எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.12 - சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பட அதிபர் சக்சேனா மீது மோசடி புகார் அளித்ததையடுத்து 3 வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனு விசாரணையும் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய விபரம் வருமாறு:- தீராத விளையாட்டு பிள்ளை பட விவகாரத்தில் தனக்கு பாக்கி தரவேண்டியதை திருப்பி கேட்டபோது தன்னை அறையில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணத்தை அபகரித்துக் கொண்டதாக சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது பட அதிபர் செல்வராஜ் புகார் அளித்ததன் பேரில் சக்சேனா கைது செய்யப்பட்டார்.
தன்னை மிரட்டி தாக்கி ரூ.25 லட்சம் பணத்தை பிடிங்கிக் கொண்டதாக சக்சேனா, அய்யப்பன் மற்றும் இன்னொரு கூட்டாளி மீது புகார் அளித்ததையடுத்து மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சக்சேனாவின் பெயில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே தியேட்டர் அதிபர்கள் எந்திரன் படம் விவகாரம் சந்பந்தமாக சன் பிக்சர்ஸ் மீதும், கலாநிதி மாறன் மீதும் புகார் அளித்தனர். சக்சேனா மீது ஏற்கனவே வேளச்சேரியில் பெண்ணை தாக்கிய வழக்கிலும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கிலும் போலீசாரால் எப்.ஐ.ஆர். போடப்பட்டு நிலுவையில் உள்ளது. இதில் பெண்ணை தாக்கிய வழக்கில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகள் அனைத்துமே ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்குகள் ஆகும்.
இதனிடையே சக்சேனா விவகாரம் சம்பந்தமாக தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் அனேகம் பேர் புகார் அளிக்க தயாராகி வருகிறார்களாம். 2 நாள் போலீஸ் விசாரணையில் சக்சேனா பல்வேறு விபரங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸில் தான் ஒரு நிர்வாகி மட்டுமே, எனக்கு மேலே உள்ளவர்கள் சொன்னதை மட்டுமே செய்தேன். மேலுள்ளவர்கள் என்ன சொன்னார்களோ அதை செய்தேன். பட அதிபர்களிடம் பெற்ற பணத்தை மேலே உள்ளவர்களிடம் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஜாமீன் கேட்டு 2 வது முறையாக சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை மாஜிஸ்திரேட் இன்று ஒத்தி வைத்தார். இதனிடையே சக்சேனா மீது மேலும் ஒரு பட அதிபர் ரூ.3.37 கோடி மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியை சேர்ந்தவர் நேமிசந்த் ஜபக். இவர் பட அதிபர். நான் அவனில்லை, படிக்காதவன், பொக்கிஷம் மற்றும் தனுஷ், அனுஷ்கா நடித்த மாப்பிள்ளை படத்தை தயாரித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு மாப்பிள்ளை பட விநியோகத்தின் கோவை விநியோக உரிமையை தன்னிடம் ரூ.3.37 கோடிக்கு விற்ற சக்சேனா பட விநியோகத்தை தராமல் நேரடியாக வெளியிட்டு பணத்தை சுருட்டியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி கேள்வி கேட்ட தன்னை மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து ஆட்சி மாற்றம் வரும் வரை தன்னால் எதுவும் செய்ய முடியாததால் தற்போது புகார் அளிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சக்சேனா மீது கோடம்பாக்கம் போலீசார் 420, 406, 386, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் சக்சேனா விவகாரத்தில் பொல்லாதவன், ஆடுகளம் தயாரிப்பாளர் கதிரேசன், வல்லக்கோட்டை பட தயாரிப்பாளர், முத்துக்கு முத்தாக சேட்டிலைட் ரைட்ஸ் சம்பந்தமாக டைரக்டர் ராசு மதுரவன் ஆகியோர் புகார் அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளரும், விநியோகத் துறையில் ஜாம்பவானுமான முக்கிய புள்ளி ஒருவரும் புகார் அளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் தொடர்கதை போல் சக்சேனா மீது மேலும், மேலும் வழக்குகள் குவிந்து வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்
12 Jul 2025சென்னை : தனியார் பால் நிறுவனத்தில் கருவூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.