முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதாருடன் பான் எண்ணை இணைக்க 2021 மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு : மத்திய அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பான் - ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. 

கொரோனா பீதியால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், வரி செலுத்துவது, கட்டணம் செலுத்துவது போன்றவற்றுக்கான கால அவகாசத்தையும் மத்திய அரசு நீட்டித்து வருகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த ஆண்டின் மார்ச் 31 வரையிலும், பின்னர் ஜூன் 31 வரையிலும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்காத நபர்களுக்குக் கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது. இதுவரை இவற்றை இணைக்காமல் இருப்பவர்கள் இந்த அவகாசத்தைப் பயன்படுத்தி இணைக்கலாம். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து