எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,பிப்.21 - கூட்டுக் குழு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது - 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட் தாக்கல்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட ஒரு தீர்வு ஏற்பட்டு விட்ட சூழ்நிலையிலும் பரபரப்பான சூழ்நிலையிலும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. முதல் நாளான இன்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். 25 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28 ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ஜே.பி.சி. எனப்படும் பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க, பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதன் காரணமாக கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரே முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போனது. அந்த கூட்டத் தொடரில் எந்த அலுவல்களுமே நடக்கவில்லை. பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் இந்த பிரச்சினையை எழுப்புவோம். விட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் ஆளும் அரசு அரண்டு போனது.
இதையடுத்து கூட்டுக் குழு விவகாரத்தில் மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்து விட்டது. வரும் புதன் கிழமைக்குள் அதாவது 23 ம் தேதிக்குள் கூட்டுக் குழு அமைப்பது பற்றி மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக 23 ம் தேதியன்று ஜே.பி.சி. பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சல் ஆகியோர் சூசகமாக தெரிவித்து விட்டனர். ஆகவே ஜே.பி.சி. விவகாரத்தில் கிட்டத்தட்ட ஒரு முடிவு ஏற்பட்டு விட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த கூட்டத் தொடரை அமைதியாக, சுமூகமாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நேற்றும் சபாநாயகர் மீராகுமார் ஆலோசனை நடத்தினார். ஏற்கனவே இவர் பலமுறை இது போன்ற ஆலோசனைகளை நடத்தி விட்டார். அப்போது எதிர்க்கட்சிகள் எல்லாம் கூட்டுக் குழு அமைப்பதுதான் ஒரே தீர்வு என்று வலியுறுத்தின. அதன் எதிரொலியாகத்தான் மத்திய அரசும் பணிந்து விட்டது. இந்த சூழலில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது.
இது இந்த ஆண்டில் நடைபெறும் முதலாவது கூட்டத் தொடராகும். பொதுவாக ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளன்று இரு சபைகளும் அடங்கிய கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அந்த மரபுப்படி இன்று பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா உரையாற்றுகிறார். அவர் ஆற்றும் உரைக்கு மத்திய மந்திரி சபை ஏற்கனவே ஒப்புதலும் அளித்து விட்டது. இந்த கூட்டத் தொடர் மார்ச் 14 ம் தேதி வரை ஒரு பகுதியாகவும், ஏப்ரல் 4 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை 2 வது பகுதியாகவும் நடைபெறுகிறது. முதல் பகுதியில் 17 அமர்வுகளும், இரண்டாவது பகுதியில் 12 அமர்வுகளும் இடம் பெறும். வழக்கமாக, பட்ஜெட் கூட்டத் தொடர் நீண்ட நாட்கள் நடக்கும். ஆனால் இப்போது தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட் கூட்டத் தொடரின் நாட்கள் சுருக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 25 ம் தேதியன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வருவதால் ரயில் கட்டணம் உயராது என்று அடித்துச் சொல்லலாம். வரும் 28 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால் நிச்சயம் புது வரிகள் இருக்காது. மேலும் வருமான வரி விலக்கு உச்சவரம்பும் ரூ 2 லட்சமாக உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல சலுகைகளும் இருக்கலாம். இந்த கூட்டத் தொடரில் ஜி.எஸ்.டி. மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2025.
22 Dec 2025 -
ஆட்சி மாற்றத்திற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்: சரத்குமார் பேட்டி
22 Dec 2025நெல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்யபோவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்
22 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையானது.
-
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் படுகொலை சம்பவத்தில் 12 பேர் கைது
22 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவ
-
தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
22 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்
22 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க.
-
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு
22 Dec 2025கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை
-
வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய மலேசிய முன்னாள் பிரதமரின் நஜீப் கோரிக்கையை நிராகரித்தது கோர்ட்
22 Dec 2025கோலாலம்பூர், சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி
22 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
10 அம்ச கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
22 Dec 2025சென்னை, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம
-
பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு
22 Dec 2025சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
-
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
22 Dec 2025சென்னை, மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
-
கேரளாவில் தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
22 Dec 2025கேரளா, கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது வரை வந்துள்ளன: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
22 Dec 2025சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளதா
-
வரும் 30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: குமரியில் உள்ள பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடு
22 Dec 2025கன்னியாகுமரி, கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.
-
பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
அ.தி.மு.க. அவைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
22 Dec 2025சென்னை, அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
விஜய்யுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விமர்சனம்
22 Dec 2025கிருஷ்ணகிரி, விஜய்யுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
723 செவிலியர் காலி பணியிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2025சென்னை, தற்போது 723 செவிலியர் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மா.
-
எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
22 Dec 2025டெல்லி, எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
-
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்: விமானங்களின் சேவை கடும் பாதிப்பு
22 Dec 2025டெல்லி, டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலை காற்று மாசு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
-
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசி., பிரதமர் லக்சன் பேச்சு
22 Dec 2025புதுடெல்லி, இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வா
-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரச்சார வாகனங்கள்
22 Dec 2025சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களுக்கு தயாராகும் பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
-
காசாவில் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு
22 Dec 2025டெல் அவிவ், 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.
-
கிரிக்கெட்டையே விட நினைத்தேன்: 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்தார் ரோகித்
22 Dec 2025மும்பை, ஐ.சி.சி.


