எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, டிச.28 - பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா ஒரு பலவீனமான மசோதா என்றும் இந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்ற நிலை கமிட்டிக்கே திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். கடந்த 22 ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதா மீதான விவாதம் நேற்று லோக்சபையில் துவங்கியது. இந்த விவாதத்தை மத்திய அமைச்சர் நாராயணசாமி துவக்கி வைத்தார்.
அதன் பிறகு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில், இந்த மசோதா பலவீனமான லோக்பால் மசோதா என்றும் இதை வலுவான லோக்பால் மசோதாவாக மாற்ற இந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்ற நிலைக்கமிட்டிக்கே திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.எங்களது திருத்தங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது இந்த மசோதாவை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது இந்த மசோதா குறித்து மேலும் விவாதிக்க இந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கே அனுப்பி வையுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அரசியல் சாசனத்திற்கு விரோதமான இந்த மசோதாவை பொறுமையுடன் நாங்கள் ஏற்க தயாரில்லை என்றும் சுஷ்மா கூறினார்.இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அன்னா ஹசாரேவின் அழுத்தத்தினால் இந்த மசோதா அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


