முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி சட்டபேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 9 - நேற்று முன்தினம் வேலூர் அருகே உள்ள அவலூர் என்ற இடத்தில்  தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 22 பேர் கருகி உயிரிழ்ந்தனர். 2 பேர் காயமடைந்தனர், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவியும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.  இதுகுறித்து ஜெயலலிதா சட்டபேரவையில் கூறியதாவது:- கே.பி.என். டிரைவல்ஸை சேர்ந்த படுக்கை வசதி கொண்ட குளிர் சாதனப் பேருந்து நேற்றிரவு சுமார் 9 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டது. இந்தப் பேருந்தில் 5 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 23 பயணிகள் பயணம் செய்தனர். இந்தப் பேருந்தை நாகராஜன் என்ற ஓட்டுநர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்தப் பேருந்து டவ 01 ஆஏ 9919 என்ற எண்ணில், புதுச்சேரியில் பதியப் பெற்றுள்ளது. இந்தப் பேருந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில், வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், அவலூர் என்னும் இடத்திற்கு அருகே சென்றபோது, அங்கு நின்றிருந்த லாரியைத் தவிர்க்கும் பொருட்டு, பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை திடீரென்று திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து, சிறு பாலத்தின் தடுப்புச் சுவற்றில் மோதி 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழந்தது. இதில் குளிர்சாதன இயந்திரம் வெடித்து, தீ பிடித்து அதனால் இந்தப் பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக் கூடாகிவிட்டது. பேருந்து கவிழ்ந்து தீ பிடித்த இந்த விபத்தில், அப்பேருந்தில் பயணம் செய்த 22 பேர் சம்பவ இடத்திலேயே, தீயில் கருகி உயிரிழந்தனர். கார்த்திகை ராஜன் என்ற ஒரே ஒரு பயணி மற்றும் பேருந்தின் ஓட்டுநர் இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளனர். பேருந்தின் ஓட்டுநர் நாகராஜன் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பயணி கார்த்திகை ராஜன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை மற்றும் அருகில் இருந்த தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சென்று, தீயை அணைத்தன. வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டம்-ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குநர், வடக்கு மண்டல காவல் துறை தலைவர், வேலூர் மாவட்ட காவல் துறை துணைத்தலைவர் மற்றும் காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் காவல் துறை கண்காணிப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் பற்றி நேற்று இரவு அதாவது 7.6.2011 இரவு, எனக்கு தகவல் கிடைத்தவுடன் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோரை உடனடியாக சம்பவ இடத்திஹ்கு அனுப்பி வைத்தேன்.
இந்த கோர விபத்தில் மரணம் அடைந்த 22 நபர்களின் உடல்கள் கருகிய நிலையில் உள்ளதால், அடையாளம் காண இயலவில்லை. 22 நபர்களின் சடலங்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
இப்பேருந்தில் பயணம் செய்தவர்களின் விவரம் கே.பி.என். டிராவல்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் பட்டியிலிருந்து பெறப்பட்டுள்ளது. அதை வைத்துபயணம் செய்தவர்களை கண்டு அறியும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், இந்தப் பேரவை உறுப்பினர்களின் ஆழ்ந்த இரங்கலையும், இந்தப் பேரவையின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இந்தப் பேருந்து விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago