையும்; கிருத்துவ சமயம், தொண்டு சமயம் என்பதைத் தம் வாழ்க்கை மூலம் புலப்படுத்திய கருணையின் வடிவம் அன்னை தெரசா அவர்களைப் போற்றி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கட்டப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்திற்கு "அன்னை தெரசா மாளி+கா எனப் பெயர் சூட்டிப் பெருமைப் படுத்தியதையும் நினைவு கூர்ந்து கிறிஸ்துவ சமுதாய உடன் பிறப்புகள் அனைவருக்கும் எனது கிருஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மத்திய மந்திரி ஜி.கே.வாசன்:_
அன்பு பாராட்டுதல், அனைவரையும் நேசித்தல், ஏழைகளுக்கு உதவுதல், எல்லோரையும் ஒன்றாகப் பாவித்தல், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகிய உயர் பண்புகளைத்தான் ஏசுபிரான் உலக மக்களுக்கு போதித்தார். எதனைப் போத்திதாரோ அதன்படியே வாழ்ந்து காட்டிய புனிதர் அவர். அவரது தூய்மையான எண்ணங்களும், மக்கள் துயர் துடைக்கும் செயல்களும் என்றும் உலகுக்குப் பாடமாக அமைகின்றன. அவர் காட்டிய அன்பு வழியில் நடந்தால், அனைவரையும் ஒன்றாக நேசிக்கும் பண்பை வளர்த்தால், உலகில் அமைதியும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உயர்வும் நின்று நிலைக்கும். அகவே அவர் காட்டிய அன்பு வழியில் அற வழியில் நடக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்நாளில் "மத நல்லிணக்கம் வளர வேண்டும். மனித நேயம் மலர வேண்டும். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்" என்பதே நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:_
பகைவனையும் மன்னிக்கும் உயர்ந்த பண்பு வேண்டும் என்றும், மனிதருள் அனைவரும் சரிநிகர்தான் என்றும் அன்பும், பாசமும் தான் மகிழ்ச்சிக்கு அடித்தளம் என்றும் அவர் போதித்த மலைப் பிரசங்கம் உலகுக்கு ஒளியாய் விவிலிய புனித வேத நூலில் இடம் பெற்று திகழ்கின்றன.
அவ்வாறு அவர் அருளிய அற்புதமான அப்போதனைகளை நாம் மனதில் ஏற்பதன் மூலம் நாட்டில் வன்முறை ஒழிந்து, அமைதி, சமாதானம் மேலோங்கிடவும், அனைவரிடையேயும் அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி பெருகிடவும் சாதி, மத, இன பிரிவுகள் மறைந்து நல்லிணக்கம் மேம்படவும் வாழ்ந்து உயர்வோம்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:_
உயர்ந்த லட்சியங்களுக்காகப் போராடுகின்றவர்களுக்கு, சோதனைகளும் தோல்விகளும் அடுக்கடுக்காக வந்தாலும், அவற்றை நெஞ்சுறுதியோடு தாங்கிக்கொண்டு, நம்பிக்கை ஊட்டுகின்ற விதத்தில், விவிலியத்தில் சொல்லப்படுகின்ற வார்த்தைகளான, "அவர் நியாயத்துக்கு வெற்றி கிடைக்கப் பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார் என்ற சொற்களை, மந்திரச் சொற்களாக மனதில் கருதி, தமிழ்நாட்டின் மறு மலர்ச்சிக்கும், தமிழ் <ழ விடியலுக்கும் உறுதி எடுப்போமாக!
அன்பையும், கனிவையும் பரிமாறும் நேசர்களாகிய கிறிஸ்துவப் பெருமக்களுக்கு, ம.தி.மு.க. சார்பில் மனமகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் :_
கிறிஸ்துமஸ் விழாவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், உற்றார், உறவினர்களோடும், நண்பர்களோடும் இணைந்தும் கொண்டாடிட வேண்டுகிறேன்.
உலகில் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி, எல்லோரும் இன்புற்றிருக்க அன்பை போதித்தவர் இயேசு கிறிஸ்து. அவர் தன் உயிரையே மக்களுக்காக தியாகம் செய்யும் அளவுக்கு மக்களை நேசித்தார். கொள்கை வடிவிலான வாழ்க்கையை ஏழை மக்களாலும் வாழ முடியும் என்பதை இந்த சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டவே அவர், தான் பிறப்பதற்கு மாட்டுக் கொட்டிலை தேர்வு செய்தார். ஏழை எளிய மக்கள் என்றில்லாது அனைத்து கிறிஸ்துவ மக்களும் அவர் போதனையை ஏற்று கடைப்பிடித்து வருகிறார்கள்.
மக்கள் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் கிறிஸ்துமஸை கொண்டாடுவது ஏழை எளிய மக்களுக்கு கஷ்டம்தான் என்றாலும், வருடத்தில் ஒருமுறை கொண்டாடுகிற இவ்விழாவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், உற்றார், உறவினர்களோடும், நண்பர்களோடும் இணைந்தும் கொண்டாடிட வேண்டுகிறேன் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் ஆர்.சரத்குமார்:_
இது பரிசுப் பொருட்களை வழங்கும் நிகழ்வு மட்டுமல்ல. அனைவரையும் மகிழவைப்பது நமது வாழ்தலின் மூலம் இறைவனது இருப்பை நிரூபிப்பது. அன்பெனும் இழையால் உலக மக்களை உறுதியாக இணைத்திருக்கும் அதிசயத்தை, அற்புதத்தை நிகழ்த்திக் காட்டிய இயேசுபிரான் அவதரித்த நன்னாள் இது.
வெறுப்பைக் காட்டாமல் விட்டுக் கொடுத்தல் மூலமாக சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் காணலாம். சமாதானத்தையும், சந்தோசத்தையும் பேணலாம் என்று மனித இனம் பின்பற்றி வாழ வேண்டிய அழியாத தத்துவ உண்மையைப் போதித்த இயேசுவைப் போற்றிக் கொண்டாடும் நன்னாள். இந்த நன்னாளில் என் அன்பான நல்வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்:_
"சூரியன் அழிந்தாலும் பூமி அழிந்தாலும் என் வார்த்தைகள் அழியாமல் வல்லமையோடு இருக்கும்" என்று இயேசு பெருமான் தன் கருத்தின் மீதும் சொற்களின் மீதும் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அதனடிப்படையில் இன்று உலகமே போற்றும் மகானாய் இயேசு பெருமான் விளங்குகிறார். அவருடைய சொற்கள் மனித சமூகத்தை வழிநடத்துகின்றன.
இயேசுபெருமானின் வழிகாட்டுதலின்படி அன்பையும் அறத்தையும் ஏற்போம்! மனிதநேயத்தைப் போற்றுவோம்! தனி மனித அமைதி, சமூக அமைதி மற்றும் பொது அமைதியை நிலைநாட்டுவோம்! வெறுப்பை விதைத்து பகையை மூட்டி ஆதாயம் தேடும் தற்குறிகளைக் காலம் அம்பலப்படுத்தும் எனும் நம்பிக்கையோடு இயேசு பெருமான் காட்டிய வழியில் மனிதநேயத்தை மேம்படுத்த உறுதியேற்போம்! என யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அறைகூவல் விடுப்பதோடு, அவர் பிறந்த இந்த நாளில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2025.
16 Oct 2025 -
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 Oct 2025சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடியில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
16 Oct 2025அமராவதி:ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரண்: மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
16 Oct 2025ராஞ்சி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.