எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை - 9 - திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலில் உள்ள 5 பாதாள அறைகளில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் மற்றும் விலை மதிக்க முடியாத ஆபரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கோவிலில் உள்ள 6 வது பாதாள அறையைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ள நிலையில் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தின் வாரிசு ராஜமார்த்தாண்ட வர்மா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் சார்பில் வாதாடிய பிரபல வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், பத்மநாபசாமி கோவில் ஒரு பொதுச்சொத்து என்றும் இந்த கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள விலை உயர்ந்த ஆபரணங்களை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் உரிமையோ, சொந்தமோ கொண்டாட முடியாது என்றும் வாதிட்டார்.
இந்த ஆபரணங்கள் அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கு சொந்தமானது அல்ல. இவை அனைத்தும் பத்மநாபசாமி கோவிலுக்கு சொந்தமானது என்றும் அவர் வாதிட்டார்.
பத்மநாபசாமி கோவில் நிர்வாகத்தை மாநில அரசின் கடுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்போவதாக கேரள அரசு அறிவித்து இருந்தது. இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, மாநில அரசின் நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது.
இந்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து ராஜமார்த்தாண்ட வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தியது.
பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6-வது பாதாள அறையை திறக்க 7 பேர் கொண்ட ஆய்வு குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தடை விதித்துள்ளனர்.
மேலும் இந்த கோவிலின் புனித தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கோவிலின் அறங்காவல் குழுவுக்கும், கேரள அரசுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விலை மதிக்க முடியாத தங்க வைர, வைடூரிய ஆபரணங்கள் இருப்பதால் இந்த கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கேரள அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த கோவிலில் உள்ள கருவறை மற்றும் அதில் உள்ள தெய்வங்கள் மீதிருக்கும் கண்களைவிட இப்போது அந்த கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆபரண குவியல்கள் மீது அதிகமான கண்கள் இருப்பதால் அந்த கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அவசியம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கோவிலில் உள்ள பாதாள அறைகளில் ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்த வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி கடந்த 6 ம் தேதிய விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இது தொடர்பான விசாரணையை அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் இந்த ஆபரணங்களை கேரள அறங்காவல் துறை செயலாளர் அல்லது அதன் பிரதிநிதி மற்றும் தொல்லியல் ஆய்வுத் துறை மூத்த அதிகாரி ஆகியோர் முன்னிலையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
27 Jan 2026மதுரை: ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
27 Jan 2026சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளத
-
கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
27 Jan 2026சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்
27 Jan 2026டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
27 Jan 2026மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
27 Jan 2026சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
27 Jan 2026தஞ்சாவூர், தி.மு.க.
-
தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்
27 Jan 2026சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
27 Jan 2026சென்னை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
-
கர்நாடகா மாநிலத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: சித்தராமையா, சிவக்குமார் கைது
27 Jan 2026பெங்களூரு: கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jan 2026சென்னை, பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு என்று உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது என்ற
-
தென்தமிழகத்தில் ஐந்து நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
27 Jan 2026சென்னை: தென்தமிழகத்தின் வரும் பிப்.1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கும்படி கோரிக்கை
27 Jan 2026டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தங்களின் தாய் வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி: இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
த.வெ.க.வுடன் ராமதாஸ் கூட்டணியா?
27 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Jan 2026- நெல்லை நகரம் லட்சுபி நரசிங்க பெருமாள் வருசாபிசேகம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தந்த பல்லக்கு, மாலை தங்க குதிரை வாகனம், அம்பாள் தங்க பல்லக்கு
-
இன்றைய ராசிபலன்
27 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
27 Jan 2026


