எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.12 - சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பட அதிபர் சக்சேனா மீது மோசடி புகார் அளித்ததையடுத்து 3 வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனு விசாரணையும் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய விபரம் வருமாறு:- தீராத விளையாட்டு பிள்ளை பட விவகாரத்தில் தனக்கு பாக்கி தரவேண்டியதை திருப்பி கேட்டபோது தன்னை அறையில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணத்தை அபகரித்துக் கொண்டதாக சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது பட அதிபர் செல்வராஜ் புகார் அளித்ததன் பேரில் சக்சேனா கைது செய்யப்பட்டார்.
தன்னை மிரட்டி தாக்கி ரூ.25 லட்சம் பணத்தை பிடிங்கிக் கொண்டதாக சக்சேனா, அய்யப்பன் மற்றும் இன்னொரு கூட்டாளி மீது புகார் அளித்ததையடுத்து மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சக்சேனாவின் பெயில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே தியேட்டர் அதிபர்கள் எந்திரன் படம் விவகாரம் சந்பந்தமாக சன் பிக்சர்ஸ் மீதும், கலாநிதி மாறன் மீதும் புகார் அளித்தனர். சக்சேனா மீது ஏற்கனவே வேளச்சேரியில் பெண்ணை தாக்கிய வழக்கிலும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கிலும் போலீசாரால் எப்.ஐ.ஆர். போடப்பட்டு நிலுவையில் உள்ளது. இதில் பெண்ணை தாக்கிய வழக்கில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகள் அனைத்துமே ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்குகள் ஆகும்.
இதனிடையே சக்சேனா விவகாரம் சம்பந்தமாக தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் அனேகம் பேர் புகார் அளிக்க தயாராகி வருகிறார்களாம். 2 நாள் போலீஸ் விசாரணையில் சக்சேனா பல்வேறு விபரங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸில் தான் ஒரு நிர்வாகி மட்டுமே, எனக்கு மேலே உள்ளவர்கள் சொன்னதை மட்டுமே செய்தேன். மேலுள்ளவர்கள் என்ன சொன்னார்களோ அதை செய்தேன். பட அதிபர்களிடம் பெற்ற பணத்தை மேலே உள்ளவர்களிடம் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு 2 வது முறையாக சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை மாஜிஸ்திரேட் இன்று ஒத்தி வைத்தார். இதனிடையே சக்சேனா மீது மேலும் ஒரு பட அதிபர் ரூ.3.37 கோடி மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியை சேர்ந்தவர் நேமிசந்த் ஜபக். இவர் பட அதிபர். நான் அவனில்லை, படிக்காதவன், பொக்கிஷம் மற்றும் தனுஷ், அனுஷ்கா நடித்த மாப்பிள்ளை படத்தை தயாரித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு மாப்பிள்ளை பட விநியோகத்தின் கோவை விநியோக உரிமையை தன்னிடம் ரூ.3.37 கோடிக்கு விற்ற சக்சேனா பட விநியோகத்தை தராமல் நேரடியாக வெளியிட்டு பணத்தை சுருட்டியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி கேள்வி கேட்ட தன்னை மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து ஆட்சி மாற்றம் வரும் வரை தன்னால் எதுவும் செய்ய முடியாததால் தற்போது புகார் அளிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சக்சேனா மீது கோடம்பாக்கம் போலீசார் 420, 406, 386, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் சக்சேனா விவகாரத்தில் பொல்லாதவன், ஆடுகளம் தயாரிப்பாளர் கதிரேசன், வல்லக்கோட்டை பட தயாரிப்பாளர், முத்துக்கு முத்தாக சேட்டிலைட் ரைட்ஸ் சம்பந்தமாக டைரக்டர் ராசு மதுரவன் ஆகியோர் புகார் அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளரும், விநியோகத் துறையில் ஜாம்பவானுமான முக்கிய புள்ளி ஒருவரும் புகார் அளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் தொடர்கதை போல் சக்சேனா மீது மேலும், மேலும் வழக்குகள் குவிந்து வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...