முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவிக்கு ரூ.900 கோடி நஷ்ட ஈடு கொடுத்த நடிகர் அர்னால்டு

ஞாயிற்றுக்கிழமை, 29 மே 2011      சினிமா
Image Unavailable

லண்டன், மே.- 29 - பிரபல ஆலிவுட் நடிகர் அர்னால்டு விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ.900 கோடி நஷ்ஈடு வழங்கினார். பிரபல ஆலிவுட் நடிகரும் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருந்த அர்னால்டு மரியாஷ்ரிவர்  என்பவரை 25 ஆண்டுகளுக்கு முன்பு மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அர்னால்டு தனது வீட்டில் பணிபுரிந்த பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார். இதன் காரணமாக குழந்தையும் பிறந்தது. இந்த விவரம் தற்போது மனைவி மரியாரிவருக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது கணவர் அர்னால்டு மீது கோர்ட்டில் வழக்கு தொர்ந்தார். இதனை அடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் அர்னால்டு மரியாவிற்கு ரூ.900 கோடி நஷ்ஈடு வழங்கினார்.
கடந்த 2007ம் ஆண்டில் கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டன் மனைவியை விவாகரத்து செய்த வழக்கில் மனைவி ஜூவானிட்டுக்கு ரூ. 6 கோடியே 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்கினார். இந்த தொகை தாந் விவகாரத்து வழக்கில் அதிக பட்சத் தொகையாக இருந்து வந்தது. அதை முறியடிக்கும் வகையில் அர்னால்டு கொடுத்த ரூ.900 கோடி விளங்குகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்