எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.21 - தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்ட முன்னாள் கலெக்டர் ஆனந்தகுமார் உள்பட 2 பேர் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:
ஈரோடு மாவட்ட முன்னாள் கலெக்டர் ஆர்.ஆனந்தகுமார் சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (பணிகள்) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் இருந்த தாரேஷ் அகமது மாற்றப்பட்டு இருக்கிறார்.
காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டி.ஆர்.டி.ஏ.) திட்ட அதிகாரியும் கூடுதல் கலெக்டருமான அனீஸ் சாப்ரா சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் இருந்த அனு ஜார்ஜ் மாற்றப்பட்டு உள்ளார்.
நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி முன்னாள் இயக்குனர் என்.மதிவாணன் வேளாண்மைத்துறை இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


