முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்தது 2012 - தலைவர்கள் ``புத்தாண்டு'' வாழ்த்து

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.1 - புத்தாண்டு பிறந்ததை ஒட்டி கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து விபரம் வருமாறு.  தி.மு.க. தலைவர் கருணாநிதி:​தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும், அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து, தமிழக மக்களின் வேதனைகள் ங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் த்துக் குலுங்கட்டும்​ தொடங்கும் 2012 ஆங்கிலப் புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:​ 

நாட்டில் எவர் ஒருவரும் உணவுக்கு ஏங்குகிற நிலை போக்க இப்புத்தாண்டில் ஒரு புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும். பொதுப் பிரச்சினையில் நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிற நிலை உருவாக வேண்டும். 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:​ 2011​ம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. பொருட்களின் விலை உயர்வு என்று மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தின. தமிழ் நாட்டு மக்கள் இந்த ஆண்டின் இறுதியில் மிகத் தீவிர புயலும் தமிழ் நாட்டையும், புதுச்சேரியையும் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2012​ஆம் ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தென்றலாக வரவேண்டும். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் மக்களுக்கு அமைதியையும், முன் னேற்றத்தையும் தரவேண்டும் என்றும், போனது புயலாக இருக்கட்டும், வருவது தென்றலாக இருக்கட்டும். 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:​ 

புத்துணர்வு அளிக்கும் ஆண்டாக 2012​ ஆம் ஆண்டு அமையட்டும். இதற்காக நாம் மேற்கொண்ட புதிய தீர்மானங்களை நிறைவேற்றி முடிக்க சபதம் ஏற்போம். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாக்க வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விடக்கூடாது. அந்த வகையில் நம் கனவை நிறைவேற்ற புதிதாக போராடுவோம் என்று சபதமேற்கொண்டு செயல்பட கற்றுக் கொள்வோம். 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:​

கணக்கற்ற சோதனைகள் தமிழகத்தையும், தமிழ்க் குலத்தையும் சூழ்ந்திருக்கும் காலகட்டத்தில் புதிய ஆண்டு மலர்கிறது. கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழினம், தென்தமிழ்நாட்டின் வாழ் வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு கேடு செய்ய முனையும் கேரளம், சிங்களக் கடற்படையால் நாளும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் எனப் பல்வேறு துன்ப இடர்களைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு உரிமை காக்க கட்சி, சாதி, மத எல்லைகள் கடந்து தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ள நிலைமை எதிர் காலத்தைப் பற்றிய நம் பிக்கை ஊட்டுகிறது. சமுதாயத்தின் அனைத்துப் பகுதிகளையும் செல்லரிக்கச் செய்வதற்கு ஊழலும் மது அரக்கனும் காரணங்களாகும். இத்தீமைகளிலிருந்து தமிழகம் விடுபட்டு உன்னத நிலை பெறவும் துயர இருளில் தவிக்கும் ஈழததமிழ் மக்கள் விடியலைக் கண்டு தமிழீழம் மலரவும் ஊழலற்ற அரசியல் தமிழகத்தில் வெற்றி காணவும் 2012​ஆம் ஆண்டு பாதை அமைக்கட்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:​

2011​ம் ஆண்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் பல நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வருடத்தின் கடைசி நாட்களில் 'தானே' புயலின் தாக்குதலையும் சமாளித்து 2012​ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். கடந்த காலப்படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு 2012​ம் ஆண்டினைத் திட்டமிட்டு தமிழினத்தின் தலைநிமிர்வுக்கான ஆண்டாக அமைத்துக் கொள் ளும் வகையில் இப்புத் தாண் டினை வரவேற்போம். ஈழத் தமிழர்களின் துயர்களைத் துடைப்பதற்கும், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், சாதிக்கொடுமை உள்ளிட்ட பிற வன்கொடுமைகளிலிருந்து தலித் மற்றும் அனைத்து விளிம்புநிலை மக்களைப் பாதுகாப்பதற்கும் ஏற்றதொரு ஆண்டாக 2012​ம் ஆண்டு அமைந்திட தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து நிற்போம் எனவும் இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் தானே புயல் தாக்குதல் என்னும் துயர நிகழ்வோடு முடிந்திருக்கிறது. கடந்த ஆண்டு பல்வேறு வகையிலும் சோதனைகள் நிறைந்த ஆண்டாக அமைந்தாலும் வரும் புத்தாண்டு அனைத்து சோதனைகளையும் வென்று சாதனை படைக்கும் ஆண்டாக அமையவேண்டும் என்ற என் நல்லெண்ணத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஒருமைபாட்டிற்கும், இறையாண்மைக்கும் எந்த வகையிலும் அச்சுருத்தல் இல்லாத வகையில் மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு, மக்களிடையே ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் மேலோங்க வேண்டும்.

வரும் புத்தாண்டு அனைவருக்கும் நல்ல வளமும் மகிழ்ச்சியும் அளிக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்கிற என் பிரார்த்தனையோடு அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தொரிவித்துக்கொள்கிறேன்.

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன்:​ 

தமிழர்களுக்கு, துன்பச் சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. மக்கள் சக்தியினால் துன்பங்கள் துடைக்கப்பட வேண்டும். இந்த வலிமை மிக்க மக்கள் சக்தி புத்தாண்டில் வெற்றி பெற வேண்டும். 

புதிய திக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:​ ஏழை, எளிய மக்கள் நிம்மதியாக வாழ மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் புத்தாண்டில் கூடங்குளம், முல்லைப் பெரியாறு என்று தமிழகத்தை அச்சுறுத்தும் பிரச்சினைகள் சுமூகமாக தீர வேண்டும். நம்நாட்டு மக்கள் அனைவரும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்னும் உணர்வோடு எதிர் வாரும் காலங்களில் ஒன்று பட்டு அத்தனை சவால்களையும் சந்தித்து வெற்றி காண்போம். 

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:​ 

வருகின்ற புத்தாண்டு (2012) அனைவருக்கும் அனைத்தும் தரும், அன்பு பொழியும் ஆண்டாகவும், மனிதனின் பகுத்தறிவு ஆக்கத்திற்கே தவிர, அழிவுக்கல்ல என்பதை வரலாற்றில் பதிய வைக்கும் சாதனை பொங்கும் ஆண்டாக மனிதநேயம் மலர அடையட்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்